Just In
- 5 min ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 1 hr ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 4 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 5 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
Don't Miss
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வளமான தீபாவளிக்கான சில வாஸ்து டிப்ஸ்...
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. ஒளியின் பண்டிகையான தீபாவளி நமக்கு மகிழ்ச்சியை அளித்து, நம் வாழ்வில் சந்தோஷம் மற்றும் வளத்தை அள்ளிக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இந்த இந்து பண்டிகைக்கான தயார் வேலைகள் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே தொடங்கிவிடும். தீபாவளி என்பது லட்சுமி தேவி மற்றும் விநாயகரை வழிப்படும் ஒரு பண்டிகையாகும். இந்த பண்டிகையின் போது கடவுள்களை நம் வீட்டிற்குள் வரவேற்க வீட்டை சுத்தப்படுத்தி ஒதுக்கி வைப்பார்கள்.
இந்நேரத்தில் வீட்டில் உள்ள பொருட்களை சரியான இடத்தில் வைக்க வேண்டும் என்று பலர் முற்படுவதுண்டு. அதனால் இருக்க வேண்டிய இடத்தில் பொருட்களை வைத்து நன்மைகளை அடைய வாஸ்து சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. லட்சுமி தேவி மற்றும் விநாயக பெருமானை வரவேற்க தயாராக உள்ளவர்கள் கீழ்கூறிய சில வாஸ்து டிப்ஸ்களை பின்பற்றி, வீட்டை தீபாவளியின் போது தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
சுத்தம் செய்தல்
தீபாவளியின் போது வீட்டை சுத்தமாக வைத்திருப்பது ஒரு முக்கியமான வாஸ்து டிப்ஸாகும். வீட்டில் உள்ள பழைய பொருட்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை தூக்கி எறியுங்கள். ஏனெனில் வீட்டிற்குள் நேர்மறையான சக்தி நுழைவதற்கு, அவைகள் தடையாக இருக்கும். ஆகவே வீட்டை சுத்தமாக வைத்திருந்தால், நேர்மறையான சக்திகள் வீட்டினுள் நுழைந்து அப்படியே தங்கவும் செய்யும்.
அலங்காரம்
தீபாவளி என்றாலே அலங்காரங்கள் தான். மாவிலை தோரணங்கள் மற்றும் செவ்வந்தி பூக்களின் அலங்காரங்களும் உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தரும் என்று நம்பப்படுகிறது. வீட்டின் முகப்பில் பூக்களினால் செய்யப்பட்ட தோரனையை கட்டுங்கள். அது இயற்கையின் வளத்தை குறிக்கும். மேலும் கடவுளின் ஆசிர்வாதத்தை ஈர்க்கும்.
விலையுர்ந்த பொருட்களை வைப்பது
வடக்கு திசையை குபேர மூலை என்று சொல்வார்கள். அந்த திசையை குபேரர் ஆள்கிறார் என்றும் நம்பப்படுகிறது. அதனால் செல்வம் வைக்கும் இரும்புப்பெட்டி அல்லது அலமாரியை வடக்கு திசை நோக்கி வைக்கலாம். மேலும் வீட்டில் செல்வத்தை பெருக்க, அந்த பீரோவில் லட்சுமி தேவியின் சிலையை வைக்கலாம்.
விளக்குகள்
விளக்குகள் இல்லாமல் தீபாவளியா? முக்கியமாக அகழ் விளக்குகள். அதிலும் நான்கு கூட்டெண்ணிக்கையாக விளக்குகள் இருக்க வேண்டும். ஏனெனில் இது லட்சுமி தேவி, விநாயகர், குபேரர் மற்றும் இந்திரன் ஆகிய கடவுகளை குறிக்கும். அதனால் அவைகளை பிரிக்காதீர்கள்.
காலடி சுவடுகள்
பல பேரின் வீட்டு நுழைவு வாயில் மற்றும் பூஜை அறை நுழைவு வாயிலில் சிறியதாக சிவப்பு காலடிச் சுவடுகள் வரையப்படும். இவை லட்சுமி தேவியின் காலடித் தடமாக கருதப்படுகிறது. இப்படி செய்வதால் வீட்டிற்குள் செல்வம், சந்தோஷம் மற்றும் வளம் நிறையும் என்று நம்பப்படுகிறது.
சாமி சிலைகளின் திசை
வாஸ்து சாஸ்திரப் படி, லட்சுமி தேவி, விநாயகர், இந்திரர் மற்றும் குபேரரின் சிலைகளை சரியான திசையை நோக்கி வைக்க வேண்டும். அவைகளை வணங்குபவர்கள் வட கிழக்கு அல்லது வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி வழிபட வேண்டும்.
மேற்கூறிய சில வாஸ்து டிப்ஸ்களை பின்பற்றி, தீபாவளியின் போது வீட்டை தூய்மையாக வைத்து, அதிர்ஷ்டத்தை வீட்டிற்குள் கொண்டு வாருங்கள்.