Just In
- 3 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 6 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 7 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 8 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சுற்றுப்புற மாசினால் பக்கவாதம் அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்!
மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று லான்ஸெட் நியூராலஜி என்ற இதழில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
பக்கவாதத்தினால் உண்டாகும் வாய்குழறுதல், கண் பார்வை குறைதல், குழம்பிய நிலை போன்ற விளைவுகளுக்கு சுற்றுப்புற மாசும் ஒரு காரணம் என்று ஆய்வு ஒன்று கூறுகின்றது.
1990 -2013 ஆம் ஆண்டு வரை சுமார் 188 நாடுகளிலிருந்து பக்கவாதம் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ளும்போது இது தெரியவந்துள்ளது.
இதில் வளரும் நாடுகளில் 33 சதவீதமும், வளர்ந்த நாடுகளில் 10 சதவீதமும், மாசினால் பக்கவாதம் வர வாய்ப்புகள் அதிகம் என கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் புகைபிடித்தல், மது, கடினமான வாழ்க்கைமுறை, மோசமான உணவுப் பழக்கம், போதுமான அள்வு உடலுக்கு பயிற்சி தராமல் இருப்பது ஆகியவையும் பக்கவாதத்திற்கான காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர் வாலரே ஃபீஜின் என்பவர் கூறுகின்றார்.
வளரும் நாடுகளில் இவை எல்லாம் கலந்த கலவையாக, மாசுபட்ட காற்று, புகைப்பிடித்தல், சத்தில்லாத உணவு ஆகியவைதான் பக்கவாதத்தை உண்டாக்குகிறது என அவர் கூறுகின்றார்.
சுற்றுப் புற மாசினைப் போலவே வீட்டில் உருவாகும் மாசினாலும் பக்கவாதம் உண்டாகும் என ஆய்வு தெரிவிக்கின்றது. வீட்டில் சமையலில் உபயோகப்படுத்தப்படும் எரிபொருள்கள் மாசினை உண்டாக்குகின்றன. அவற்றிலேயே நாள் முழுவதும் இருக்க வேண்டிய சூழ் நிலையில் பக்க வாதம் வரலாம்.
அவர் மேலும் கூறியதாவது, ஒவ்வொரு வருடமும் சுமார் 15 மில்லியன் மக்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.
ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள், சோடியம் உப்பை அதிகமாய் உணவில் சேர்த்துக் கொள்பவர்கள், குறைவான சத்து கொண்ட உணவினை உண்பவர்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளாதவர்கள், வீட்டினுள் உண்டாகும் மாசு ஆகியவைகளால் பக்கவாதம் உண்டாகும் ஆபத்து உள்ளது.
மாசுபட்ட காற்று என்பது ஒரு குறிப்பிட்ட நகரை மட்டும் பாதிப்பது அல்ல, ஒட்டுமொத்த உலகத்தையும் பாதிக்கும். ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
நாளுக்கு நாள் தட்பவெப்ப நிலை அதிகரிக்கச் செய்யும். முக்கியமாக இந்தியா மற்றும் சீனா நாட்டில் சுற்றுபுற மாசினை கட்டுப்படுத்த வேண்டும், எரிபொருள் உபயோகப்படுத்துவதை குறைக்க வேண்டும் என்று இந்த ஆய்வு அறிவுறுத்துகின்றது.