Just In
- 1 hr ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 4 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 5 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காலையில் இட்லி, தோசை போன்ற உணவுகளை உட்கொள்வதால் பெறும் நன்மைகள்!
இங்கு நொதிக்க வைத்து உட்கொள்ளப்படும் உணவுகளால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மக்களிடையே பிட்சா, பர்கர், பாஸ்தா போன்ற உணவுகள் பிரபலமாக உள்ளது. அதிலும் பலர் இவற்றை காலை உணவாக சாப்பிடுகின்றனர். இந்த உணவுகள் தான் இருப்பதிலேயே உடலை மிகவும் மோசமாக பாதிக்கக்கூடியவைகள்.
ஆனால் பாரம்பரியமாக நாம் சாப்பிட்டு வரும் இட்லி, தோசை போன்ற புளிக்க வைக்கப்படும் உணவுகளில் ஏராளமான நன்மைகள் உள்ளடங்கியுள்ளது என்பது தெரியுமா? இங்கு நொதிக்க வைத்து உட்கொள்ளப்படும் உணவுகளால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
நன்மை #1
தானியங்கள், பீன்ஸ் வகைகளை நொதிக்க வைக்கும் போது, அவற்றில் உள்ள பைட்டிக் அமிலம் உடைக்கப்படுகிறது. பொதுவாக பைட்டிக் அமிலம் கனிமச்சத்துக்கள் உறிஞ்சுவதைத் தடுத்து, உணவுகள் செரிமானமாவதைத் தடுப்பதுடன், அசிடிட்டிக்கான அபாயத்தையும் அதிகரிக்கும். ஆனால் நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டால், செரிமானம் எளிதில் நடைபெறும் மற்றும் அந்த உணவில் உள்ள சத்துக்களும் உடலால் முழுமையாக உறிஞ்சப்படும்.
நன்மை #2
நொதிக்க வைத்த உணவுகளில் லேக்டோபேசில்லி உற்பத்தி செய்யப்படும். இது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்களான ஃபோலிக் அமிலம், நியாசின், தயமின், ஆன்டி-பயாடிக் மற்றும் ஆன்டி கார்சினோஜெனிக் சேர்மங்களின் தொகுப்புகளுக்கு உதவும்.
நன்மை #3
உணவுகள் நொதிக்கும் போது, அதில் உற்பத்தி செய்யப்படும் நல்ல பாக்டீரியாக்கள் உணவுகளை முன்பே செரிக்கச் செய்யும். இதனால் புளிக்க வைத்த உணவுகளை உட்கொண்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். ஆகவே தான் செரிமான பிரச்சனை மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை இட்லி சாப்பிட சொல்கிறார்கள்.
நன்மை #4
உணவுகளை நொதிக்க வைத்து சாப்பிடும் போது, அந்த உணவுகளில் நொதிகள் மற்றும் லாக்டிக் அமிலங்களின் உற்பத்தி அதிகரித்து, உண்ணும் உணவுகள் எளிதில் உடைக்கப்பட்டு, உணவில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உடலால் உறிஞ்சப்படும்.
நன்மை #5
நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது, குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும். குடலில் நல்ல பாக்டீரியாக்கள் சீரான அளவில் இருந்தால், குடலியக்க பிரச்சனைகள் ஏதுமின்றி, குடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இந்த வகையான உணவுகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், அசிடிட்டி போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.