Just In
- 24 min ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 1 hr ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 2 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 3 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
Don't Miss
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
புகைப்பிடிக்காமல் இருந்தாலும் நுரையீரல் புற்று நோய் வருமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!
புற்று நோய் பயங்கரமான நோய்தான். ஆட்கொல்லிதான்.. ஆனால் அதனை ஆரம்ப காலக்கட்டங்களிலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். அப்படி நுரையீரல் புற்று நோயை எபப்டி கண்டறிவது என தெரியுமா?
நெஞ்சு வலிதான் நுரையீரல் புற்று நோயின் அறிகுறி என்பது எல்லாருக்கும் தெரிந்த அறிகுறிதான். ஆனால் அதைத் தவிர்த்து பல அறிகுறிகள் வெளிப்படும்.
அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும். . ஆகவே எதையும் நேர்மறையாகவும், தைரியமாகவும் எதிர் நோக்கினால் நோய் நம்மை விட்டு விலகும்.
நுரையீரல் புற்று நோய்ப் பற்றி உங்களுக்கு தெரியா சில விஷயங்கள் இங்கே..தொடர்ந்து படியுங்கள்.
புகைப்பிடிக்காதவர்களுக்கு வருமா?
ஆமாம். வீடுகளில் உருவாகும் வாசமில்லா ரேடான் என்ற வாயுவினால் நுரையீரல் புற்று நோய் வர வாய்ப்பு இருக்கிறது. சுற்றுபுறத்தில் இருக்கும் மாசுபட்ட காற்றை தொடர்ந்து வெகு வருடங்கள் சுவாசிப்பதாலும் புற்று நோய் உருவாகும் வாய்ப்புகள் இருக்கின்றன.
தொடர்ந்து இருமல் :
தொடர்ந்து இருமல் மாதக்கணக்கில் இருந்தால், அவ்வப்போது ரத்தம் கலந்து சளி வெளிப்பட்டால் அல்லது பழுப்பு நிறத்தில் சளி உண்டானாலும் அது நுரையீரல் புற்று நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
நாள்பட்ட நுரையீரல் தொற்று :
மாதக்கணக்கில் நுரையீரல் பாதிப்பு இருந்தால், எப்போதும் கபத்தினால் சிரமப்பட்டால் அதுவும் ஒரு அறிகுறிதான். அடிக்கடி நுரையீரல் தொற்று உண்டாகி தொடர்ந்து இருமல் மற்றும் கபம் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
உடல் எடை குறைதல் :
காரணமில்லாமல் உடல் எடை குறைந்தால் உடனடியாக பரிசோதித்துக் கொள்வது நல்லது. உடற்பயிற்சி, டயட் இல்லாமல் இருந்தும் உடல் எடை குறைவதும் இதன் அறிகுறிகளில் ஒன்றாகும்.
எலும்பு வீக்கம் மற்றும் வலி :
நுரையீரல் புற்று நோய் பரவி மற்ற உறுப்புகளுக்கும் அடையும்போது, எலும்புகள், மூட்டுகளில் தாங்க முடியாத வலி உண்டாகும்.
முகம் மற்றும் கழுத்தில் வீக்கம் :
நுரையீரல் புற்று நோய் ஆரம்பித்த நிலையில் கழுத்து மற்றும் முகத்தில் வீக்கம் உண்டாகும். மேலும் தோள்பட்டைகளும், மார்பிலும் வலி உண்டாகும்.
மிக அதிகமான சோர்வு :
படுக்கையிலிருந்தே எழ முடியாத அளவிற்கு சோர்வு தலைதூக்கும். பெரும்பாலான நுரையீரல் புற்று நோய்களுக்கு மிக அதிகமான சோர்வு காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இடுப்பு தசைகள் பலவீனம் :
நுரையீரல் புற்று நோயின் அறிகுறிகளில் ஒன்று இடுப்பு தசைகள் பலவீனமாவதும். நாற்காலியிலிருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு தசைகள் பலவீனப்படும்.
அதிக கால்சியம் :
அதிக கால்சியம் ரத்தத்தில் கலக்கும். அதோடு, சிறுநீரகம் வழியாகவும் அதிக கால்சியம் வெளியேறும். இதனை மருத்துவ பரிசோதனையில் தெரிந்து கொள்ள முடியும்.