Just In
- 10 min ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 3 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 8 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 11 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Don't Miss
- Movies படு மோசமான படுக்கையறை காட்சி.. ரஜினியின் ரீல் மகளை திட்டிதீர்க்கும் பேன்ஸ்!
- News எடப்பாடி பேசுவதை விடுங்க!ரிசல்ட்டுக்கு முன்பே அதிமுக பெரிய தலை போட்டுடைத்த மேட்டர்!இரட்டை இலை பதறுதே
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஏன் பச்சைத்தண்ணியை குடிக்கக் கூடாது?
உடலுக்கு தண்ணீர் மிக இன்றியமையாதது. ஆனால் தண்ணீரே பாதிப்புகளைத் தரும் என அறிவீர்களா? எப்போது என்றால் அதனை காய்ச்சி குடிக்காதபோது.
பச்சை தணியை குடிப்பதுதான் எல்லாருக்கும் பிடிக்கும். சுடு நீரை காய்ச்சல் வரும்போது கூட பெரும்பாலோனோர் விரும்புவதில்லை. ஆனால் பச்சை தண்ணி பல பிரச்சனைகளைத் தரும்.
நீரை கொதிக்க வைத்து குடிங்கள் என எல்லா மருத்துவர்களும் சொல்லக் கேட்டிருப்பீர்கள். ஆனால் வெறும் நோய்க்கான ஆறுதல் மட்டுமல்ல அதில் பல நன்மைகளும் உள்ளன என்பது தெரியுமா?
சுடு நீர் ஒரு விலையில்லா மருந்து என தெரியுமா?
சாதரணமாக குடிக்கும் நீரில் பல மினரல்கள், கிருமிகள் கலந்திருக்கும். அதோடு கார்பரேஷன் கிருமிகளை அழிக்க கலந்திருக்கும் குளோரின் போன்ற ரசாயனங்களின் நச்சுக்களும் இருக்கும்.
ஆகவே கொதிக்க வைக்காமல் நீரை குடிக்கும்போது, உடலிலுள்ள எதிர்ப்பு சக்திகள் மற்ற பிரச்சனைகளோடு சேர்த்து , இந்த நீரோடும் போராட வேண்டியிருக்கும். ஆகவே கொதிக்க வைக்காமல் நீரை குடிக்கக் கூடாது.
எவ்வாறு கொதிக்க வைக்க வேண்டும்?
குறைந்த பட்சம் 20 நிமிடங்கள், பாத்திரத்தை மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இதனால் கிருமிகள் முற்றிலும் அழிக்கப்படுகிறது. அதோடு கடின மினரல்கள் அடியில் தங்கிவிடும்போது வடிகட்டி குடிப்பதால் சிறு நீரக பாதிப்பும் இல்லாமல் இருக்கும்.
சுடு நீர் குடிப்பதால் நன்மைகள் -1:
உங்கள் குடல்களில் படலமாய் படிந்திருக்கும் கொழுப்பை கரைத்து வயிற்றிற்கு அனுப்பும். இதனால் ரத்தத்தில் கொழுப்பு சேராமல் காக்கப்படுகிறது.
சுடு நீர் குடிப்பதால் நன்மைகள்-2 :
காய்ச்சல், தொற்று ஏற்படும்போது ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு நன்றாக காய்ச்சிய சுடு நீரை வெதுவெதுப்பான நிலையில் குடித்தால் விரைவில் குணமாகும்.
நாள்பட்ட நோய்கள் இருப்பவர்கள் தேநீர் போல் அவ்வப்போது வெந்நீர் குடித்து வந்தால் நோய்களின் தீவிரம் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.
சுடு நீர் குடிப்பதால் நன்மைகள்-3 :
தினமும் போதிய இடைவேளைகளில் வெந்நீர் குடித்து வந்தால், ஆஸ்துமா, ஆர்த்ரைடிஸ், ஒற்றைத் தலைவலி, சரும வியாதிகள் ஆகியவை குறையும். இதய நோய்கள் வராது.
சுடு நீர் குடிப்பதால் நன்மைகள் -4
உடல் எடை குறையும். சுடு நீர் குடிக்கும்போது நச்சுக்களும், கழிவுகளும் வெளியேற்றப்படும்.கொழுப்பு கரையும். வளர்சிதை மாற்றம் துரிதமாக நடைபெறும்.