Just In
- 1 hr ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 7 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 9 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 9 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கோபத்தில் தாண்டவமாடும் 5 இந்துக் கடவுள்கள்!!!
தெய்வம் என்றாலே அது அன்பானது, சாந்தமானது என்றுதான் பொதுவாக நினைப்பதுண்டு. ஆனால் இந்து மதத்தில் சில கடவுள்களுக்கு பயங்கரக் கோபம் வரும் என சொல்லப்படுவதுண்டு. இந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.
கோபத்தில் படுபயங்கரமான சாபங்களை அள்ளி வீசும் இந்தக் கடவுள்கள், சாந்தமாக இருக்கும்போது அதே அளவுக்கு வரங்களை வாரிக் கொடுப்பதும் உண்டு. நாம் தீமையான காரியங்களைச் செய்யாமல் இருப்பதன் மூலம் இந்தக் கோபக்காரக் கடவுள்களை அமைதியாக இருக்க வைக்கலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.
கோபத்தில் தாண்டவமாடும் 5 இந்துக் கடவுள்களைப் பற்றிப் பார்ப்போமா?
காளி
பெரும்பான்மையான இந்து மதத்தினர் வணங்கும் பெண் தெய்வம் காளி. கழுத்தைச் சுற்றிலும் மண்டை ஓடுகளுடன் இவள் மிக உக்கிரமாகக் காட்சியளிப்பாள். அழிக்கும் கடவுள் என அழைக்கப்படும் காளிக்குக் கோபம் வந்தால் தவறு செய்பவர்களை ரணகளப்படுத்தி விடுவாள். அதனாலேயே, அவளுடைய கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காக, கொள்ளையர்கள் இத்தெய்வத்தை அதிகம் வணங்குவதுண்டு.
சிவன்
புருஷ லட்சணத்திற்கு இலக்கணமாகக் கூறப்படும் சிவனுக்குக் கோபம் வந்தால் ருத்ர தாண்டவம் ஆடிவிடுவார். மிக உக்கிரமான கோபம் வரும்போது சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து பொசுக்கிவிடுவார். அதே நேரத்தில் அவரை சாந்தப்படுத்துவதும் எளிது என்று சொல்லப்படுவதுண்டு.
துர்க்கை
தன்னுடைய 10 கைகளில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் காட்சி தருவாள் துர்க்கை. அழிவின் சக்தி என்று கூறப்படும் இந்தப் பெண் கடவுள், மகிஷாசுரன் என்னும் அரக்கனை அழித்துத் துவம்சம் செய்ததால் மகிஷாசுர மர்தினி என்று அழைக்கப்படுகிறாள்.
சனி
இந்துக் கடவுள்களிலேயே இந்தக் கடவுளுக்குத்தான் சீக்கிரம் கோபம் வரும். சிலர் ஒரு மாதிரியாக நடந்து கொண்டால், அவர்களுக்கு சனி பிடித்துவிட்டது என்று கூறுவதுண்டு. பெரும்பாலும் நம் அனைவருடைய ஜாதகத்திலும் சனியின் ஆதிக்கம் இருப்பதாக ஜோசியர்கள் சொல்வதும் உண்டு.
ஹனுமான்
சாந்தமே உருவான இந்துக் கடவுளான ராமபிரானின் உண்மையான பக்தனான இவரையும் பலரும் தெய்வமாக வணங்குகின்றனர். கோபத்தின் நிறமான ஆரஞ்சுதான் இவருக்குப் பிடித்த நிறமும்கூட. அநியாயம் செய்பவர்களைக் கண்டால் இவருக்கு பழியாகக் கோபம் வரும். வலிமையின் கடவுளாகவும் ஹனுமான் அழைக்கப்படுகிறார்.