Just In
- 2 min ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- 5 min ago புற்றுநோய், இதய நோய் அபாயத்தை குறக்கனுமா? இதோ இந்த பழங்களை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- 3 hrs ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
Don't Miss
- Movies நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!
- News சமாளிக்கவே முடியல.. மிகப் பெரிய பிரச்சினை! முதல்வருக்கு பறந்த கடிதம்.. அன்புமணி கொடுக்கும் ஐடியா!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உலகில் சடங்கு என்ற பெயரில் நடக்கும் பயங்கரமான பெண்ணுறுப்பு சிதைவு நிகழ்வுகள்!
பெண்ணுறுப்பை சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில் சிதைக்கும் சில உலக நிகழ்வுகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
யுனிசெப் ரிபோர்ட் படி, உலகில் 30 -க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த இரண்டு கோடிக்கும் அதிகமான பெண்கள் இது போன்ற பெண்ணுறுப்பு சிதைவு நிகழ்வுகளால் பாதிக்கப்படுகின்றனர் என அறியப்படுகிறது. இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்.
எப்.ஜி.எம்? (FGM - Female Genital Mutilation) என்பது பெண்ணுறுப்பின் ஒரு பகுதி அல்லது அதன் வெளிப்புற பகுதியை அகற்றும் முறையாகும். இது எந்த ஒரு மருத்துவ காரணமும் இல்லாமல் சில நாடுகளில் சடங்கு, சம்பிரதாயம் என்ற முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தோனேசியா, எகிப்து, எதியோப்பியா!
யுனிசெப் அறிக்கையில் இந்தோனேசியா, எகிப்து, எதியோப்பியா நாடுகளை சேர்ந்த பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்த பெண்ணுறுப்பு சிதைவு சம்பவத்தால் பாதிப்படைந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும், சோமாலியா, குனியா, ஜைபூடீ. போன்ற பகுதிகளை சேர்ந்த 15 - 49 வயதுக்குட்பட்ட பெண்கள் தான் அதிகளவில் இந்த பெண்ணுறுப்பு சிதைவால் பாதிப்படைந்துள்ளனர்.
குழந்தைகள்!
இந்த நாடுகளில் ஐந்து வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகளும் கூட இந்த பெண்ணுறுப்பு சிதைவு சடங்கில் உட்படுத்தப்படுகின்றனர். உலகில் இந்த செயற்முறைக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் கூட, பல நாடுகளில் சடங்கு என்ற பெயரில் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
அபாயம் என்ன?
சுகாதாரம், ஆரோக்கியம் காரணமாக இதை செய்கிறோம் என இவர்கள் கூறுகின்றனர். ஆனால், இதனால் அந்த பெண்களுக்கு நோய் தொற்று, வலி, காயங்கள், சில குறைபாடுகள் தான் உண்டாகின்றன. ஒருசிலர் இதனால் இறந்தும் உள்ளனர்.
மனித உரிமை மீறல்!
சர்வதேச அளவில், இந்த பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான ஒரு மனித உரிமை மீறலாக தான் பார்க்கப்படுகிறது. இது ஒரு நபரின் சுகாதாரம், ஆரோக்கியம், உடல் போன்ற தனிப்பட்ட விஷயங்களை பாதிக்கிறது.
வகைகள்!
- Clitoris எனும் பெண்குறி பகுதியை நீக்குதல்.
- Clitoris மற்றும் Labia minora எனும் பகுதியை நீக்குதல்.
- பெண்ணுறுப்பு பகுதியை குறுகிய நிலை ஆக்குதல்.
- பெண்ணுறுப்பு பகுதியை தைப்பது.
பக்கவிளைவுகள்!
பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்யும் பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு, சரும தொற்று, காய்ச்சல், தடித்தல், மரணம் போன்றவை உண்டாகும் அபாயங்கள் இருக்கின்றன.
இதை தடுக்க வேண்டியது அவசியம். யுனிசெப் போன்ற நிறுவனங்கள் என்ன கூறினாலும், ஒவ்வொரு 11 நொடிக்கும் ஒரு பெண் இந்த பெண்ணுறுப்பு சிதைவு சடங்குக்கு உட்படுத்தப்பட்டு பாதிப்படைகிறார் என்பது தான் உண்மை. இது இன்றளவும் 29 நாடுகளில் செயல்முறையில் இருந்து வருகிறது.