For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்க்கையில் முன்னேற ஆன்மீகப் பயணம் தரும் அற்புதமான அனுபவங்கள்!!!

By Karthikeyan Manickam
|

'மாற்றம் ஒன்றே மாறாதது' என்று சொல்வார்கள். ஆம். அன்றாட வாழ்க்கையிலிருந்து சிறிது விடுபட்டு இருந்தால் தான் எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் நாம் நம் வாழ்க்கையைச் சிறப்பாகக் கொண்டு செல்ல முடியும்.

காலையில் எழுவது, அவதி அவதியாக வேலைக்குக் கிளம்புவது, பார்த்த முகங்களையே பார்ப்பது, செய்த வேலைகளையே செய்வது, பின் பரபரவென்று வீட்டுக்குக் கிளம்புவது, மணிக்கணக்கில் டிராஃபிக்கில் காத்திருப்பது, வீட்டுக்கு வந்தாலும் மனைவி-குழந்தைகளுடன் மீண்டும் வெளியே செல்வது... இப்படி ஆண்டு முழுவதும் நம் வாழ்க்கை ஒரு எந்திர கதியாகவே ஆகிவிட்டது. இதனால் பயங்கரமாக போர் அடிப்பது மட்டுமல்ல, மனமும் உடலும் சோர்ந்து போய் விடுவதும் உண்டு.

இந்தச் சோர்விலிருந்து விடுபட ஆண்டுக்குக் குறைந்தது ஒரு முறையாவது ஹாயாக ஒரு டூர் அடிப்பது நல்லது. அன்றாட வேலைகளை மறந்து தெரியாத முகங்களையும் இடங்களையும் ஓரிரு நாட்கள் பார்த்து விட்டு வந்தால் தெம்பாக இருக்கும். அடுத்த டூர் வரை கொஞ்சம் சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கலாம்.

அதிலும், இந்த டூர் ஒரு ஆன்மீகப் பயணமாக அமைந்து விட்டால் மனம் அமைதியாக இருக்கும். உள்ளத்தில் ஒருவித ஒளி பிறக்கும். இன்ன மதம் தான் என்றில்லை. அனைத்து மதங்களிலும் ஆன்மீகப் பயணத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய ஆன்மீகப் பயணங்கள் நம் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதற்கான 10 காரணங்களைப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Reason’s Why A Spiritual Journey Will Improve Your Entire Life

Here are reasons why a spiritual journey might change your life. Read more to know.
Desktop Bottom Promotion