Just In
- 4 min ago இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- 2 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- 4 hrs ago இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- 12 hrs ago கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Don't Miss
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- News லோக்சபாவை விடுங்க! சட்டசபை தேர்தலிலும் அடி! தமிழ்நாட்டில் 2வது இடத்தை இழக்கும் அதிமுக? தாமரை மலருது?
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று இருக்கும் போது கட்டாயம் செய்யக்கூடாதவைகள்!
இங்கு சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று இருக்கும் போது கட்டாயம் செய்யக்கூடாதவைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும், இடுப்புப் பகுதியில் வலி போன்றவற்றை சந்திக்கக்கூடும். இந்நிலையில் ஒருசில செயல்களை செய்தால், அது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.
இங்கு ஒருவருக்கு சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று இருந்தால் கட்டாயம் செய்யக்கூடாதவைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைத் தவிர்த்தால், விரைவில் சிறுநீர் பாதையில் உள்ள நோய்த்தொற்றைத் தவிர்க்கலாம்.
போதிய நீர் பருகாமை
சிறுநீர் பாதையில் தொற்றுக்கள் இருக்கும் போது, போதிய அளவில் நீரைப் பருக வேண்டியது அவசியம். இதனால் சிறுநீர் பையில் பாக்டீரியாக்களின் உருவாக்கம் தடுக்கப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் மூலம் அந்த பாக்டீரியாக்கள் வெளியேற்றப்பட்டுவிடும்.
சிறுநீரை அடக்குவது
சிறுநீரை அடக்குவதே தவறான பழக்கம். அதிலும் சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று இருக்கும் போது அடக்கினால், அதனால் நிலைமை தான் மோசமாகும். எனவே சிறுநீரை அடக்காமல் அவ்வப்போது வெளியேற்றிவிடுங்கள்.
சுயமாக மருந்துகள் எடுப்பது
சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் இருக்கும் போது, தானாக சரிசெய்கிறேன் என்று கண்ட மருந்து மாத்திரைகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் சிறுநீர் பாதையில் தொற்றுகள் இருந்தால், மருத்துவரிடம் சென்று உடனே அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
ஆன்டி-பயாடிக்குகளைத் தவிர்ப்பது
மருத்துவர் பரிந்துரைத்த ஆன்டி-பயாடிக்குகளை எடுத்த இரண்டு வேளையிலேயே சரியாகிவிட்டது என்று நிறுத்திவிடக்கூடாது. மருத்துவர் எத்தனை நாட்கள் எடுக்க சொன்னாரோ, அத்தனை நாட்களும் ஆன்டி-பயாடிக்குகளை எடுக்க வேண்டும்.
பாலியல் செயல்பாடு
முக்கியமாக சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருக்கும் போது, பாலியல் உறவில் ஈடுபடாமல் இருப்பதே சிறந்தது. இதனால் நிலைமை மோசமாவது தடுக்கப்படும். இல்லாவிட்டால், அதுவே நோய்த்தொற்றை மோசமாக்கிவிடும்.