Just In
- 2 min ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
- 2 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 3 hrs ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 4 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
Don't Miss
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- News திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்குள் அந்த "சத்தம்".. கருவறை கிட்ட சேர்ல யாரு? திருவள்ளூர் கொடுமை
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
ஆயுர்வேத மருத்துவம், அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீருக்கு பதிலாக சுடுநீரைக் குடிப்பதால், இன்னும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம் என்று கூறுகிறது.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதற்கு முன் ஒரு டம்ளர் நீரைக் குடிப்பார்கள். இது உண்மையில் ஓர் ஆரோக்கியமான பழக்கம் தான். இருப்பினும் ஆயுர்வேத மருத்துவம், அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீருக்கு பதிலாக சுடுநீரைக் குடிப்பதால், இன்னும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம் என்று கூறுகிறது.
MOST READ: உங்க வயிறு 'பானை' போல அசிங்கமா இருக்கா? அப்ப 2 ஸ்பூன் தேனை தினமும் இப்படி சாப்பிடுங்க...
கீழே காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, நீங்கள் காலையில் காபி, டீ குடிப்பவராயின், அதைத் தவிர்த்து இனிமேல் சுடுநீரைக் குடியுங்கள்.
உறுப்புக்கள் சுத்தமாகும்
காலையில் வெறும் வயிற்றில் சுடுநீரை ஒரு டம்ளர் குடிப்பதல், உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடல் உறுப்புக்களின் செயல்பாடு சீராக இருக்கும்.
மெட்டபாலிசம் மேம்படும்
ஒருவர் காலையில் சுடுநீரை முதல் வேளையாகப் பருகினால், அவரது மெட்டபாலிசம் மேம்படுத்தப்பட்டு, உடல் உறுப்புக்களின் இயக்கம் சீராக இருக்கும்.
வலிகள் குறையும்
மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் வயிற்று வலியால் கஷ்டப்படும் போது, சுடுநீர் ஓர் நல்ல நிவாரணியாகக் கருதப்படுகிறது. ஏனெனில் சுடுநீர் வயிற்றுத் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, வலியைக் குறைக்கும். இது மாதவிடாய் வலிகள் மட்டுமின்றி, உடலில் ஏற்படும் இதர வலிகளையும் போக்கும்.
எடை குறையும்
உடல் எடை அதிகம் இருப்பவர்கள், காலையில் வெறும் வயிற்றில் சுடுநீரைப் பருகுவதன் மூலம், உடலின் வெப்பநிலை அதிகரித்து, மெட்டபாலிசம் மேம்பட்டு, கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் வேகமாக கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.
இரத்த ஓட்டம் மேம்படும்
முக்கியமாக சுடுநீரை அதிகாலையில் பருகுவதன் மூலம், உடலில் நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
முதுமை தடுக்கப்படும்
இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறுகின்றனர். இதனைத் தடுப்பதற்காக எத்தனையோ க்ரீம்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அப்படி கண்டதைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, சுடுநீரை தினமும் பருகி வந்தால், விரைவில் முதுமை தோற்றத்தைப் பெறுவதைத் தடுக்கலாம்.
செரிமானம் மேம்படும்
முக்கியமாக சுடுநீரை காலையில் பருகி வந்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது குறையும். மேலும் மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்றவை ஏற்படாமலும் இருக்கும்.