Just In
- 29 min ago இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- 39 min ago கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- 1 hr ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 2 hrs ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
Don't Miss
- Movies இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நாய் வளர்ப்பவர்கள் செய்யும் சில அடாவடித்தனங்கள் - கடுப்பேத்துகிறார் மை லார்ட்!!!
செல்ல பிராணிகள் வளர்ப்பது உங்கள் மனதை இலகுவாக்கவும், மன அலுத்தமின்றி இருக்கவும் பயனளிக்கும். ஆனால், அது வளர்ப்பவர்களுக்கு மட்டும் தான். ஆனால், நமக்கு நேரெதிராக பயனளிக்கும். செல்ல பிராணிகள் வளர்ப்பவர்கள் நமக்கு எவ்வளவு வேண்டியவர்களாக இருந்தாலும், அங்கு நாய்கள் இருந்தால் மட்டும். லேசாக அல்லு வாங்கும் (பேஜாரு).
ஏனெனில், வளர்ப்பவர்களுக்கு நாம் எவ்வளவு வேண்டியவர்கள் என்று தெரியும். ஆனால், அது அந்த நாய்க்கு தெரியாதே. இன்னும் சில இடங்களில், நாய் வளர்ப்பவர்களும் நாய் மாதிரியே இருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு போவதற்கு, பேசாமல் நரகத்திற்கே போய் வந்துவிடலாம். சரி, அப்படி அவர்களது வீட்டிற்கு போகாமல் இருந்தாலும், வாக்கிங், ஜாக்கிங் என்று எங்காவது போகும் போது உடன் கூட்டிவது பயமுறுத்துவார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, நாய் வளர்ப்பவர்கள், அவர்களது பிராணிகளுடன் சேர்ந்து பல அடாவடித்தனங்கள் செய்வதுண்டு, அவற்றில் சிலவன.....
உணவை பகிர்ந்து சாப்பிடுவது
நாய் வளர்ப்பவர்கள் செய்யும் மிகப்பெரிய அடாவடித்தனம், உணவை பகிர்ந்துக்கொள்வது, இவர்களது உணவை நாய்களுக்கு ஊட்டுவதுக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், அதன் உணவை இவர்கள் பகிர்ந்து சாப்பிடுவது தான் கொடுமையிலும் கொடுமை. இதனால், பல தொற்றுகள் அண்ட வாய்ப்புகள் இருக்கின்றன.
"கக்கா" பிரச்சனை
காலையில் கக்காப் போக எங்காவது அழைத்து செல்வார்கள், யாரோ ஒருவர் வீட்டின் முன்பு கக்கா இருக்க செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.
குழந்தையைப் போல பாவிப்பது
தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளை குழந்தைகளைப் போல பாவிப்பது மிகவும் நல்ல விஷயம். ஆனால், அதற்கென்று, முத்தமிடுவது, கட்டிப் பிடித்துக் கொள்வது எல்லாம் ரொம்ப ஓவர். இதன் மூலம், பல சரும பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் இருக்கின்றன.
கட்டிப் பிடித்து உறங்குவது
இதன் உச்சகட்டமே, கட்டிப்பிடித்து உறங்குவது தான். இப்படி கண்டதெல்லாம் செய்துவிட்டு கடைசியில், அந்த செல்ல [பிராணிகளுக்கு ஏதேனும் சரும பிரச்சனை அல்லது நோய் பாதிப்புகள் வந்தால் ஊருக்கு வெளியில் சென்று விட்டுவிட்டு வந்துவிடுவது. (ஒரு சிலரை தவிர..)
நாய்க்கு உடை
நாய்களுக்கும் தாங்கள் உடுத்துவது போல அதே வண்ணத்தில் உடை அலங்காரம் செய்வது. ஸ்கார்ஃப், சாக்ஸ் என இவர்கள் செய்யும் லூட்டியை அடக்கவே முடியாது.