Just In
- 49 min ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 10 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Don't Miss
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மழைக்காலத்தில் வெள்ளிப் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க சில டிப்ஸ்...
கௌரவப் பொருட்களாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளிகளின் மேல் ஆசை கொள்ளாதவர்களே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் தான் வசதிகேற்ப தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். முக்கியமாக சிலர் வெள்ளி பொருட்களை அன்றாடம் பயன்படுத்தக் கூட செய்கிறார்கள். தகதகவென்று மின்னும் வெள்ளி பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் மீது தீராத காதல் உண்டா? அதனால் வீட்டில் பல வெள்ளி பொருட்களை வாங்கி குவித்திருக்கிறீர்களா? அப்படியானால் மழைக்காலத்தில் ஈரப்பதத்தினால் அவைகள் பாதிப்புக்குள்ளாகும் என்ற கவலை இருக்கிறதா? முதலில் அதை விட்டொழியுங்கள்.
விலை உயர்ந்த பொருட்களுக்கு எந்த ஒரு தேய்மானமும் வந்துவிடாது. மழைக்காலத்தில் எப்போதும் இருப்பதை விட காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், வெள்ளி பொருட்கள் ஜொலிப்பு நீங்கி, பாதுகாப்பதற்கு சிரமமாக இருக்கும். ஆனால் உரிய நடவடிக்கை மேற்கொண்டால், மழைக்காலத்தில் கூட வெள்ளி பொருட்களை மின்னச் செய்யலாம். பிரஷாந்த் சரவ்கி என்ற வல்லுநர், வெள்ளி பொருட்களின் மீது ஏற்படும் பழுதை தடுக்க சில டிப்ஸ்களை அளித்துள்ளார். மேலும் மழைக்காலத்தில் வெள்ளி பொருட்களை பாதுகாக்கவும் வழிமுறைகளை கூறியுள்ளார்.
கறை படியாமல் பாதுகாப்பது:
காற்றில் உள்ள சல்ஃபர் வெள்ளிப் பொருட்களோடு கலக்கும் போது, அந்த பொருட்கள் மீது கண்டிப்பாக கறை படியும். ஆகவே வெள்ளிப் பொருட்களை பத்திரமாக உள்ளே வைத்து பாதுகாக்காமல், அன்றாட தேவைகளுக்காக உபயோகப்படுத்த ஆரம்பித்தால், அதன் மேல் சல்ஃபர் சல்பேட் கண்டிப்பாக பதிந்திருக்கும். வெள்ளியில் அலங்கார பொருட்கள் இருந்தால், அதனை ஒரு மெல்லிய துணியை கொண்டு மறக்காமல் தினமும் துடைத்து எடுத்தால், விரைவில் கறை படிவதை தடுக்கும்.
வெள்ளி பொருட்களை துடைப்பது:
அதிக கறை படிந்த வெள்ளி பொருட்களை நுரை, தெளிப்பான்கள் அல்லது திரவ பேஸ்ட் வடிவில் உள்ள வெள்ளி பாலிஷ்கள் ஆகிவைகளை பயன்படுத்தி துடைக்கலாம். சில்வர் டிப்பும் நல்ல பலனை கொடுக்கும். அடர்த்தியான் கறை படிந்த வெள்ளி பாத்திரங்களை சிறிதளவு வாஷிங் சோடாவில் தண்ணீர் கலந்து கழுவலாம்.
துளைகள் கொண்ட வெள்ளிப் பொருட்களை துணிகளை கொண்டு துடைக்கக்கூடாது. அப்படி துடைத்தால் நுனியில் துணி மாட்டி கொண்டு கிழிந்துவிடும். எனவே மெதுவான ஒரு பிரஷை பயன்படுத்தியும் வெள்ளிப் பொருட்களை துடைக்கலாம். வெள்ளி பொருட்களை கழுவ டிஷ் வாஷர்யும் பயன்படுத்தலாம். ஆனால் அப்படி செய்யும் போது, அதிக கவனம் தேவை. மேலும் மற்ற ஸ்டைன்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களோடு சேர்த்து, இதனை டிஷ் வாஷரில் போட கூடாது.