For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரகாசமான தினத்தைப் பெற, வீட்டில் வளர்க்க வேண்டிய பூச்செடிகள்!!

By Super
|

நம் வாழ்வில் பூக்கள் பல வகைகளிலும் பயன்படுகின்றன. திருமண விழாக்களில், விருந்துகளில், பிறந்த நாள் விழாக்களில் மற்றும் பரிசுப் பொருட்கள் என்று பல சமயங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மலர்களின் பளிச்சென்ற வண்ணங்கள், அலுத்துப் போன, சோம்பலான மனநிலைக்கு புத்துணர்வூட்டுகின்றன. புகழ்பெற்ற கவிஞர்களுக்கு, தமது எழுத்துகளுக்குரிய பாடுபொருளாக அமைந்து பல புகழ்பெற்ற கவிதைகள் உருவாக மலர்கள் காரணமாக அமைந்திருக்கின்றன.

எழுத்தாளர்களும் மலர்களை மையமாக வைத்து பல படைப்புகளை அளித்திருக்கின்றனர். மலர்களின் அழகும், கவர்ச்சியும் பல ஓவியர்களிடமிருந்து அழியாத ஓவியப் படைப்புகள் பிறக்கக் காரணமாக அமைந்திருக்கின்றன.

மலர்களின் பெருமைகளைப் பற்றிச் சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். மலர்களின்றி வாழ்க்கை இல்லை. மலர்கள் இன்றி திருமணங்கள் இல்லை. மன்னவனை வணங்கவும் மலர்கள். ஆண்டவனை வணங்கவும் மலர்கள். காதலைச் சொல்லவும் மலர்கள். வெற்றியைப் பாராட்டவும் மலர்கள். வாழ்த்திற்கும் மலர்கள். மரணப் படுக்கையிலும் மலர்கள். மரணத்திற்குப் பிறகும் மலர்கள். இத்தகைய மலர்களை காலையில் எழும் போது பார்த்தால், அன்றைய நாள் மிகவும் பிரகாசமானதாக இருக்கும். உங்களது நாட்களை மேலும் இப்போது அத்தகைய மலர்கள் எவையென்று சில மலர்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்த்து, வீட்டில் வைத்து தினமும் பிரகாசமான நாளைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Flowers To Brighten Your Day

Flowers have always been used in a variety of ways for weddings, parties, birthdays or as gifts. Their vibrant colors are such a relief to our dull and monotonous lives. Flowers have also inspired poets and writers to create wonderful works of literature.
Desktop Bottom Promotion