For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்லப் பிராணிகளுக்கான உணவு பழக்கம்!!!

By Super
|

மழைக்காலம் என்பது நமக்கு குஷியை தரும் காலம் தான். ஆனால் எந்த அளவுக்கு மகிழ்ச்சியை தருகிறதோ, அதே அளவுக்கு உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும். இதற்கு நாய் போன்ற செல்லப்பிராணிகள் மட்டும் விதிவிலக்கல்ல. பருவக்காலத்தில் செல்லப்பிராணியை மழையில் நனையாமல் இருக்க, அவைகளை வீட்டிற்குள் வைக்க நினைத்தாலும், தீயில் ஈர்க்கப்படும் விட்டில் பூச்சிகளை போல செல்லப்பிராணிகளும் மழையால் ஈர்க்கப்படும்.

பருவக்காலத்தில் செல்லப்பிராணியின் உடல்நலத்தை பாதுகாப்பது ஒரு பெரிய கடமையாகும். ஏனென்றால், இக்காலத்தில் பூஞ்சைத் தொற்று, அலர்ஜிகள், ரோமம் கொட்டுதல் மற்றும் வயிற்று போக்கு போன்ற பல வியாதிகளால் பாதிக்கப்படலாம். நாய் தன்னை தானே எத்தனை முறை நக்குகிறதோ, அதை வைத்தே, அது எந்த அளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கூறி விடலாம்.

நாயை சுத்தமாக வைத்திருக்க தினமும் ஒரு முறை அதை குளிப்பாட்டலாம். ஆனால் அப்படி செய்தால் மட்டும், அது ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதற்கேற்ற உணவை சரியான நேரத்தில், சரியான முறையில், அதற்கு வழங்கினால் தான் அதன் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதனால் நாயின் சாப்பாட்டு தட்டையும், கிண்ணத்தையும் தினமும் இரண்டு முறை நன்றாக கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Watch what your pet eats in monsoon

Looking after your pet and his hygiene needs can be a trying task in monsoon as they are most vulnerable in these months to fungal infection, allergies, fur loss problems, and stomach disorders.
Desktop Bottom Promotion