Just In
- 12 min ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 55 min ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 2 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
Don't Miss
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பல மதங்களில் அசைவ உணவு, மது, வெங்காயம் மற்றும் பூண்டை சாப்பிட ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது?
ஒருவருடைய மனதில் மாயையின் மூன்று அம்சங்கள் (சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்) பல்வேறு நிலைகளில் வியாபித்திருக்கும். சத்வ குணம் அடக்கம், மன அமைதி, கட்டுப்பாடு மற்றும் தூய்மை ஆகியவற்றை உள்ளடக்கியது. ரஜோ குணம் மாயையிலுள்ள இன்பங்களான தனி மனித விருப்பங்கள் மற்றும் சுகங்களைக் குறிக்கும். தமோ குணம் பெரும்பாலும் கேடான நிலைகளான கோபம், எதிர்புணர்வு, மிருகத்தனம் மற்றும் அழிவு போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. ஒருவர் இறைவனைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டுமென்றால், ரஜோ மற்றும் தமோ குணங்களை அடக்குவதும் சத்வ குணத்தை நிலை நிறுத்துவதும் அவசியமாகிறது.
பல்வேறு உணவுகள் மற்றும் பானங்கள் ஒருவருடைய மனதின் நிலையை பாதித்து அவர்களின் சத்வ, ரஜோ மற்றும் தமோ குணாதிசயங்களை மாற்றியமைக்கக் கூடியவை. எடுத்துக்காட்டாக, மது விழிப்புணர்வைக் குறைத்து, ஆசை போன்ற ரஜோ குணங்களை ஊக்குவிக்கிறது. இதேப்போல் வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ஆகியவை கோபம் போன்ற தமோ குணங்களை அதிகரிக்கக்கூடியவை. இறைவனை துதிப்பவர்கள் ரஜோ அல்லது தமோ குணங்களைக் கொடுக்கவல்ல எந்த உணவையோ அல்லது பானத்தையோ உண்ணாமல் இருப்பது அவசியமாகிறது. ஏனெனில், இறை வழிபாட்டிற்கு இவை தடையை ஏற்படுத்தும்.
ரஜோ மற்றும் தமோ குணங்கள் மேலோங்கி இருக்கும் போது ஒருவருடைய மனமானது அமைதியின்றி காணப்படும். எனவே, இந்த சூழ்நிலைகளில் ஒருவர் இறைவனை துதிக்க இயலாது. சத்வ குணம் நிறைந்திருக்கும் போது, தியானம் மற்றும் நம்பிக்கை மிகுந்த இறைவழிபாடு சாத்தியமாகிறது. எனவே இறைவனின் சீடர்கள், அனைத்து நேரங்களிலும் ரஜோ மற்றும் தமோ குணங்களை தொடர்ந்து அடக்கி, சத்வ நிலையை எய்த முயல வேண்டியது அவசியம்.
ஒருவர் சுவை போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி தூய்மையுடன் இருந்து மனதையும் தூய்மையாக வைக்க வேண்டியது அவசியம். மனம், செயல் மற்றும் பேச்சில் தூய்மையை கடைப்பிடிப்பதன் மூலமே இறைவனை மகிழ்ச்சியுறச் செய்ய முடியும்.