Just In
- 8 min ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 58 min ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
- 3 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
Don't Miss
- News "அது அவ்ளோதான்.. முடிஞ்ச்!" பாஜக இந்த முறை 150ஐ தாண்டாது என.. கணித்த ராகுல் காந்தி
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Movies குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
வெள்ளை நிற பள்ளிச் சீருடையை புத்தம் புதிதாக மின்னச் செய்வதற்கான சில எளிய வழிகள்...
குழந்தைகள் பள்ளிக்கு அணிந்து செல்ல சமீபத்தில் புதிதாக வாங்கிய வெள்ளை நிற பள்ளிச் சீருடையை இரண்டு வாரம் கழித்துப் பார்த்தால், பல வருடக் கணக்கில் பயன்படுத்தியது போன்று இருக்கும். இதற்கு முக்கிய காரணம், குழந்தைகள் பள்ளியில் நண்பர்களுடன் ஓடியாடி விளையாடுவதால், துணிகளில் அழுக்குகள் படிந்துவிடுகிறது. அந்த அழுக்கு படிந்த வெள்ளை நிறத் துணியை நாம் வீட்டில் வார நாட்களில் துவைப்பதாக இருந்தால், சாதாரணமாக சோப்பு போட்டு துவைத்துவிட்டு, அழுக்கு போய்விட்டது என்று விட்டுவிடுவோம்.
ஆனால் குழந்தைகளின் வெள்ளை நிற பள்ளிச் சீருடையை சாதாரணமாக சோப்பு மட்டும் போட்டு துவைத்தால், அழுக்குகள் போகாது. மாறாக அதனை நன்கு சோப்பு நீரிலும், அதில் படிந்த கறைகளை போக்க உதவும் மற்ற பொருட்களைக் கொண்டும் நன்கு தேய்த்து துவைக்க வேண்டும். அதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த நீர்மங்களைப் பயன்படுத்தி துணியின் தரத்தை குறைப்பதற்கு பதிலாக, வீட்டில் இருக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு வார இறுதி நாட்களில் துவைத்தால், அவர்களின் பள்ளிச் சீருடையை எப்போதுமே புத்தம் புதியதாக ஜொலிக்கக் செய்யலாம்.
இங்கு குழந்தைகளின் வெள்ளை நிற பள்ளிச் சீருடையை புத்தம் புதிதாக மின்னச் செய்வதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் அதன்படி முயற்சித்துப் பாருங்கள்.
எலுமிச்சை
உங்கள் குழந்தையின் பள்ளிச் சீருடையானது வெள்ளை என்றால், அதில் படிந்த கறையை போக்க பலர் மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் அப்படி சிரமப்படாமல் எளிதில் போக்க, ப்ளீச்சிங் தன்மை அதிகம் நிறைந்த எலுமிச்சை சாற்றினைப் பயன்படுத்தலாம். அதிலும் எலுமிச்சையை இரண்டாக வெட்டி, அதனை கறை உள்ள இடத்தில் நன்கு அழுத்தி தேய்க்க வேண்டும். இப்படி கறை மறையும் வரை நன்கு அழுத்தி தேய்த்து, பின் சோப்பு நீரில் ஊற வைத்து, பிரஷ் பயன்படுத்தி தேய்த்தால், கறைகள் மறைந்துவிடும்.
வினிகர்
வினிகர் மற்றொரு ப்ளீச்சிங் பொருள். இவையும் வெள்ளை நிற பள்ளிச் சீருடையில் படியும் கறைகளை எளிதில போக்க வல்லது. அதற்கு 1/2 கப் வினிகரை, நீரில் கலந்து, அதில் பள்ளிச் சீருடையை 1 மணிநேரம் ஊற வைத்து, பின் பிரஷ் பயன்படுத்தி நன்கு தேய்த்து துவைக்க வேண்டும்.
பேக்கிங் பவுடர்
குழந்தைகளின் பள்ளிச் சீருடையில் களிமண்ணின் கறை இருந்தால், அதனை பேக்கிங் பவுடர் பயன்படுத்தி துவைத்தால் பளிச்சென்றாகும். அதற்கு பேக்கிங் பவுடரை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொண்டு, கறை உள்ள இடத்தில் தடவி, கறை போகும் வரை தேய்க்க வேண்டும். இதனால் நீங்காத கறைகளும் நீங்கிவிடும்.
ப்ளீச்
ப்ளீச்சிங் பவுடரை நீரில் கரைத்து, அதனை கறை படிந்த வெள்ளை நிற பள்ளிச் சீருடையில் தடவி தேய்த்து, பின் துவைத்து கறைகள் மறைந்துவிடும்.
தக்காளி ஜூஸ்
தக்காளி ஜூஸ் கூட ஒரு இயற்கையான ப்ளீச்சிங் தன்மை கொண்ட பொருள். இதனைக் கொண்டு கறைப் படிந்த வெள்ளை நிற பள்ளிச் சீருடையை துவைத்தால், கறைகள் அகலும்.