For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐயப்பன்: விஷ்ணு மற்றும் சிவபெருமானின் புதிரான புதல்வன்

By Ashok CR
|

விஷ்ணு பகவான் மற்றும் சிவபெருமானின் புதிரான புதல்வனைப் பற்றி எப்போதாவது நீங்கள் கேள்வி பட்டிருக்கிறீர்களா? விஷ்ணு பகவானின் குழந்தைக்கு தந்தையாக விளங்கியவர் சிவபெருமான். ஆம், இன்றளவும் இந்து மதத்தின் முக்கிய கடவுளாக விளங்குகிறார் அந்த புதல்வன். அந்த கடவுள் வசிக்கும் கோவிலுக்கு இன்றளவும், ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அவரை தரிசிக்கின்றனர். அந்த புனித ஸ்தலம் கேரளாவில் உள்ளது. 41 நாட்கள் விரதம் இருந்து இங்கே லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆம், நீங்கள் யூகித்தது சரியே. நாங்கள் கூறி கொண்டிருப்பது சபரிமலையில் உள்ள ஐயப்ப சாமியைப் பற்றி தான்.

சிவபெருமான் மற்றும் மோகினிக்கு (பெண் வடிவிலான விஷ்ணு பகவான்) பிறந்தவர் தான் ஐயப்ப சாமி. மகிஷி என்ற அரக்கியை அழிக்கவே இவர் அவதரித்தார். பிரம்ம தேவனிடம் வரத்தை பெற்ற பிறகு இந்த அரக்கி பல துன்பங்களை இழைத்து வந்தார். ஐயப்ப சாமியை மணிகண்டன் என்றும் அழைப்பார்கள். அவரை தத்தெடுத்து வளர்த்தவர் ராஜசேகர அரசன்.

ஐயப்ப சாமி திருமணமாகாதவர் என்று நம்பப்படுகிறது. அதனால் கழுத்தை சுற்றி நகையுடன் ஒரு யோகி நிலையில் அமர்ந்திருப்பதை போல் வடிவமைக்கப்பட்டுள்ளார். ஐயப்ப சாமியின் முதன்மையான சன்னிதானம் சபரிமலையில் உள்ளது. இங்கே தான் அவர் வசித்தார் என்று நம்பப்படுகிறது. உலகத்தில் உள்ள மிகப்பெரிய புனித ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். ஐயப்பனுக்கு கடைப்பிடிக்க வேண்டிய விரதம் மற்றும் சடங்குகளை சரிவர கடைப்பிடித்தால், நம் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.

இரண்டு ஆண் கடவுள்களுக்கு பிறந்தவர் ஐயப்பன் என்ற பின்னணியில் உள்ள புதிர் என்னவென்று தெரிய வேண்டாமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lord Ayyappan: The Mystery Son Of Vishnu & Shiva

Lord Ayyappan is said to have been born from the union of Lord Shiva & Lord Vishnu. What is the secret behind this mystery God born out of the union of two male deities? Read on to find out.
Desktop Bottom Promotion