Just In
- 38 min ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 2 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- 5 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 5 hrs ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- Movies Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்!!!
ஒருவரைப் பார்த்தவுடன் எடை போடுவது என்பது அவர்களின் உடையை வைத்து தான். பின்பு தான், அவரிடம் பேசும் பொழுது அவருடைய எண்ணங்களையும், குணாதியசங்களையும் கண்டறிய முடியும். ஒருவரின் தோற்றம் பார்ப்பவர்களை ஈர்க்கத்தக்கதாய் அமைத்தல் முதல் விஷயம். ஒரு அழகான ஆண்மகன் தளர்வான சட்டையை மற்றும் கால்சட்டையை அணிந்தால் பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்காது. இது இளமை துள்ளும் வாலிபருக்கு மட்டுமின்றி, அனைத்து வயதினருக்கும் பொருந்தும். ஆகவே அன்றாட வாழ்க்கையில் எந்த தோற்றத்தில் காட்சி அளிக்கிறோம் என்பது முதன்மையான விஷயம்.
அழகான பொருத்தமான உடையை அணிதலால், நமக்குள் தன்னம்பிக்கை வளர்ந்து எந்த ஒரு செயலையும் செய்ய முடியும். மேலும் மனதில் எந்த ஒரு தளர்ச்சியுமின்றி வாழ துணை புரியும். எனவே, அதற்கு எந்த வகையான உடைகளை அணியலாம், அது எத்தகையவாறு இருக்க வேண்டும் என்று இங்கே சில டிப்ஸ் உள்ளன. அதனை பின்பற்றி பயனடையுங்கள்.
* உடுத்தும் ஆடையானது நன்கு சுத்தமாக, இஸ்திரி போட்டு, சீராக இருந்தால், விலையுயர்ந்த ஆடை கூட தோற்றுப் போய்விடும். மேலும் தொடர்ந்து ஒரே ஆடையை அணிவதை தவிர்ப்பது நல்லது. என்ன செய்வது வெளியுலகத்திற்காக சிலசமயம் சரிசெய்து கொள்வது சகஜம் தானே.
* எத்தகைய உடையை அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், அதற்கு தகுந்த உடம்பு இருத்தல் அவசியம். அழகான உடல் அமைப்பு இருந்து, நல்ல ஆடைகளை அணிதலால் காண்பவருக்கு சிறந்த பிரதிபலிப்பு ஏற்படும். எனவே, தினசரி 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக வைத்திருங்கள். அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம்மையும், உள் உணர்வுகளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.
* ஒரு நல்ல கைக்கடிகாரம், கருப்பு கண்ணாடிகள் போன்றவற்றை அணிவது, தோற்றத்திற்கு கூடுதல் அழகைத் தரும். மேலும் இத்தகையவற்றை அணியும் ஆடைக்கு ஏற்றவாறு அணிவது அவசியம். குறிப்பாக, காலத்திற்கு ஏற்ப உடை அணிதல், தோற்றத்தை இன்னும் உயர்த்திக் காட்டும். எடுத்துக்காட்டாக, குளிர் காலத்தில் ஒரு நல்ல ஜெர்கின், ஜாக்கெட் அணிதல், வெயில் காலங்களில் சன் கிளாஸ் அணிவது என காலத்துக்கு ஏற்றவாறு அணியவும். இதனால் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் கண்கள் ஏங்கும்.
இங்கு குறிப்பிட்டுள்ள சில யோசனைகள் சிறியது தான். ஆனால் இதை சரியாக கடைப்பிடித்தால், அது பெரிய மாற்றத்தை உருவாக்கும். எனவே, இந்த நுட்பமான விஷயங்களை கவனித்து வந்தால், பார்ப்பவர்களின் மனதில் உங்களின் முகமானது நன்கு பதிவாகிவிடும் என்பதே இதன் ரகசியம். எனவே, உடை பாணியை மாற்றி வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களை பெற்று, சந்தோஷமாக வாழுங்கள்.