Just In
- 55 min ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 2 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 4 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
Don't Miss
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்தியாவில் அதிகரித்து வரும் நோய்களில் இதுவும் ஒன்று !! எது தெரியுமா?
சர்க்கரை வியாதி போலவே, மற்றொரு நோயும் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது சிறு நீரக் நோய்தான்.
கடந்த 15 வருடங்களில் மலைக்கத்தக்க வகையில் சிறு நீரக நோய் அதிகரித்து வருகிறது. 100ல் 17 பேருக்கு சிறு நீரக நோய் தாக்குகிறது என கணக்கெடுப்பு கூறுகின்றது.
ஒவ்வொரு கோடி மக்களில் 150- 230 பேர் சிறு நீரக நோயின் இறுதி நிலையில் இருப்பதாகவும், 2,20,000-2,75,000 நோயாளிகள் சிறு நீரக மாற்று சிகிச்சைக்கு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
வருடத்திற்கு வருடம் 15 % டயாலிஸிஸ் செய்துவருவது அதிகரித்து வருகிறது. குழந்தைகளும் இதில் உள்ளடக்கம் என்பது கவலைகுரிய விஷயம். இதயம் போல், சிறு நீரகத்தின் நோய்களைப் பற்றி போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததே காரணம் என மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவர் சுதீப் கூறுகிறார்.
காரணம் என்ன?
அதிகமான உடல் எடை, குறைந்த நீர்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது, நீர் சரியாக குடிக்காமல் இருப்பது, அதே போல் மிக முக்கியமான விஷயம் சோடியம் கலந்த உணவுகளை அதிகம் உண்பது சிறு நீரகத்தை பாதிக்கும். ஒரு நாளைக்கே 1-5- 2.3 கிராம் அளவே உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் க்டைகளில் சாப்பிடும் விகிதம் இது போல் இரண்டு மடங்கு அமைகிறது.
தடுப்பது எவ்வாறு ?
இந்திய உடல் நலத்துறை அடுத்த 2 வருடத்திற்குள் மாவட்ட அளவில் 2000 டயாலிஸிஸ் சென்டர் அமைக்கப்படும் என கூறியுள்ளது.
இதனை தடுக்க போதிய விழிப்புணர்வு மக்களிடம் உருவாக வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு நல்ல ஒழுங்கான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க சொல்லித் தர வேண்டும். வாழ்க்கை முறை என்பது நேரத்திற்கு உண்பது. அதுவும் ஆரோக்கியமான உணவுகளையும், பழங்களையும் சாப்பிட சொல்வது, நிறைய நீர் அருந்தச் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் 300- 400 டயாலிஸிஸ் சென்டர்கள் தற்போது உள்ளன. 60 % நோயாளிகள் சிறுநீரக நோய் சரிவர கவனிக்கப்படாமல் இருக்கின்றனர். இந்தியாவின் பெரும் நகரங்களில் சிறு நீரக நோய்க்கான சிறப்பு மருத்துவர்கள் சுமார் 1500 சிறந்த மருத்துவர்கள் இருக்கின்றனர். வெறும் 4 % நோயாளிகளுக்கே மாற்று சிறு நீரகம் கிடைக்கின்றன. இதெல்லாம் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
சிறு நீரகம் அதி முக்கியமான வேலையை செய்கிறது. மற்ற உறுப்புகளைக் காட்டிலும் அதிக பாரங்களை தாங்குவது சிறு நீரகம்தான். அதனால்தான் இரு சிறு நீரகங்கள் இயற்கை நமக்கு கொடுத்துள்ளது. ஆகவே அதனை பாதுகாப்பது நம் கையில் உள்ளது.