Just In
- 1 hr ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 1 hr ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 2 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
Don't Miss
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜாதி வெறியால் ரூ.5, ரூ.10-க்கும் விபச்சாரத்தில் தள்ளப்படும் கிராம பெண்கள்!
பஞ்ச்ராஸ் எனும் ஒரு இனத்தை சேர்ந்த பெண்கள், பரம்பரை, பரம்பரையாக விபச்சாரத்தில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மத்தியப் பிரதேஷ் மாநிலத்தில் வாழ்ந்து வரும் பஞ்ச்ராஸ் எனும் ஒரு இன மக்கள் விபச்சாரத்தை தங்கள் குடும்ப தொழிலாக பரம்பரை, பரம்பரையாக பின்பற்றி வருகின்றனர்.
இந்த முறையில் இருந்து தப்பிக்க முடியாமல், அந்த கிராமத்தில் வசித்து வரும் பெண்கள் பெரும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.
இதில், என்ன சோதனை என்றால், இவர்கள் பற்றிய செய்திகளோ, இதற்கு எதிர்ப்பான குரல்களோ அரசியல் வாதிகள் மத்தியிலோ, அரசு இடங்களிலோ எழுவதும் இல்லை, எழுந்தால் அதை என்ன? ஏது? என்று யாரும் கேட்பதும் இல்லை....
ஆண்கள் தரகர்கள்!
இந்த இனத்தில் பிறந்த பெண்கள் ஒரு வயதை எட்டிய பிறகு பாலியல் தொழிலில் ஈடுப்பட வேண்டும், இவர்களுக்கு தரகர்களாக, இவர்களது சகோதரர்கள் அல்லது பெற்றோரே ஈடுபடுகின்றனர்.
சாலை ஓரங்களில்...
தினமும் மாலையில் பெண்கள் அலங்காரம் செய்து கொண்டு சாலை ஓரங்களில் நிற்க வேண்டும். அங்கு வாழும் பிற சாதி ஆண்கள், அவர்களுக்கு பிடித்த பெண்களை தேர்வு செய்துக் கொள்வார்கள்.
ரூ.5, ரூ.10-க்கும்!
ஒரு சில நேரத்தில் பொருளாதார கஷ்டங்களால், ரூ.5, ரூ.10-க்கும் கூட பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த படுகிறார்கள் என கூறப்படுகிறது,. இதுக்குறித்து தகவல்கள் ஒரு ஆங்கில இதழில் வெளியாகியுள்ளது.
இந்த தலைமுறை இளைஞர்கள்!
தற்போதைய தலைமுறை இளைஞர்கள், தங்கள் சகோதரிகள், தாய்மார்கள் அனுபவிக்கும் இந்த கொடுமையான முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் குரலை உயர்த்தி வருகிறார்கள்.
ஆனால், அப்படி குரலை உசத்தும் ஆண்களை ஊரைவிட்டு ஒத்துக்கி வைத்து விடுகிறார்கள் ஊர் பெரியவர்கள் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றனர்.
ஊரை விட்டு வெளியேறும் மக்கள்!
இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள், இதே ஊரில் இந்த கொடுமைகளை அனுபவிப்பதற்கு பதிலாக, வெளியூர் சென்று வேறு வேலை, தொழில் செய்தி வாழலாம் என ஊரை விட்டு கிளம்பி வருகின்றனர்.
செய்திகள் மறைப்பு!
இவ்வளவு பெரிய கொடுமை ஒரு ஊரில் காலம், காலமாக நடந்துக் கொண்டு வருகிறது. ஆனால், இது குறித்த செய்திகள் பெரிதாக எங்கும் ஒலித்தபாடில்லை.
காரணம் உயர் அதிகாரிகள், ஊர் பெரியவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த இன பெண்களை தங்களுக்கு அடிமை போல நடத்திக் கொள்ள தான் விரும்புகின்றனர் என்பது துயரத்தின் உச்சக்கட்டம்.