Just In
- 1 hr ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 3 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 6 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 12 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Don't Miss
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- News நடிகர் விஜய்க்கு புதிய சிக்கல்.. ஓட்டுப்போட வந்தது குத்தமா? போலீசுக்கு பறந்த பரபர புகார்.. அடபாவமே
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Movies கணவருடன் செம ரொமான்ஸ்.. சங்கர் மகள் ஐஸ்வர்யா தருணின் போட்டோஷூட்!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
ஃபேஸ்புக் எனும் அமெரிக்க உளவாளியால் நாம் இழந்தவை என்னென்ன என்று தெரியுமா?
நமது வாழ்க்கையை, அதில் மறைத்து வைக்க வேண்டிய அந்தரங்க பக்கங்களை எல்லாம் ஃபேஸ்புக் எனும் மாற்றானிடம் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறோம். இதை ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டு அதிகமாக பகிர்ந்து வருகிறோம். பொதுவாகவே மனிதர்களின் அடிப்படையில் நாம் மற்றவரது வாழ்க்கையை படிக்கவே அதிகம் முயற்சிப்போம். இதில் ஆண், பெண் என்ற பேதம் எல்லாம் இல்லை.
நடுத்தெருவில் கூறுபோட்டு விற்பதும், ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதில், நமது வாழ்க்கை பக்கங்களுக்கு வேறொருவர் பதிப்பெண் இட வேண்டும் என்று வேண்டுகிறோம். நமது வாழ்க்கை நமக்கு நாமே எழுதிக் கொள்ளும் பரீட்சை. அதை பொத்தாம் பொதுவாக அனைவரின் பார்வைக்கும் வைக்க ம்யூசியம் இல்லை....
உண்மையான மகிழ்ச்சி
ஃபேஸ்புக் எனும் அமெரிக்க உளவாளியால் நாம் இழந்த முதல் விஷயம் உண்மையான மகிழ்ச்சி, உறவு மற்றும் கருத்துள்ள வாழ்க்கை. இதன் வரவால் நாம் வாழ்க்கையின் மதிப்பை குறைத்து வருகிறோம் என்பது தான் உண்மை. மற்றவரது வாழ்க்கையை பார்க்க நமது வாழ்க்கையை இரையாக்கி வருகிறோம்.
உற்பத்தி திறன் குறைவு
குறைந்தபட்சம் அரைமணி நேரத்திற்கு ஒருமுறையாவது நாம் ஃபுக்கை நோண்டாமல் இருப்பது இல்லை. இது தான் நமது உற்பத்தி திறனை பெருமளவில் குறைக்கிறது.
கடமையை நிறைவேற்ற முடியும்
உங்கள் வாழ்க்கையின் கடமையை கொஞ்சம், கொஞ்சமாக கரையான் போல அரித்து வருகிறது ஃபேஸ்புக். மாயை உலகான ஃபேஸ்புக் நமது நிஜ உலகை திரையிட்டு மறைத்து வருகிறது. லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸ் என்ற இரட்டை வார்த்தைகளில் நாம் நமது பொன்னான நேரத்தை விரயம் செய்து வருகிறோம்.
உறவுகள் மேம்படும்
முன்பெல்லாம் ஓர் நட்பு வட்டாரம் என்றிருந்தால் கலகலப்பாக இருக்கும். நண்பரின் வீட்டுக்குள் சென்றால் ரகளையாக இருக்கும். இப்போதெல்லாம் நண்பனின் வீட்டுக்குள் செல்லும் போதே, வை-பை பாஸ்வேர்டு என்னடா.. என்று சொல்லியபடி தான் செல்கிறார்கள். உடனே ஃபேஸ்புக், ஒருவர் மற்றொருவது ப்ரொபைலை பார்ப்பது, லைக் கேட்டு கெஞ்சுவது என்ற போக்கிலேயே நேரம் கழிந்துவிடுகிறது.
உண்மையான அழகு
நமது உலகில் இருக்கும் உண்மையான அழகை நாம் காண மறந்து வருகிறோம். ப்ரொபைல் படத்திற்கு போட்டோஷாப் செய்வது போல தான், நமது ஊர்களையும் எடிட் செய்து அழகாக காண்பித்து வருகிறோம். அதை ஏன் நாம் நேரடியாக செய்ய முன்வரக் கூடாது?
சிறப்பான மாற்றம்
சமூக வலைத்தளமே வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. அதில் தேவையின்றி கழிக்கும் மிகுதியான நேரத்தை நல்ல வழியில் செலவழிக்கலாம். இதன் மூலம் உங்கள் வாழ்வில் நீங்கள் சிறந்த முன்னேற்றத்தை, நல்ல மாற்றத்தை காண இயலும்.
எதிர்காலம் சிறக்கும்
இவ்வாறு நீங்கள் செய்வதால், நாளை இரண்டடி உயரம் செல்வதற்கு மாறாக, பல அடிகள் உங்கள் வாழ்வில் உயரம் காணலாம். தொழில், கல்வி, உறவு என அனைத்திலும் இது சாத்தியமாகும்.