Just In
- 45 min ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 1 hr ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 3 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 6 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கண்கள் இமைக்காமல் இருந்தால் என்னாகும் ??
கண்களில் சுரக்கும் நீர் கார்னியாவை பாதுகாத்து, இமை, கண்ணுடன் உராய்வதை தடுக்கிறது. மேலும் கண்களுக்கு போஷாக்கும் அளிக்கிறது. போதிய நீர் இல்லாமல் போவதால் உண்டாவதுதான் கண்களில் வறட்சி.
வறண்ட கண்கள் ஏற்பட்டால், கண்களில் நமைச்சல் உண்டாகும். நீர் வழிந்து கொண்டேயிருக்கும். காற்று பட்டால் எரியும். கார்னியாவில் பாதிப்புகள் உண்டாகும். உடனடியாக வறண்ட கண்களை மருத்துவரிடம் காண்பிக்காவிட்டால் அது எளிதில் தொற்றுக்களை உண்டாக்கும். கண்களை பாதித்து விடும்.
தொடர்ந்து புத்தகம் படிக்கும்போது, அல்லது டிவி பார்க்கும்போது, நீங்கள் கண்களை இமைக்க மறந்துவிட்டால், இதனால் போதுமான திரவம் கண்களில் சுரக்காமல் போய்விடும். இதனால் கண்களில் வறட்சி ஏற்படும்.
அது தவிர்த்து, கண்களில் கண்ணாடி அணிவதால், கண்களில் அறுவை சிகிச்சை நடைபெற்றிருந்தால், அல்லது மருந்துகள் உண்டாக்கும் அலர்ஜி ஆகியவற்றாலும் கண்களில் வறட்சி ஏற்படும்.
அதேபோல் மெனோபாஸ் சமயங்களில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களாலும் கண்களில் வறட்சி ஏற்படும். ஹார்மோன் மாற்றத்திற்கும், கண்களின் வறட்சிக்கும் தொடர்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தொற்று வியாதிகள் :
கண்கள் வறண்டு போவதால் எளிதில் தொற்று ஏற்பட்டுவிடும். தொற்றினால் எரிச்சல், கண்களை திறந்து மூடுவதில் சிரமம் உண்டாதல் ஆகியவை உண்டாகும். ஆகவே கண்களில் வறட்சி ஏற்பட்டால் தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்க வேண்டும்.
வறட்சியிலிருந்து பாதுகாக்க :
உங்கள் கண்கள் வறண்டிருந்தால், உடனடியாக நிவர்த்தி செய்துவிடுங்கள். செயற்கை கண்ணீர் சிகிச்சையின் மூலம் கண்களுக்கு ஈரப்பதம் அளிக்கலாம். ஒமேகா 3 அமினோ அமிலங்கள் கொண்ட உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். மீன், முட்டை, கேரட், மற்றும் நட்ஸ் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவை கண்களில் திரவம் சுரப்பதை அதிகரிக்கச் செய்கிறது. அதேபோல் கண்களில் எண்ணெய் சுரப்பும் தூண்டப்படும். இதனால் கண்களின் எரிச்சல் குறையும்.
புகை தூசு ஆகியவை கண்களில் படாமலிருக்க கண்ணாடி அணிவது நல்லது. வறட்சி குறையாமலிருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து, தக்க சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இல்லையெனில் கண்களை பாதிக்கும்.