காதல் செய்யும் அனைவரும், அந்த அருமையான காதலை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் நாள் காதலர் தினமாக கொண்டாடுகின்றோம். அத்தகைய தினத்தில் அனைத்து காதலர்களும், தம் துணையிடம் காதலை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி, அவர்களை மகிழ்வித்து, சந்தோஷமாக அந்த தினத்தை கொண்டாடுவார்கள். மேலும் சிலர் இந்த தினத்தில் தம் துணைக்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையிலும், அவர்கள் மறக்க முடியாத வகையிலும் காதலை வெளிப்படுத்துவார்கள்.
சிலருக்கு காதலில் நம்பிக்கை இருக்காது, பார்த்தவுடன் காதல் என்றால் அனைவரும் சிரிப்பார்கள். சிலர் வெளித்தோற்றத்தை வைத்து தான் காதல் வரும் என்றும், சிலரோ காதல் இந்த வயதில் மட்டும் தான் வரும் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் காதல் மனதில் தோன்றுவது. அத்தகைய காதல் எந்த நேரத்திலும், எவர் மீது வேண்டுமானாலும் வரும். ஏன், அந்த காலத்திலேயே பலர் காதல் செய்துள்ளனர். மேலும் அந்த காதலில் சில வரலாற்று சிறப்புமிக்கதாகவும், யாராலும் மறக்க முடியாததாகவும் உள்ளன. ஏனெனில் அவை அனைத்திலும், ஒரு சுவாரஸ்யம் உள்ளது.
இப்போது அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க காதல் கதைகள் சிலவற்றை, உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து பாருங்களேன்.



































