Just In
- 16 min ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 1 hr ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 10 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Don't Miss
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு மனநல பாதிப்பு உண்டாகிறது, ஏன் தெரியுமா?
உலக மக்கள் தொகையில் 38 சதவீதம், இந்தியா மற்றும் சீனாவின் மக்களே ஆக்கிரமித்துள்ளனர். மக்கள் தொகை அதிகமுள்ள இந்த இரு நாடுகளிலுமே மக்கள் அதிகமாய் மன நல பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று கூறுகின்றது.
இந்திய- சீன மக்களின் மன நலம் தொடர்பான ஆராய்ச்சி நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் சீனாவில் ஆறு சதவீதத்திற்கும் குறைவாக, நரம்பு தளர்ச்சி, மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் சைக்யாட்ரிக் நோயினால் பாதிப்புக்குள்ளானோர் 40 சதவீதம், அவர்களின் மன நோயை குணப்படுத்தாமலே இருக்கின்றனர். தகுந்த மன நல மருத்துவரிடம் பரிசோதிக்காமல், அப்படியே விட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் பத்தில் ஒருவர் மன நோய்களுக்கு ஆளாகிறார்கள், மன அழுத்தம், பதட்டம் அதனால் உண்டாகும் நரம்பு தளர்ச்சி, ஆகியவ்ற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சரியாக இந்த நோய்கள் கவனிக்கப்படாமல் இருப்பதற்கு காரணங்களையும் குறிப்பிடுகிறார்கள். தகுந்த மன நல மருத்துவங்கள் இல்லை, சிறந்த மருத்துவர்கள் இல்லை, போதிய அளவு வசதிகள் இல்லை என நிறைய காரணங்களை சாடியிருக்கிறார்கள்.
அரசாங்கத்தால் 1 சதவீதத்திற்கும் குறைவான முதலீடே மன நல மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படுகின்றன. இதனால்தான் போதுமான வசதி கொண்ட மன நல மருத்துவமனைகள் இந்தியாவில் அமையாததற்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.
மன நல மருத்துவ மனைகளில் போதுமான ஊழியர்களை நியமிக்க வெண்டும். இந்த மாதிரியான மருத்துவமனைகள் உருவாக சமூகத்தில் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.
நல்ல படித்த மன நல மருத்துவர்கள் சேவை செய்ய வர வெண்டும் என கூறுகின்றனர். இதனால் இன்னும் மனநலக் காப்பகங்கள் அதிகப்படுத்தலாம். இந்த நோய் உள்ளவர்களுக்கு தீர்வு அளிக்கலாம் என்றும் ஆய்வாலர் கூறுகிறார்.
மன அழுத்தம், பதட்டம், தூக்கமின்மை, எபிலெப்ஸி, ஆகியவை இந்தியாவில் வர நம் சமூக கட்டமைப்பு மற்றும் வாழும் சூழ் நிலைகளும் ஒரு விதத்தில் காரணம் என்கின்றனர்.
இதன் தொடர்பான ஆய்வு இன்னும் மேற்கொண்டு வருகிறார்கள். இதனைப் பற்றி லேன்சட் அண்ட் லேன்சட் சைக்யாட்ரி என்ற இதழில் காணலாம்.