Just In
- 2 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 2 hrs ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 3 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 4 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- News கன்னியாகுமரி எம்பி தொகுதி: துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
நீங்கள் ஏன் கட்டாயம் வாழை இலையில் சாப்பிட வேண்டும்? எதனால்?
வாழை இலையில் அந்த காலத்தில் ஏன் சாப்பிட்டார்கள் என்பதற்கான காரணமும், அதில் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளையும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் அனைவரும் வாழை இலையில் சாப்பிட்டு இருப்பீர்கள். அதிலும் ரசம் சாதம் வாழை இலையில் சாப்பிடும்போது, ரசமோடு இலையின் வாசமும் கலந்து, அது தரும் ருசிக்கு பீஸா பர்கர் எல்லாம் ஓடிவிட வேண்டும்.
ருசி மட்டுமல்லாது ஆரோக்கியத்தையும் தரும் வாழை இலையில் சாப்பிடுவதை எப்படி அந்த காலத்தில் நமது முன்னோர்கள் கணித்தார்கள் என்பது ஆச்சரியம்தான். எதனால் அந்த காலத்தில் வாழை இலையை சாப்பிடச் சொன்னார்கள் என பார்ப்போமா?
கிருமி நாசினி :
இது அற்புதமான கிருமி நாசினி. சுட சுட உணவுகளையும், பொங்கலையும் இதில் சாப்பிடுவதால் ருசியோடு இதன் சத்துக்களும் நமது உடலுக்கு போய் சேர்கிறது. குடலில் தங்கும் கிருமிகளை கொல்கிறது.
நச்சு முறிவு :
நாம் சாப்பிடும் உணவுகளில் நச்சிருந்தால் அவற்றை முறிக்கும் சக்தி வாழை இலைக்கு உண்டு. ஆகவேதான் அந்த காலத்தில் வாழை இலையில் உணவை சாப்பிட்டார்கள்.
சருமம் மின்னும் :
ஆரோக்கியமட்டுமல்ல. அழகுக் கூட்டி தரும். வாழை இலை. தொடர்ந்து வாழை இலையில் சாப்பிட்டு வந்தால், சருமம் பளபளக்கு. மந்தம், பித்தம் குறையும். சுருக்கங்கள் தள்ளிப் போகும்.
வயிற்றுப் புண் :
வாழை இலையிலுள்ள குளோரோஃபில் உணவுகளை எளிதில் ஜீரணம்டையச் செய்யும். வயிற்றுப் புண்களை ஆற்றும்.
உணவு கெட்டுபோகாது :
வாழை இலையில் உணவை கட்டுவதால் கெட்டுப் போகாது. நீண்ட நேரம் வரை தாங்கும். இது பாதுகாப்பானதும் கூட.
கண் பார்வை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :
உடலில் உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்புச் சத்துக்கள், கண்களை பாதுகாத்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
ஆயுள் கூடும் :
வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி அந்த இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, மேற்கண்ட சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதனால் ஒவ்வொரு முறை வாழை இலையில் சாப்பிடும் பொழுதும் நமக்கும் ஆயுள் கூடுகிறது.