Just In
- 29 min ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 5 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 8 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 9 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இறந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
தானத்திலே சிறந்த தானம், அன்னதானம், இரத்த தானம் என்பார்கள். ஆனால், உண்மையிலேயே சிறந்தது உடல் உறுப்பு தானம். இவ்வுலகில் விலைமதிப்பற்ற பொருள் ஒன்று இருக்கிறது எனில், அது நமது உயிர் தான். எத்தனை பொன், பொருள் கொடுத்தாலும் இதை வாங்க முடியாது.
இறப்பை பற்றி பலரும் அறியாத தகவல்கள்!
அப்படிப்பட்ட இந்த உயிரை, உடல் உறுப்பு தானம் செய்வதால் மற்றவருக்கு பரிசாக அளிக்க முடியும். ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு நிமிடத்திலும், ஒவ்வொரு மணி நேரத்திலும், வாரத்திலும், மாதத்திலும் என்னென்ன மாற்றங்கள் காண்கின்றன என உங்களுக்கு தெரியுமா?
எச்சிலை வைத்தே உங்கள் மரணத்தை பற்றி கூறிவிட முடியும் - லண்டன் ஆய்வு தகவல்!
தெரிந்துக் கொள்ளுங்கள், தெரிந்துக் கொண்டு மண் தின்னும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முனையுங்கள்...
மூளை
ஒருவர் இறந்த மறுநொடியே மூளை திடீரென விரிந்து இயக்கம் முடிவுறும்.
உடல் வெப்பம்
உடலில் வெட்பநிலை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1.6 ஃபாரன்ஹீட் அளவு குறைய ஆரம்பிக்கும். இதனால், இறந்தவர்களின் உடல் மெல்ல, மெல்ல குளிர்ந்த நிலைக்கு செல்கிறது.
உடல் செல்கள்
ஆக்ஸிஜன் சப்ளை இல்லாததால் மெல்ல, மெல்ல உடல் செல்கள் இறக்க ஆரம்பிக்கும். பிறகு உடைய ஆரம்பித்து, வெளியேற ஆரம்பிக்கும், இதனால் தான் உடல் அழுக ஆரம்பிக்கிறது.
தசைகள்
கால்சியம் தசைகளில் பில்ட் அப் ஆக துவங்குவதால், தசை இறுக்கமாக, கடினமாக மாறும்.
கழிவு
சில சமயங்களில் தசை இலகுவாக ஆகும் தருணத்தில், இறந்தவரின் உடலில் இருந்து மலம் அல்லது சிறுநீரும் வெளியேறும்.
தோல்
தோல் மெல்ல, மெல்ல ஈரத்தன்மை இழந்து, சுருங்க ஆரம்பிக்கும். இதனால், இறந்தவர்களின் கூந்தலும், நகமும் வளர்வது போன்ற தோற்றமளிக்கும்.
பழுப்பு நிறம்
புவி ஈர்ப்பு, இறந்தவர்களின் இரத்தத்தை கீழ் நோக்கி இழுக்கும். இதனால் சருமத்தின் மேற்புறம் பழுப்பு நிறமாக மாற ஆரம்பிக்கும்.
பச்சையாக மாறுதல்
இறந்தவர்களின் உடலில் ஆங்காங்கே பச்சை நிற தடிப்புகள் தோன்றும். இதற்கு காரணம், உடல் உறுப்புகளில் இருக்கும் என்ஸைம்கள் அதுவாக செரிக்க ஆரம்பிக்கும். இதற்கு காரணம் பாக்டீரியாக்கள்.
துர்நாற்றம்
உடல் அழுகும் போது ப்யுட்ரெஸைனை, காலரா நுண்ணுயிர் நச்சு இரசாயனங்கள் வெளியேறும். இதன் காரணத்தால் தான் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
புழுக்கள்
புழுக்கள், வண்டுகள் இறந்தவரின் உடலை உண்ண ஆரம்பிக்கும். புழுக்கள் இறந்தவரின் 60% உடலை ஒரே வாரத்தில் செரித்துவிடும்.
ஊதா, கருப்பு
மெல், மெல்ல இறந்தவரின் உடல் ஊதா மற்றும் கருப்பு நிறமாக மாறும். இதற்கு காரணம், பாக்டீரியாக்கள் தொடர்ந்து இறந்தவரின் உடலை செரிப்பது தான்.
முடி
ஓரிரு வாரத்தில் இறந்தவரின் உடலில் இருந்து முடிகள் மொத்தமும் உதிர்ந்துவிடும்.
மாதத்தில் உண்டாகும் மாற்றங்கள்!
நான்கு மாதங்களில் இறந்தவரின் உடலில் இருக்கும் மொத்த தசை மற்றும் சருமம் அழுகி, வெறும் எலும்புக்கூடு மட்டும் தான் மிஞ்சும்.