Just In
- 1 hr ago மோனாலிசா ஓவியத்தில் இருக்கும் பெண் மோனாலிசாவே இல்லையாம்...ஆறு குழந்தைக்கு தாயான இந்த பெண்ணின் பெயர் இதுதானாம்!
- 4 hrs ago இந்திய வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றங்களை செய்த கொடூர அரசர்கள்... இவர்கள் அரசர்கள் இல்லை அரக்கர்கள்...!
- 7 hrs ago இந்த 4 ராசி ஆண்கள் குறும்புத்தனத்தால அவங்க மனைவியை படாதபாடு படுத்துவர்களாம்... உங்க கணவர் ராசி இதுல இருக்கா?
- 11 hrs ago 1 கைப்பிடி புதினாவும், 1 கப் வேர்க்கடலையும் இருந்தா.. இந்த மாதிரி ஒருமுறை செய்யுங்க.. செமயா இருக்கும்..
Don't Miss
- Movies Actor Ajith: பிரியாணி சமைத்துவிட்டு ஹாயாக என்ஜாய் செய்த அஜித்.. ரீசண்ட் கிளிக்ஸ் இதோ!
- News விடாத கெஜ்ரிவால்.. அமலாக்கத்துறை காவலுக்கு எதிராக டெல்லி கோர்ட்டில் மனு.. அவசரமாக விசாரிக்க கோரிக்கை
- Automobiles 100 கி.மீ மைலேஜ் தரும் பைக், சென்னை டூ பெங்களூரு விரைவு வந்தே பாரத் என இந்த வாரத்தின் டாப் 10 செய்திகள்!
- Finance அலேக்கா, 12 வீடுகளை வாங்கிய ரேகா ஜூன்ஜூன்வாலா.. அதவும் 'இந்த' ஏரியாவுல.. வாவ்..!!
- Sports ரூ.11.75 கோடி கொடுத்து வாங்குனதுக்கு.. கடைசி ஓவரில் 25 ரன்கள்.. ஹர்சலை பொளந்த டெல்லி இளம் வீரர்!
- Travel பெங்களூரில் உள்ள ‘ஸ்னோ சிட்டி’ – உங்கள் வீட்டு குழந்தைகளுடன் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்!
- Technology 5352 நகரங்கள்.. அம்புட்டு பேருக்கும் 1000GB.. கிள்ளி கொடுக்குற பழக்கமே அம்பானி கிட்ட இல்ல.. அள்ளி தர்றாரு!
- Education டிஎன்பிஎஸ்சி குரூப்-1 நேர்முகத் தேர்வுக்கு இலவச பயிற்சி
தூங்கும் போது ஆளை அமுக்கும் 'அமுக்குவான் பேய்' பற்றி தெரியுமா?
தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒன்று அமுக்குவது போன்று உள்ளதா? அந்நேரத்தில் உங்களால் கண்ணைத் திறக்கவோ அல்லது கத்தவோ அல்லது எழவோ, ஏன் கை, கால்களைக் கூட அசைக்க கூட முடியாத அளவில் இருந்தீர்களா?
தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒன்று அமுக்குவது போன்று உள்ளதா? அந்நேரத்தில் உங்களால் கண்ணைத் திறக்கவோ அல்லது கத்தவோ அல்லது எழவோ, ஏன் கை, கால்களைக் கூட அசைக்க கூட முடியாத அளவில் இருந்தீர்களா? அப்படியெனில் நீங்கள் தூங்கும் அறைக்குள் அமுக்குவான் பேய் உள்ளது என்று அர்த்தம். இந்த பேய் இரவில் மட்டுமின்றி, பகலில் கூட வரும்.
இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் தவிப்பதற்கான காரணங்கள்!!!
இந்த பேய் முருங்கை மரத்தில் அல்லது புளிய மரத்தில் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இது கண்ணாடி, பீரோ, கட்டிலுக்கு அடியில் கூட இருக்கும். இந்த பேயால் உயிர் போகாவிட்டாலும், இது மிகவும் கொடூரமான பேய் என்றெல்லாம் பேய் கதை சொல்லலாம். ஆனால் உண்மையில் அமுக்குவான் பேய் என்பது ஒரு வகையான தூக்க பக்கவாதம். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு 5 அட்டகாசமான யோகாசனங்கள்!!!
தூக்க பக்கவாதம்
அமுக்குவான் பேய் என்று அழைக்கப்படும் தூக்க பக்கவாதம் ஒரு நிகழ்வாகும். இந்த நிகழ்வின் போது விழித்திருக்கும் நிலையில் எச்செயலையும், அதாவது பேசவோ, எழுந்திரிக்கவோ, கை, கால்களை அசைக்கவோ முடியாத நிலையில் இருப்பதாகும். இது விழித்திருக்கும் நிலை மற்றும் தூக்கத்திற்கு இடைப்பட்ட, முழுத்தசை பலவீனத்தால் ஏற்படுவதாகும்.
தூக்க பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது?
பத்தில் 4 பேர் நிச்சயம் இந்த தூக்க பக்கவாதத்தை அனுபவித்திருப்பார்கள். இது எந்த வயதினருக்கும் ஏற்படலாம். முக்கியமாக இந்த நிலை ஏற்படுவதற்கு, அதிகப்படியான பயத்துடன் தூங்குவது, தூக்கமின்மை, தூங்கும் நேரத்தில் மாற்றம், அதிகப்படியான மன அழுத்தம், முதுகில் படுப்பது, ஒருசில மருந்துகள் போன்றவை இந்த தூக்க பக்கவாத்திற்கு காரணிகளாகும்.
தூக்க பக்கவாத வகைகள்
தூக்க பக்கவாதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவை தனிமைத் தூக்க பக்கவாதம் மற்றும் தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் ஆகும்.
தனிமைத் தூக்க பக்கவாதம்
தனிமை தூக்க பக்கவாதம் என்பது ஒருவருக்கு எப்போதாவது 2 நிமிடத்திற்கும் குறைந்த நேரத்தில் நிகழும். இதனால் எவ்வித பிரச்சனையும் இல்லை.
தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம்
தொடர் தனிமைத் தூக்க பக்கவாதமானது அடிக்கடி வரும். அதிலும் சிலருக்கு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இது நிகழும். இத்தகையவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வருவது நல்லது.
தூக்க பக்கவாதத்தினால் ஏதேனும் ஆபத்து உள்ளதா?
தூக்க பக்கவாதம் என்பது தூங்கும் போது உடலானது மென்மையான இயக்கத்தில் இல்லை என்பதற்கான சாதாரண அறிகுறியே என்றும், அரிதாக தூக்க பக்கவாதத்திற்கும், உளவியல் பிரச்சனைக்கும் தொடர்ப்புள்ளதாகவும் தூக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.