Just In
- 44 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 1 hr ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 3 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
செடிகளுக்கான உரங்கள் வீட்டிலேயே இருக்கு...
வீட்டில் இருக்கும் செடிகளுக்கான உரங்கள்...
மருந்துகள் : நிறைய வீட்டில் முதலுதவிக்காக ஒரு பெரிய பெட்டியில் மாத்திரைகளை வாங்கி வைத்திருப்பார்கள். அவ்வாறு வாங்கி வைத்திருக்கும் மாத்திரைகளில், ஒருசில மாத்திரைகளின் பயன்படுத்தும் தேதி முடிந்திருக்கும். அத்தகைய மாத்திரைகளை தூக்கிப் போடாமல், அவற்றை சேகரித்து, பொடி செய்து செடிகளுக்குப் போட்டால், செடிகள் நன்கு செழிப்பாக வளரும். ஏனெனில் அந்த மாத்திரைகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு ஆரோக்கியத்தை தந்து, செழிப்புடன் வளரச் செய்யும்.
டீ இலைகள் : தினமும் காலையில் மற்றும் மாலையில் தவறாமல் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். அவ்வாறு வீட்டில் டீ போட்டால், அதன் இலைகளை குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டுவிடுவோம். ஆனால் அவற்றை தூக்கிப் போடாமல், அதனை செடிகளுக்கு போட்டால், செடிகள் நன்கு வளரும். முக்கியமாக அவ்வாறு தூக்கிப் போடும் போது, அந்த டீ இலைகள் சூடாக இல்லாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் செடிகள் வாடிவிடும்.
காய்கறிகளின் தோல்கள் : அனைத்து வீடுகளிலும் சமையலில் தினமும் காய்கறிகளைப் பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தும் காய்கறிகளின் தோல்களை கண்டிப்பாக தூக்கிப் போடத்தான் செய்வோம். ஆனால் தற்போது அந்த காய்கறிகளின் தோல்களை தூக்கிப் போடாமல், அவற்றை செடிகளுக்கு போட்டால் செடிகள், அந்த தோலில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சி ஆரோக்கியமாக வளரும். இந்த காய்கறிகளின் தோல்கள் செடிகளுக்கு சிறந்த ஒரு வகையான கரிம உரமாகும்.
சாதத்தின் தண்ணீர் : சாதம் ஒரு தானிய வகையைச் சேர்ந்தது. இந்த சாதம் அரிசியாக இருக்கும் போது அதில் அளவுக்கு அதிகமான வைட்டமின்கள் இருக்கும். ஆனால் அவற்றை சாதமாக செய்யும் போது, தண்ணீரில் ஊற வைத்து, கழுவும் போது அந்த சத்துக்களை நாம் இழக்கிறோம். அவ்வாறு கழுவும் நீரினை வெளியே ஊற்றிவிடாமல், அவற்றை செடிகளுக்கு ஊற்றினால், அந்த அரிசியில் இருக்கும் சத்துக்கள், செடிகளுக்குச் செல்லும். இதனால் செடிகள் அந்த சத்துக்கைளை உறிஞ்சி, நன்கு வளரும். இதுவும் ஒரு வகையான உரமாகும்.
இத்தகைய பொருட்களே செடிகளுக்கான வீட்டில் இருக்கும் சிறந்த உரங்கள். இத்தகைய உரங்களை உங்கள் வீட்டு செடிகளுக்கு போட்டு, செடிகளை செழிப்பாக வளரச் செய்யுங்கள்.