Just In
- 5 min ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 1 hr ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 1 hr ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 2 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- Sports எத்தனை விக்கெட் போனாலும் சரி.. கதறவிட்ட குஜராத் டைட்டன்ஸ்.. கதிகலங்கிப் போன டெல்லி கேபிடல்ஸ்
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எச்சிலை வைத்தே உங்கள் மரணத்தை பற்றி கூறிவிட முடியும் - லண்டன் ஆய்வு தகவல்!
பொதுவாகவே நமது உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும், கண், வாய், சருமத்தில் தோன்றும் அறிகுறிகளை வைத்தும் நமது உடலில் ஏதேனும் குறைபாடு அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என கண்டறிய முடியும்.
எச்சில் துப்புவது என்பது நமது ஊர்களில் ஒருவரை அவமதிப்பது போலவும், ஓர் அநாகரீக செயலாகவும் காணப்படுகிறது. ஆனால், லண்டனில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சிலை வைத்து மரணத்தை முன்னரே அறிய முடியும் என ஓர் ஆய்வின் மூலமாக கண்டறிந்துள்ளனர்.
ஆன்டி-பாடீஸ் குறைவு
உங்கள் எச்சிலில் ஆன்டி- பாடி எண்ணிக்கை குறைவதை வைத்தே நீங்கள் மரணமடையும் அபாயத்தில் உள்ளீர்கள் என கண்டறியலாம்.
இம்யூனோக்ளோபுலின் சுரப்பி
பர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சிலர் இம்யூனோக்ளோபுலின் ஏ சுரப்பி ( Immunoglobulin A - IgA) குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தான், எச்சிலில் இருக்கும் பொதுவான ஆன்டி- பாடி எண்ணிக்கை மரண விகித்தத்தோடு ஒத்துப்போவது தெரிய வந்தது.
தொற்று நோய் அபாயம்
வெள்ளை இரத்த அணுக்களில் சுரக்கப்படும் புரதங்கள் ஆகிய இம்யூனோக்ளோபுலின் (அ) ஆன்டி-பாடீஸ் தொற்று நோய்களை எதிர்த்து போராடும் திறன் வாய்ந்தது ஆகும். இந்த ஆய்வில் இம்யூனோக்ளோபுலின் ஏ சுரப்பி ( Immunoglobulin A - IgA) -ல் ஏற்படும் / அதிகரிக்கும் எதிர்மறை சதவீதத்தை வைத்து மரணத்தை கணக்கிட முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.
புற்றுநோய் மரணங்கள்
நுரையீரல் தவிர்த்து மற்ற வகை புற்றுநோய் மரணங்கள் ஏற்படுவதை கூட இதை வைத்து அறிய முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தாக்கங்கள்
வயது, பாரம்பரியம், உடல்நலக் குறைபாட்டுடன் சேர்த்து மன அழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மதுப் பழக்கம், புகை போன்றவை இம்யூனோக்ளோபுலின் (அ) ஆன்டி-பாடீஸ் சதவீதம் குறைய காரணிகளாக இருக்கின்றன.
ஆய்வில் கலந்துக் கொண்டவர்கள்
இந்த ஆய்வில் மொத்தம் 639 நபர்கள் கலந்துக் கொண்டனர். 1995-ம் ஆண்டு இவர்கள் 63 வயதில் இருந்த போது எச்சில் சேமிக்கப்பட்டது. ஏறத்தாழ 19 ஆண்டுகள் இவர்களை பின்தொடர்ந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வாசிரியர்
பர்மிங்காம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிலிப்ஸ் எனும் ஆய்வாசிரியர் தான் இந்த ஆய்வை நடத்தினார். உடல்நல பரிசோதனை செய்யும் போது எச்சிலை வைத்தும் பரிசோதிக்க வேண்டும். இதை வைத்து நமது உடலில் பாதுகாப்பு அளவு எந்தளவு இருக்கிறது என கண்டறிய முடியும் என பிலிப்ஸ் கூறியுள்ளார்.