Just In
- 5 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 5 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 9 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 10 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மண்ணிற்கு நலம் தரும் மண்புழு உரம்
வீட்டுத்தோட்டங்களில் மண்புழுக்கள் இருந்தால் நம் வீட்டில் கிடைக்கும் சமையலறை கழிவுகளை மட்கச் செய்து அதன் மூலம் இயற்கை உரம் தயாரிக்கலாம். இதனால் நல்ல கட்டமைப்புடன் கூடிய, நச்சுத்தன்மையற்ற நல்ல மதிப்பூட்டமுள்ள எரு கிடைக்கிறது. பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும், நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது. மேலும் தொழுஉரமானது மண்ணில் உள்ள நோய் பரப்பக்கூடிய தீமை தரும் நுண்ணுயிர்களை அழிக்கிறது.
மண்புழு கண்டறிதல்
மண்புழு வளர்க்க மண்ணின் மேற்பரப்பில் தென்படக்கூடிய, புழுக்களின் ஆக்கிரமிப்புள்ள மண்ணை கண்டறிய வேண்டும்.
500 கிராம் வெல்லம் மற்றும் ஒரு கிலோ மாட்டுச்சாணம் ஆகிய இரண்டையும் 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 மீ x 1 மீ பரப்பளவில் மண்ணின் மேல் தெளிக்க வேண்டும். வைக்கோல் கொண்டு மூடிவிட்டு பின்பு அதன் மேல் கோணிப்பை வைத்து போர்த்த வேண்டும். 20-30 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். அந்த இடத்தில், மண்புழுக்கள் மேற்பரப்பில் அதிக அளவில் வரத்தொடங்கும். அவற்றை சேகரித்து உரம் தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
மண்புழு பண்ணை
மண்புழுக்களை பண்ணை அமைத்து நாமே தயாரிக்கலாம். இதனால் நம் வீட்டுத் தோட்டத்திற்குத் தேவையான சத்தான இயற்கை உரம் கிடைக்கும். மண்புழு பண்ணையை அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களும் கூட வைத்திருக்கலாம். இதற்கு மூடிகளோடு கூடிய ஒரேயளவான இரண்டு தொட்டிகள் / வாளிகள் இருந்தால் போதும்.
இரண்டும் ஒளி ஊடுவ முடியாதனவாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஒரு தொட்டியின் அடிப்பாகத்தையும் மூடியையும் ஒன்றாக வைத்து துளைகள் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த துளைகள் ஒரு சென்டி மீட்டர் விட்டம் இருக்க வேண்டும். இவை அடைபடாமல் இருக்க இரண்டிலும் துளைகளைச் சேர்ந்தாற் போல் வைத்து வெளிப்பக்கம் தெரிகிற மாதிரி ஏதாவது அடையாளம் செய்து வைக்கவும்.
அடுத்த மூடியில் சிறிய துளைகள் செய்து கொள்ளவும். இவை காற்றோட்டத்துக்காக மட்டும். அடியில் துளைகளில்லாத தொட்டி, அதன் மேல் பெரிய துளைகள் கொண்ட மூடி, அதன் மேல் துளைகள் பொருந்தி வருமாறு அடுத்த தொட்டி, அனைத்தின் மேலும் சிறிய துளைகள் கொண்ட மூடி என்கிற ஒழுங்கில் அடுக்கிக் கொள்ள வேண்டும்.
மேல் தொட்டியின் உள்ளே 1 செ.மீ அளவுக்கு சிறிது சிறிதாகக் கிழித்த நியூஸ் பேப்பர் நனைத்துப் போட வேண்டும். அல்லது பழைய சாக்கு நனைத்து போடலாம். அதன் மேல் மண் - 1 அங்குலம் வந்தால் கூடப் போதும். தோட்டத்தில் உள்ள மண்புழுக்களை கொஞ்சம் தேடிப் பிடித்துப் போடுங்கள். பெரிய வகைப் புழுக்களானால் நல்லது. 10லிட்டர் அளவுள்ள தொட்டிக்கு ஒரு சிறிய கைப்பிடி அளவு புழுக்கள் போதும். புழுக்கள் வெளிச்சத்தைத் தவிர்க்க முதலில் மண்ணுள் ஒழிந்து கொள்ளும்.
சமையலறை கழிவுகள்
சமையலறைக் கழிவுகளைத் தினமும் உள்ளே போட்டு மண்ணால் மூடிவிடவும். புதிதாக மண் போட வேண்டியது இல்லை. இருக்கும் மண்ணை விலக்கி, கழிவுகளைப் போட்டு திரும்ப மூடி விடவும். புழுக்கள் உண்ண ஆரம்பிக்க எச்சம் கீழே உள்ள தொட்டியில் நிரம்பி வரும். இதனை 'வர்ம் டீ' என்பார்கள்.
9:1 என்கிற விகிதத்தில் நீரும் வர்ம் டீயும் கலந்து செடிகளுக்குப் உரமாக ஊற்றலாம். இப்படித் தொடர்ந்து உரத்தை எடுத்துவிட்டு கீழே உள்ள தொட்டியைச் சுத்தமாகவும் வைத்து இருந்தால் துர்நாற்றம் வீசாது.
கீழ்த் தட்டு முற்றாக நிரம்பிய பின்பே மேற் தொட்டியில் போட ஆரம்பிக்க வேண்டும். புழுக்கள் கீழே உள்ள உணவு முடிந்ததும் மேலே போய்விடும். சில நாட்கள் கழித்து நடுத் தொட்டியை எடுத்து அதில் உள்ள பசளையை மண்ணோடு கலந்து செடிகளுக்குப் போடலாம். மேற்பரப்பில் புழு முட்டைகள் பொரிக்காமல் மீதம் இருந்தால் அவற்றைப் புழுக்கள் உள்ள தொட்டியில் சேர்த்து விடுங்கள். முட்டைகளை தொட்டிச் செடிகளுக்குப் போட்டால் அங்கு அவை புழுக்களாகி விடும். இது செடிகளுக்குப் பாதிப்பு ஏற்படும்.