Just In
- 2 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 2 hrs ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 3 hrs ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 4 hrs ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
Don't Miss
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- News "யாரும் ஒழுங்கா வேலை பார்க்கல.." அதிமுக நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டாரா எடப்பாடி? வெளியான பரபர தகவல்
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்கள் கண்கள் சோர்வாக இருக்கிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!
இங்கு கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒருவருக்கு கண் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். உடலின் மற்ற உறுப்புகளுக்கு கொடுக்கப்படும் பராமரிப்புக்களைப் போலவே, கண்களுக்கும் போதிய பராமரிப்புக்களையும் ஓய்வையும் வழங்க வேண்டியது அவசியம்.
அதிலும் நீங்கள் தினமும் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் கண்கள் மிகவும் வேகமாக சோர்வடைந்துவிடும் என்பது தெரியுமா? உங்கள் கண்கள் சோர்வடைந்திருந்தால் ஒருசில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகளைத் தான் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
கண் எரிச்சல் அல்லது கண்கள் சிவப்பாதல்
உங்கள் கண்களில் எரிச்சல் அதிகமாக இருந்தாலோ அல்லது கண்கள் சிவந்து காணப்பட்டாலோ, கண்கள் வறட்சி அடைந்துள்ளது என்று அர்த்தம். இந்நேரத்தில் நீரை அதிகம் குடிப்பதோடு, கண்களுக்கு போதிய ஓய்வையும் வழங்க வேண்டியது மிகவும் அவசியம்.
பார்ப்பதில் சிரமம்
கண்கள் சோர்வாக இருந்தால், பார்ப்பதில் சிரமத்தை உணரக்கூடும். அதாவது அனைத்து பொருட்களும் கண்களுக்கு மங்கலாக தெரிய ஆரம்பிக்கும்.
கண்களில் இருந்து நீர் வடிதல்
கண்களில் இருந்து நீர் வடிய ஆரம்பித்தாலும், கண்கள் சோர்வடைந்துள்ளது என்பதற்கான அறிகுறியாகும். இந்நேரத்தில் கண்களுக்கு ட்ராப்ஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக, மருத்துவரை அணுகி, சரியான காரணத்தை அறிந்து சிகிச்சை எடுங்கள்.
கண் கூச்சம்
கண்கள் மிகவும் சோர்ந்திருந்தால், கண் இமைகளைத் திறப்பதே கடுமையாக இருக்கும் மற்றும் வெளிச்சத்தை பார்த்தாலே கண்கள் கூச ஆரம்பிக்கும். இம்மாதிரியான நேரத்தில் மருத்துவரை உடனே அணுக வேண்டியது அவசியம்.
கண் வலி
கண்களில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்படும் போது, அதாவது கண்களுக்கு ஓய்வு கிடைக்கும் நேரமான தூக்கத்தை சரியாக மேற்கொள்ளாமல் இருந்தால், கண்கள் வலிக்க ஆரம்பிக்கும். அதுவும் கண்களில் வலி ஆரம்பித்து, அது அப்படியே கழுத்து, தோள்பட்டை அல்லது முதுகு பகுதியையும் பாதிக்கும்.