Just In
- 23 min ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 1 hr ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 3 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Movies Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
திருவிழாக்கள் நிறைந்த மாதம் சித்திரை
தெய்வீக திருவிழாக்கள்
சித்திரை மாதத்திற்குப் பல சிறப்புகள் இருப்பதை புராணங்கள் மூலம் அறியலாம்.தமிழகத்தில் பல கோவில்களில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதைக் காண்கிறோம். இவ்விழாவை வடநாட்டில் "பைசாகி' என்று கொண்டாடுகிறார்கள்.
மங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சைத்ரா என்றும்; சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள். இந்த நாளன்றுதான் நான்முகன் இப்பூவுலகைத் தோற்றுவித்தார் என்று புராணம் சொல்கிறது.
தெய்வீக அவதாரம்
சித்திரை முதல் தேதியன்று ஸ்ரீரங்கத்தில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஸ்ரீராமபிரான் அவதரித்ததும் ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் அவதரித்ததும் சித்திரையில்தான்.
விஷ்ணு அவதாரம்
சித்திரை மாதம் திருதியை அன்று பகவான் விஷ்ணு மீனாக அவதாரம் செய்தார். ஆகவே, அன்று மத்ஸ்ய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத சுக்லபட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்வதால் அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். சித்திரை மாத சுக்ல அஷ்டமியில் அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
சித்ர குப்தன் தோற்றம்
சித்திரை மாத, சித்திரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன் தோன்றினாராம். சித்ரா பவுர்ணமி, எமதர்மராஜனின் கணக்கரான சித்திர குப்தரின் ப்ரீதிக்காக கொண்டாடப்படுகிறது. சித்திரகுப்தனை திருப்தி செய்ய விரதம் இருந்து வழிபடுவது நம்முடைய வழக்கம். விரதம் அனுஷ்டிக்கும் நாட்களில் பசும் பால், மோர் உண்ணக் கூடாது. ஆனால், எருமைப் பால் சாப்பிடலாம் அதில் உப்பு சேர்க்கக் கூடாது.
பயத்தம் பருப்பும், எருமைப் பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதனம் செய்வது மிகச் சிறப்பாகும். பூஜையை முடித்துவிட்டு சித்திரகுப்தரை பயபக்தியுடன் தரிசிக்க வேண்டும். அதே போல் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திர தினத்தன்றுதான் நீலாதேவி மற்றம் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.
அட்சய திரிதியை
சித்திரை மாத அமாவாசையை அடுத்த சுக்லபட்ச திருதியை அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது. சித்திரையில் வரும் அட்சய திரிதியை அன்று வசதி படைத்தவர்கள் தங்கம் வாங்கு வார்கள். அன்று ஏதாவது ஒரு பொருளை வாங்கினாலும் (மஞ்சள், உப்பு) குடும்பம் செல்வச் செழிப்புடன் திகழும் என்பது நம்பிக்கை. அன்று தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும். எந்தப்பொருள் வாங்கினாலும், எந்த செயல் செய்தாலும் அது மூன்று மடங்காக பெருகும் என நம்பப்படுகிறது.
சித்திரை திருவிழா
சொக்கநாதர்- மீனாட்சியைத் திருக் கல்யாணம் செய்து கொள்ளும் விழா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும். சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு. கள்ளழகர் விழாவும் மதுரையில் சித்ரா பௌர்ணமியன்று சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
நடராஜர் அபிஷேகம்
வருடத்திற்கு ஆறுமுறை அபிஷேகம் காணும் தில்லை நடராஜருக்கு வசந்த காலமான சித்திரை மாத திருவோண நட்சத்திர தினத்தன்று அந்த ஆண்டிற்குரிய அபிஷேகம் நடத்தப்படுகின்றது.