Just In
- 9 min ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 1 hr ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 3 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
இடுப்பு வலியை குறைக்கும் தண்டாசனா!!
இந்த கால கட்டங்களில், ஒவ்வொரு பாகத்திற்கும் புதிது புதிதாக நோய்கள் வருகிறது. இதனால் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு சிறப்பு மருத்துவர் தோன்றுகிறார்.
எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் போதிய சத்து கொண்ட காய்களை சாப்பிடாததே. ஆனால் வந்த வலியை போக்க, உடனடியாக வலி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் என சாப்பிடுவது நல்லது அல்ல.
சிறு சிறு பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு கண்டால் பல பெரிய நோய்களை தடுக்கலாம் என்பது சரிதானே.
அன்றாட வேலைகளாலும்,. தசைகளில் உண்டாகும் பிடிப்புகளாலும், முதுவலி, கால்வலி கை வலி என வருவது சகஜம்தான்.
அதே போன்று கீழ் முதுகு, கீழ் இடுப்பு, அடிபாகம், தொடை ,கால் ஆகியவற்றிலும் காரணம் தெரியாமல் வலி வரும். அதனை இடுப்பு கீல் வாயு என்று அழைப்பார்கள். இதற்கு என்ன செய்யலாம் . செய்வதற்கு மிக எளிதான இந்த யோகாவை செய்யலாம்.
தண்டாசனா :
தண்டாசனா செய்வது எளிது. தண்ட" என்றால் சமஸ்கிருதத்தில் குச்சி என்று பெயர். குச்சி போன்று மார்பு, முதுகை விறைப்பாக வைத்துக் கொள்வதால் இந்த யோகாவின் பெயர் பெற்றுள்ளது. இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை :
தரையில் கால் நீட்டி அமருங்கள். முதுகை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். மார்பை நிமிர்த்துங்கள்.பாத விரல்கள் மேலே நோக்கி இருக்கும்படி செய்யுங்கள்.
குதிகால்களுக்கு தரையில் அழுத்தம் தரவேண்டும். உள்ளங்கைகளை தரையில் ஊன்றி அழுத்தம் தர வேண்டும். இதனால் உடல் விறைப்பாக உயரும்.
கால்களை வளைக்காமல் நீட்ட வேண்டும். இப்போது மூச்சை இழுத்துவிடுங்கள். பின்னர் சாதரண மூச்சில் அரை நிமிடம் இருங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வாருங்கள்.
பலன்கள் :
முதுகுத் தசைகள் பலம் பெறும். அடிவயிற்றிற்கு சக்தி கிடைக்கும். ஒருமுகப்படுத்துதல் அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும். ஆஸ்த்மா கட்டுக்குள் வரும்.
குறிப்பு : கீழ் இடுப்பில் அடிபட்டவர்கள் இந்த யோகாவை தவிர்க்கவும்.