Just In
- 35 min ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 1 hr ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 2 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
Don't Miss
- Movies இமான் வருவதற்குள்.. இன்னைக்கும் சிவகார்த்திகேயனை விடாமல் விரட்டிய ப்ளூ சட்டை மாறன்!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயின் உயிரை காக்க தன்னையே ஏலமிட்ட மகள்!
புற்றுநோயால் அவதிப்படும் தாயை காப்பாற்ற தன்னையே 3,50,000 யான்-க்கு (சீன பணம்) விற்க முன்வந்துள்ள சீன பெண்.
கற்பனை செய்து பார்க்கவே சற்று கடினமாக தான் இருக்கும். யாருக்கும் இந்த நிலை வரக் கூடாது என்பது தான் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்யும் விஷயம்.
இன்று யாருக்கு இந்த மனம் வரும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட தாயை காப்பாற்ற வேண்டும் என தன்னையே விற்க துணிந்துள்ளார் இந்த சீன பெண்.
|
பதின் வயது பெண்!
19 வயதே நிரம்பிய இந்த சீனத்து பெண், தாயை புற்றுநோயில் இருந்து காப்பாற்ற சீன பணத்தில் 3,50,000 யான் தேவைப்படுவதால், அதை திரட்ட, தன்னை தானே விற்க முன்வந்த செய்தி பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
|
தவறான வழிநடத்தப்பட்ட பெண்!
புற்று நோய் சிகிச்சைக்கு அதிகளவில் பணம் அவசரமாக தேவைப்படுவதால், தவறாக வழிநடத்தப்பட்ட சாவோ மெங்கியான் எனும் இந்த சீன பெண், தன்னை தானே விற்க முன்வந்துள்ளார்.
ஆன்லைன் ஏலம்!
தன்னை யார் வேண்டுமானால் 40 ஆயிரம் பவுண்டுகள் கொடுத்து ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம். தனது தாயின் மருத்துவ செலவிற்காக என்னை நான் விற்கிறேன் என இவர் ஆன்லைன் ஏலத்தில் விற்க முனைந்தார்.
பரிதாபம்!
"என்னை நல்ல உள்ளம் கொண்டவர்கள் ஏலத்தில் எடுக்கவும். இதனால் என் தாய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவியாக இருக்கும்."
"நீங்கள் பணத்தை கொடுத்த அடுத்து, நாம் உங்களுக்காக எந்த வேலையும் செய்ய தயாராக உள்ளேன்."
"என்னை வாங்கும் நபர் என்ன வேலை செய்ய கூறினாலும், நான் மறுக்காமல் செய்வேன், என் வாக்கை நான் ஏமாற்ற மாட்டேன்."
என பரிதாபமாக கூறியுள்ளார்.
தாராள மனம்!
சமூக ஊடகங்களில் இது பரவியது. இதை கண்ட பலரும் பரிதாபமும், விரக்தியும் அடைந்தனர். கடைசியில், ஒரு தாராள மனம் கொண்ட நபர் ஒருவர், அந்த பெண்ணின் தாயின் மருத்துவ செலவுகளை முழுவதும் ஏற்று மருத்துவமனை பில்களை செலுத்தியதா கூறப்படுகிறது.