For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுத்த சுகுணா பி.எ. பி.எட்., முடித்து டீச்சரான கதை!

தாம்பரம் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சுகுணா, முன்மாதிரியான ஆசிரியாராக ஊக்கமளிக்கும் கதை!

|

சென்னை மக்கள் இந்தப் பெண்ணை இதற்கு முன் எங்காவது பார்த்தது போல இருக்கலாம்...

-- தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்!

ஒருவேளை தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம்களில் இவர்களைப் பார்த்தும் இருக்கலாம்...

கணவனும் மனைவியுமாக தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம்களில் கடலை மிட்டாய் விற்பதுதான் இவர்கள் தொழில். சில நேரங்களில் மிட்டாய் வியாபாரத்தில் பற்றாக்குறை ஏற்படும்போது , கை நீட்டி பிச்சை எடுக்கவும் இந்தப் பெண் தயங்குவதில்லை. காரணம். இந்த பார்வையற்ற தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாடம் எடுக்கும் தாய்!

பாடம் எடுக்கும் தாய்!

பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்துக் கொண்டே சுகுணா தந்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க, தன் தாயின் மீது சாய்ந்தபடி பாடம் படிப்பாள் இந்த மகள்.

திரு.சந்தானம்!

திரு.சந்தானம்!

நீண்ட நாட்களாக இவர்களை அடிக்கடி கவனித்தபடி கடந்து போயிருக்கிறார் ஒரு மனிதர் ; அவர் பெயர் சந்தானம் .அவர் இந்தப் பார்வையற்ற பெண் தன் மகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அழகை கண்டு ஆச்சரியப்பட்டு போய் இருக்கிறார். ஒருநாள் அந்தப் பெண்ணின் அருகே சென்று அழைத்திருக்கிறார் :

உரையாடல்...

உரையாடல்...

"அம்மா.." யாரோ பிச்சை போட அழைக்கிறார்கள் என அந்தப் பெண் திரும்ப...

திரு. சந்தானம்: "நீ எதுவரைக்கும்மா படிச்சிருக்கே..?"

சுகுணா: " பி.ஏ ..பி.எட் .."

(இதை கேட்டு அதிர்ந்து போனார் சந்தானம்...)

திரு. சந்தானம்: "என்னம்மா சொல்றே..?"

சுகுணா: "ஆமா ஸார்... இப்போ எம்.ஏ. கரஸ்பாண்டன்ஸ்ல படிக்கிறேன்.."

திரு. சந்தானம்: " எப்படி இவ்வளவுவரைக்கும் படிச்சே ..?"

சுகுணா: " என் கணவர்தான் ஸார் என்னை படிக்க வைச்சார்."

அன்பான கணவர்!

அன்பான கணவர்!

"2004-ல் கல்யாணம் செய்துகிட்டோம் . ஒரு வருஷத்துல பையனும், ரெண்டு வருஷம் கழிச்சு பொண்ணும் பிறந்தாங்க. கல்யாணம், குழந்தைனு சந்தோஷமான குடும்பம் அமைஞ்சாலும், பணக் கஷ்டம் எங்களை துரத்திட்டே இருந்துச்சு. ரயில்ல மிட்டாய் விக்கிற இந்த வேலையில, சில சமயம் சுத்தமா வியாபாரம் இருக்காது. இந்த சமயத்தில்தான் என் கணவர், ‘இப்படியே போனா நம் வாழ்க்கை மோசமாத்தான் இருக்கும். நீ படிக்கணும்... நம்ம பிள்ளைங்களுக்காகவது நீ படிக்கத்தான் வேணும்'னு சொல்லி, 2009-ல அண்ணாமலை பல்கலைக்கழகத்துல என்னை பி.ஏ., தமிழ் படிக்க சேர்த்து விட்டார். 2012-ல பி.ஏ முடிச்சதோட, 2013-ல பி.எட் முடிச்சேன்."

என்று தனது அன்பு கணவரை பற்றியும், தான் படித்து முடித்தது பற்றியும் திரு. சந்தானத்திடம் கூறி முடித்தார் சகுணா!

தொடர்ந்த உரையாடல்...

தொடர்ந்த உரையாடல்...

திரு.சந்தானம்: "இவ்வளவு படிச்சும் வேலைக்கு போகாம .."

சுகுணா: "என்ன ஸார் செய்யறது..? வேலை கேட்டு போற இடங்களில் எல்லாம், பார்வையில்லைனு திருப்பி அனுப்பிடுவாங்க .."

இதைக் கேள்விப்பட்ட திரு. சந்தானம் தனது நண்பர்களிடம் சுகுணா பற்றிய இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டார். அந்த நல்ல நண்பர்களும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இதை அதிகம் பகிர, சுகுணாவை பற்றிய செய்தி திரு. சுஜீத் என்ற நண்பரை சென்றடைந்தது.

திரு.சுஜித்!

திரு.சுஜித்!

திரு. சுஜீத் அவர்கள், ஒரு நாள் செங்கல்பட்டில் உள்ள மஹிந்திரா வேர்ல்டு ஸ்கூலுக்கு சுகுணாவை அழைத்து சென்றார்.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்: "உன் பெயர் என்னம்மா..?"

சுகுணா: "என் பெயர் சுகுணா !", இவ்வாறு துவங்கியது இண்டர்வ்யூ...

சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் சுகுனாவை இண்டர்வியூ செய்தார் மஹிந்திரா வேர்ல்டு ஸ்கூல் பள்ளியின் தலைமை ஆசிரியை .

வாழ்க்கை திசை மாறியது!

வாழ்க்கை திசை மாறியது!

"பள்ளித் தலைமை ஆசிரியை நிர்மலா மேடம் கேட்ட கேள்விகளுக்கு தன்னம்பிக்கையோட பதில் சொன்னேன். ‘என்ன சம்பளம் வேணும்?'னு கேட்டாங்க. தயங்கினபடியே 15,000னு சொன்னேன். அவங்க 18,500 சம்பளம் நிர்ணயிச்சு, என்னை அவங்க பள்ளியில் தமிழ் ஆசிரியை பணிக்குச் சேர்த்துக்கிட்டாங்க!''

கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது அல்லவா சுகுணாவின் வாழ்க்கை பயணம். சுகுணாவின் இரு குழந்தைகளும் அதே ஸ்கூலில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு வருடம்!

ஒரு வருடம்!

நாம் இங்கே பகிர்ந்திருக்கும் சுகுணாவின் வாழ்க்கை சம்பவங்கள் நடந்து ஒரு வருடம் ஆகியிருக்கும். சுகுணாவுக்கு மட்டும் அல்ல... நம்மை சுற்றி இருக்கும் பலருக்கு ஒரு பார்வைக் கோளாறு இருக்கிறது! அது என்னவெனில், நல்ல விஷயங்கள் நம் கண்களில் அதிகம் படுவது இல்லை. அப்படியே பட்டாலும் அதிகம் யாரும் பகிர்வது இல்லை.

சுகுணாவும், அவரது குடும்பமும் நீண்ட வருடம் நல்ல ஆரோக்கியத்துடன் சந்தோசமாக வாழ வாழ்த்துவோம்! சுகுணாவின் வாழ்க்கையில் ஒளியேற்றிய நண்பர்கள் திரு. சந்தானம் மற்றும் திரு.சுஜீத் போன்ற நல்ல உள்ளங்களுக்கு எத்தனை நன்றிகள் கூறினால் ஈடாகாது.

- மணிகண்டன் அழகர் (முகநூல் பதிவிலிருந்து)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

From Tambaram Railway Station as a Beggar to Working as Teacher in a Prominent School!

From Tambaram Railway Station as a Beggar to Working as Teacher in a Prominent School!
Story first published: Thursday, April 6, 2017, 12:12 [IST]
Desktop Bottom Promotion