Just In
- 2 hrs ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 2 hrs ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 3 hrs ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 4 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- Movies Thalaivar171: டைட்டில் ரிலீசுக்கு இன்னும் இரு தினம்.. மீண்டும் கடிகாரத்தை கையிலெடுத்த சன் பிக்சர்ஸ்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
இரத்தணுக்களின் குறைவால் ஏற்படும் இரத்த சோகைக்கான சில வீட்டு சிகிச்சைகள்!
இரத்த சோகை என்னும் நிலை, உடலில் இரத்த சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதால் ஏற்படும். பொதுவாக இந்த பிரச்சனை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். ஒருவருக்கு இரத்த சோகை இருந்தால், அதை ஒருசில அறிகுறிகள் வெளிப்படுத்தும். அவை களைப்பு, சோம்பேறித்தனத்தை உணர்வது, மூச்சுவிடுவதில் சிரமம், படபடப்பு மற்றும் எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியாமல் இருப்பது போன்றவை.
உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிப்பது எப்படி?
இரத்த சோகை பிரச்சனையானது மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமாக இரத்தப் போக்கு, நாள்பட்ட இரும்புச்சத்து குறைபாடு, சிறுநீரக பிரச்சனைகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகளினால் வரும். இந்த இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க சிறந்த வழி உடலில் இரும்புச்சத்தின் அளவை அதிகரிப்பது தான். இங்கு இரத்த சோகையை சரிசெய்வதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இரத்த சோகை இருப்பதற்கான சில அறிகுறிகள்!!!
பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து, தினமும் 2 பேரிச்சம் பழம் உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகையைப் போக்கலாம்.
வெள்ளரிக்காய்
உடலில் பொட்டாசியம் குறைவாக இருந்தாலும், இரத்த சோகை ஏற்படும். அன்றாட உணவில் வெள்ளரிக்காயை சேர்த்து வாருங்கள். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து மட்டுமின்றி, பொட்டாசியம் ஏராளமாக நிறைந்துள்ளது.
ஜூஸ்
இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள், பழங்களில் ஆப்பிள் ஜூஸ் மற்றும் காய்கறி ஜூஸ்களில் பீட்ரூட், பசலைக்கீரை போன்றவற்றைக் கொண்டு ஜூஸ் செய்து தினமும் குடித்து வருவதன் மூலம் இரத்த சோகையைப் போக்கலாம்.
காய்கறிகள் மற்றும் பழங்கள்
பழங்களில் வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, திராட்சை மற்றும் காய்கறிகளில் கேரட், நெல்லிக்காய், தக்காளி போன்றவற்றில் இரும்புச்சத்து உள்ளது. எனவே இவை அனைத்தையும் கொண்டு சாலட் செய்து, அத்துடன் தேன் சேர்த்து உட்கொண்டு வர, இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
தேன்
தேனில் இரும்புச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், இவற்றை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தி வர, உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.
வைட்டமின் சி உணவுகள்
இரத்த சோகை இருப்பவர்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. ஏனெனில் வைட்டமின் சி சத்து தான் உடலில் இரும்புச்சத்து உறிஞ்ச உதவும்.
மூச்சுப் பயிற்சி
தினமும் மூச்சுப்பயிற்சி மற்றும் லேசான உடற்பயிற்சிகளான வாக்கிங் போன்றவற்றை மேற்கொண்டு வருவதன் மூலம், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரித்து நல்ல நிலையில் வைத்துக் கொள்ள முடியும்.
நட்ஸ்
இரத்த சோகை இருப்பவர்கள், நட்ஸ் சாப்பிடுவதன் மூலம் அதனைத் தடுக்கலாம். அதிலும் பாதாமை தினமும் உட்கொண்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும்.