Just In
- 1 hr ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 1 hr ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 2 hrs ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 3 hrs ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
Don't Miss
- News முஸ்லீம்.. ஹனுமான்.. லோக்சபா தேர்தலில் பிரச்சார ஸ்டைலை மாற்றிய மோடி.. பாஜக எடுத்த "அஸ்திரம்"
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மாலையில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியுமா?
இங்கு அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவுமா, இல்லையா என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தினமும் உடற்பயிற்சியை செய்து வந்தால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். உடல் நன்கு ஆரோக்கியமாகவும், இரவில் நல்ல தூக்கத்தைப் பெறவும், அன்றாடம் உடலுக்கு சிறிது உழைப்பு கொடுக்க வேண்டியது அவசியம்.
ஆனால் தற்போது பல ஆண்களுக்கும் சிக்ஸ் பேக் மீது அதிக நாட்டம் உள்ளதால், அதைப் பெற கடுமையான டயட் மற்றும் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியையும் செய்கின்றனர். ஆனால் பாடிபில்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இது சரியானதாக இருக்குமே தவிர, அலுவலக வேலை புரிபவர்கள் எதிலும் அளவாக இருப்பதே சிறந்தது.
சரி, இப்போது அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவுமா, இல்லையா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தீவிர எடை பயிற்சி
தீவிரமான எடை பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடல் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் அதே சமயம் உடல் மற்றும் மனம் அதிகப்படியான எடையைத் தூக்கியதால், இரவில் தூங்குவதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். மேலும் மனநிலையில் ஏற்றஇறக்கங்கள் ஏற்படும். மொத்தத்தில் ஒட்டுமொத்த உடலின் செயல்பாடும் பாதிக்கப்படும்.
ஆய்வு
ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கலந்து கொண்டவர்களை இரு குழுக்களாகப் பிரித்து, அவர்களை பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபடச் செய்து, அவர்களது தூக்கம், செயல்பாடு, மனநிலை போன்றவற்றை ஆராய்ந்தனர்.
ஆய்வின் முடிவு
ஒரு வார ஆய்விற்கு பின், அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கோபம், டென்சன், மன இறுக்கம், சோர்வு, மனநிலையில் ஏற்றத்தாழ்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்தது.
காரணம் என்ன?
அதிகமான அளவில் உடற்பயிற்சியில் ஈடுபட்டதால், உடலில் அட்ரினலின் மற்றும் கார்டிசோல் அளவு அதிகரித்துள்ளது தெரிய வந்தது. எப்போது உடலானது கடுமையாக அழுத்தத்திற்குட்படுகிறதோடு, அப்போது உடலில் மன அழுத்த ஹார்மோன்களான கார்டிசோல் மற்றும் அட்ரினலின் அதிகமாக வெளியிடப்பட்டு, தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும்.
நோரெபினிஃப்ரைன்
உடற்பயிற்சியை அளவுக்கு அதிகமாக செய்யும் போது நோரெபினிஃப்ரைன் என்னும் ஹார்மோன் அதிகம் வெளியிடப்படுகிறது. இந்த ஹார்மோன் இதயத் துடிப்பு, தசைகளில் இரத்த ஓட்டம் போன்றவற்றை அதிகரிப்பதோடு, மனதை விழிப்புணர்வுடன் வைத்துக் கொள்ளும். மாலை வேளையில் இந்த ஹார்மோனின் அளவு அதிகம் இருந்தால், இரவில் தூக்கத்தைப் பெறுவது என்பது முடியாத ஒன்றாகிவிடும்.
கார்டிசோல்
மறுபுறம் கார்டிசோல் என்னும் ஹார்மோனின் அதிகமான வெளியீட்டால், தசைகள் சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் உடல் ஓய்வு பெறுவதைத் தள்ளிப் போட்டு, இரவு நேரத்தில் தூக்கத்தைப் பெற முடியாமல் செய்யும்.