Just In
- 16 min ago வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- 1 hr ago 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- 2 hrs ago கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- 2 hrs ago இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
Don't Miss
- News சிவப்பு நிறத்திலிருந்து "காவி"க்கு தாவிய DD.. எதிலும் காவி, இதிலேயுமே? தூர்தர்ஷனுக்கு என்னதான் ஆச்சு
- Automobiles விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செல்லப் பிராணிகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய 15 விஷயங்கள்!!!
நாம் அன்பு செலுத்தவும், நம்மிடம் அன்பு செலுத்தவும், நமது குடும்பத்தில் ஒருவராக இருந்து மகிழ்ச்சி தருபவை தான் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள். பொதுவாக நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள், முயல் குட்டிகள் ஆகியவற்றையே செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்க்கின்றோம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை, வீட்டில் உள்ள அனைவரும் கொஞ்சி மகிழ்ந்து பொழுதைப் போக்குவதற்கு ஏற்ற துணையாகத் திகழ்பவை தான் செல்லப்பிராணிகள்.
வரலாறு தெரிந்த காலத்திலிருந்தே நமக்கு நண்பனாகவும் இருந்து, நமது வீட்டு பாதுகாவலர்களாகவும் இருப்பவை நாம் வளர்க்கும் நாய்கள். நன்றியென்னும் வார்த்தைக்கு அர்த்தமே நாய்க்குட்டிகள் தான். அந்த நாய்க்குட்டிகள், தமது விசுவாசத்தைக் காட்ட உயிரையே இழந்த பல கதைகளை செய்தித்தாள்களில் படித்திருக்கிறோம். அவற்றை வளர்ப்பது ஒரு கலை. செல்லப்பிராணிகளுக்கான உணவுக் கடைகள், மருத்துவர்கள் என்று அவற்றைச் சார்ந்து ஒரு வணிக உலகம் விரிந்திருக்கிறது.
பிராணிகளுக்கு ஐந்தறிவு தான் என்று சொல்லுகிறோம். இருப்பினும் நாம் சொல்வதைக் கற்றுக்கொண்டு, அவை வளர்ந்தாலும், நமது வீட்டுச் செல்லப்பிராணிகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. இப்போது அவற்றிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 15 பாடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தல்
நாய்கள் ஒரு வேலையைச் செய்தால், அவற்றின் கவனம் முழுவதும் சிதறாமல், அவ்வேலையில் மட்டுமே இருக்கும். மக்களும் அதைப் போல தான் நடந்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில், தமது வேலையில் ஈடுபட்டுக் கொண்டு, இமெயில் அனுப்புதல், இணையதளம் பார்த்தல் போன்றவற்றை செய்து கொண்டு இருப்பவர்களது கவனமும், நினைவாற்றலும், ஒரு நேரத்தில் ஒரே வேலையை மட்டும் கவனிப்பவர்களது கவனம் மற்றும் நினைவாற்றலை விட, அதிகமாகப் பாதிக்கப்படுகிறது என்று ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற ஆராய்ச்சிகள் ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடுகிறவர்கள் தேவையின்றி நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்றும் சொல்கிறது.
குட்டித்தூக்கம் போடுவது
காலையிலிருந்து மாலை வரை வீட்டு செல்லப்பிராணியைக் கவனித்துக் கொண்டு வந்தால், அவை எப்போதாவது சற்று நேரம் கண் அயர்வதைக் காண முடியும். மனிதர்களும் பகலில் குட்டித்தூக்கம் போடுவது நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் 24000 மக்களைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், தொடர்ந்து பகலில் குட்டித்தூக்கம் போடும் வழக்கம் உள்ளவர்களுக்கு எப்போதாவது பகலில் உறங்குபவர்களை விட, இதய நோயால் மரணமடையும் வாய்ப்பு 37% குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பகலில் சற்று நேரம் உறங்குவது, விழிப்புணர்வையும், பணித்திறனையும் உயர்த்துகிறது.
தினமும் நடப்பது
விலங்காக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும், நடப்பது என்பது அனைவருக்கும் அதிகக் கலோரிகளை எரித்து, இதய நலத்தைப் பாதுகாக்கும் எளிய வழியாகும். எனவே தவறாமல் நடந்து, உடல் நலத்தை மேம்படுத்திக் கொள்வது நல்லது. அதிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடக்க மறக்க வேண்டாம். இதனால் மன இறுக்கம், உடல் பருமன், டைப்-2 நீரிழிவு நோய், மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து விடபடலாம். அதுமட்டுமல்லாமல், எலும்புகள் வலிமையாகவும், மூளையை கூர்மையாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
நட்பு கொள்ளும் பழக்கம்
மனிதர்களை சமுதாய விலங்குகள் என்று அழைப்பதுண்டு. அவர்களுக்கு நட்பு கொள்ளுதல் என்பது ஏராளமான ஆரோக்கியம் சார்ந்த பலன்களை அளிக்கும். ஆஸ்திரேலியாவில் 1500 வயதானவர்களைக் கொண்டு ஒரு ஆராய்ச்சி 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்களது 10 ஆண்டுகால வாழ்க்கை தொடர்ந்து ஆராயப்பட்டது. அதிகமான எண்ணிக்கையில், நண்பர்களைக் கொண்டவர்களது மரண வீதமானது, குறைந்த எண்ணிக்கையில் நண்பர்களைக் கொண்டவர்களின் மரண வீதத்தை விட, 22% குறைவாக இருந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.
நிகழ்காலத்தில் வாழ்வது
நிகழ்காலத்தில் வாழ்வது என்பது வீட்டு வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடமாகும். பாலுறவு கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல் போன்ற மனதை ஒருமுகப்படுத்தும் செயல்களில் ஈடுபடும் போது, மக்கள் மிகமிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று ஹார்வர்டு பல்கலைக்கழக உளவியல் ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. அதிலும் தற்போது செய்து வரும் வேலையைத் தவிர்த்து, வேறொரு பணியைப் பற்றி நினைத்தாலோ அல்லது திட்டமிட்டாலோ, அது மகிழ்ச்சியைக் குறைத்துவிடும். எனவே ஒவ்வொரு வினாடியும் அந்த வினாடியில் மட்டும் வாழ வேண்டும். எப்போதும் அடுத்த வினாடியைப் பற்றியோ, கடந்த வினாடியைப் பற்றியோ எண்ண வேண்டாம்.
விரோதம் கொள்ள வேண்டாம்
ஒரு வினாடியில் வாழ்வதில், ஒரு பகுதிதான் கடந்துபோனவற்றை மறந்துவிடுவது. எனவே பழைய பகையை மறந்துவிட வேண்டும். இதற்காக பெரு மூச்சு விட்டு எளிதாக சுவாசிப்போம். பொதுவாக தீராத கோபமானது, நுரையீரலின் பணியைப் பாதிக்கிறது. ஆனால், மன்னிக்கும் மனப்பான்மை இருந்தால், அது இரத்த அழுத்தத்தினைக் குறைப்பதோடு, தம்மைப் பற்றியே ஒரு உயர்வான சுயமரியாதை உண்டாகும்.
புதிதாகத் தெரிந்து கொள்வதில் ஆர்வம்
ஒவ்வொரு விஷயத்தையும் புதிதாகத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுபவர்கள், தமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் சில ஆராய்ச்சிகள் இத்தகைய ஆர்வமானது சிறப்பான மன நலத்திற்கும், அறிவு மற்றும் திறமைப் பெருக்கத்திற்கும் வழிவகுக்கிறது என்றும் தெரிவிக்கின்றன.
முட்டாள்தனமான நகைச்சுவை உணர்வோடு இருப்பது
நாம் நம்மை அறிவாளியாகக் காட்டிக் கொள்ளாமல், சற்று முட்டாள்தனமாகக் காட்டிக் கொள்வது, பெருமளவு உடல்நலத்திற்கு நன்மை பயக்குமாம். மேரிலேண்டு மருத்துவ மையப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வின் படி, ஆரோக்கியமான இதயம் உள்ளவர்களுக்கு, மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவர்களை விட அதிகமான அளவில் நகைச்சுவை உணர்வு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆய்வு நகைச்சுவையானது இதயத்தைப் பாதுகாக்கும் பணியைச் செய்வதால், இதய மருத்துவத்தைப் பொறுத்தவரையில், சிரிப்பே சிறந்த மருந்து என்ற முடிவுக்கும் வந்துள்ளது.
தாகமெனில் உடனே தண்ணீர் குடிப்பது
ஏதாவது கடுமையான பணியில் ஈடுபட்டிருக்கும் போது, உடலிலிருந்து நீர்ச்சத்து வெளியேறுவதைத் தடுக்கும் பொருட்டு தாகமெடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் உடலில் கலோரியைக் கூட்டாமல், தசைகளுக்கும், திசுக்களுக்கும் தேவையான திரவத்தை அளிக்கும் வல்லமை தண்ணீருக்கு உண்டு. மேலும் வெயில் காலங்களிலும் வெகுவாக வியர்க்கும் அளவுக்கு பணிபுரிந்தாலோ, வழக்கத்தினை விட அதிகமாக தண்ணீர் குடிக்க மறக்க வேண்டாம்.
மீன் சாப்பிடுவது
மீன் கொடுத்தால் அனைவரும் சொல்வதெல்லாம் வீட்டுப்பூனை கேட்கும் என்ற ஒரு பழமொழி ஆங்கிலத்தில் உள்ளதாம். அந்த அளவு பூனைகளுக்கு, மீன் ஒரு விருப்பமான உணவாகும். ஆகவே உணவில் மீன்களை அன்றாடம் சேர்த்துக் கொள்ளுங்கள். சால்மன், சூரை, ட்ரௌட் மற்றும் கொழுப்புள்ள இதர மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த அமிலமானது, இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், மூட்டுவலி போன்றவற்றின் தீவிரத்தைக் கணிசமாகக் குறைக்க வல்லது.
அன்பை வெளிப்படுத்துவது
நாய்களுக்கு உள்ளத்தில் உள்ளதை மறைத்து நடிக்கத் தெரியாது. அவற்றிற்கு உங்களைப் பிடித்திருந்தால், அதனை நாய்கள் வாலாட்டி வெளிப்படுத்தும். இந்த அணுகுமுறையானது நமக்கும் நல்லது. எனவே அன்புக்குரியவர்களிடம் உங்கள் அன்பை அவ்வப்போது வெளிப்படுத்த வேண்டும். இத்தகைய அணுகுமுறை உறவுகளைப் பலப்படுத்துவதில் பெரிதும் உதவும்.
விளையாடுவது
உண்ணுதல் மற்றும் உறங்குதலோடு, மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று விளையாடுதலும் ஆகும். இத்தகைய விளையாட்டு அறிவுக்கூர்மை, படைப்பாற்றல், பிரச்சனைகளைத் தீர்வு செய்தல் மற்றும் சமூகத் திறமைகளையும் மேம்படுத்தும். எனவே வீட்டு செல்லப்பிராணிகளிடமிருந்து கற்றுக் கொள்ள மறக்க வேண்டாம். அதிலும் வேறு எந்தக் காரணத்திற்காகவும் இல்லாமல், வெறும் சந்தோஷத்திற்காக மட்டும் விளையாடுவது நல்லது. அவ்வாறு விளையாடும் போது, அந்த விளையாட்டில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
வெளியே செல்வதில் சந்தோஷப்படுதல்
எப்போதும் வீட்டிலேயே இருக்காமல், அவ்வப்போது நேரத்தினை வீட்டிற்கு வெளியே வெயிலில் செலவிடுவது, மன இறுக்கத்தினைக் குறைக்கும். இதனால் உடலில் வைட்டமின் டி அளவானது அதிகரிக்கும். உடல் தகுதியை அதிகரிக்கும். அதிலும் குழந்தைகளைப் பொறுத்தவரையில், வெயிலில் வெளியே சென்றால், தூரப் பார்வைத் திறன் அதிகரித்து, கற்றலில் குறைபாடு என்னும் கவனச் சிதறல் நோயைக் குறைக்கும். மேலும் பள்ளிகளில் குழந்தைகளது கல்வித் திறனை அதிகரிக்கும். எனவே அடிக்கடி வெளியில் செல்லும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.
சருமத்தைப் பராமரித்தல்
குளிப்பதனாலும், பற்களை துலக்குவதாலும் நாம் அடையும் நற்பலன்களைப் போல, நமது சருமப் பராமரிப்பும் முக்கியம். எனவே சருமத்தில் உள்ள முடிகள், சருமத்துளைகள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். இதனால் நிறைய நேர்மறையான விளைவுகள் ஏற்படும். நல்ல உடல் தூய்மையானது சுய கௌரவத்தை உயர்த்தும். கம்பீரமான மற்றும் சுத்தமான தோற்றம், வேலையினைப் பாதுகாத்துக் கொள்ளவும் உதவலாம்.
உடல் மொழியினைப் புரிந்துகொள்ளுதல்
மற்றவரின் உணர்வுகள் மற்றும் எண்ணங்களை, அவர்களது உடல் அசைவு, கண் அசைவு, முகக் குறிப்பு உள்ளிட்ட உடல் மொழிகளைக் கொண்டு புரிந்து கொள்வதில் நாய்கள் வல்லமை பெற்றவை. ஆனால் நம்மால் அந்த அளவு முடியாது. நாம் நமது உணர்வுகள் மற்றும் எண்ணங்களை, நமது உடல் அசைவு, கண் அசைவு, முகக் குறிப்பு, பேச்சு உள்ளிட்ட உடல் மொழிகளால் வெளிப்படுத்துவோம். ஆனால் பொதுவாக மற்றவர்களால், அதன் பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் போகும். ஆனால் வயதாக வயதாக நம்மால் உடல் மொழிகளைப் புரிந்து கொள்ளும் வல்லமை அதிகரிக்கும். எனவே மற்றவர்களின் உடல் மொழியினைப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.