Just In
- 1 hr ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 1 hr ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 2 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 3 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- News கரன்ட் இல்லாத நேரங்களிலும் இயங்குவதுதான் இன்வெர்ட்டர் ஏசியா?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Movies பீரியட்ஸ் நேரத்தில் அதை குடிக்க மாட்டேன்.. நான் ரொம்ப சுயநலக்காரி.. பிகில் நடிகை பகீர்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கோடையில் தொல்லைத் தரும் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி...?
வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் பல்வேறு உடல்நல பிரச்சனைகளும் ஆரம்பமாகும். அப்படி கோடையில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் சிறுநீரக கற்கள். இந்தியாவில் மட்டும் சிறுநீரக கற்களால் கிட்டத்தட்ட 5-7 மில்லியன் மக்கள் கஷ்டப்படுகின்றனர். மற்ற காலங்களுடன் ஒப்பிடுகையில் கோடையில் தான் சிறுநீரக கற்கள் அதிகம் ஏற்படும். அதிலும் கோடையில் அதிகப்படியான வெயிலினால் 40% அதிகமாக சிறுநீரக கற்கள் வரும் வாய்ப்புள்ளது. காலநிலை, வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்றவை தான் சிறுநீரக கற்கள் வருவதற்கு முக்கிய காரணிகளாகும்.
அதுமட்டுமின்றி, கோடையில் கொளுத்தும் வெயிலினால் உடலில் இருந்து அதிகப்படியான நீரானது வியர்வையின் வழியே வெளியேறுகிறது. இருப்பினும் பெரும்பாலான மக்கள் தண்ணீர் அதிகம் குடிக்காமல், உடலில் நீர் வறட்சி ஏற்படுகிறது. இப்படி உடலில் வறட்சி ஏற்படுவதால், சிறுநீரின் அடர்த்தி அதிகரித்து, அதனால் சிறுநீரக கற்கள் உருவாகிறது.
சரி, இப்போது கோடையில் சிறுநீரக கற்கள் உருவாவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போம்.
தண்ணீர் அதிகம் குடிக்கவும்
கோடையில் பகலிலும், இரவில் படுக்கும் முன்னும் தண்ணீர் அதிக அளவில் குடிக்க வேண்டும். அப்படி குடிப்பதோடு, ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை சிறுநீரை வெளியேற்ற வேண்டும். கோடையில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கி வைத்தால், அவை சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும். எனவே கோடையில் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை தவறாமல் குடியுங்கள்.
எலுமிச்சை ஜூஸ்
கோடையில் தாகத்தை தணிக்க எலுமிச்சை ஜூஸை குடித்து வருவதன் மூலட், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
ஆக்ஸலேட் உணவுப் பொருட்களை தவிர்க்கவும்
கோடையில் ஆக்ஸலேட் என்னும் ஆசிட் அதிக அளவில் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை சிறுநீரகத்தில் கால்சியம் ஆக்ஸலேட் சிறுநீரக கற்களை உருவாக்கும். இந்த ஆசிட் நிறைந்த உணவுப் பொருட்களாவன சோடா, ஐஸ் டீ, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி, நட்ஸ் போன்றவை.
காப்ஃபைனைக் குறைக்கவும்
காப்ஃபைன் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் காப்ஃபைன் உடல் வறட்சியை ஏற்படுத்தும்.
உப்பை தவிர்க்கவும்
கோடையில் உணவில் உப்பை அதிகம் சேர்க்க வேண்டாம். அப்படி உப்பை அதிகம் சேர்த்தால், அதுவும் சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும்.
விலகுங்களின் புரோட்டீன்
விலங்குகளின் புரோட்டீன்களை எடுத்து வரவும். அதிலும் இறைச்சி, முட்டை, மீன் போன்றவற்றை எடுத்து வர வேண்டும். ஏனெனில் இதில் உள்ள பியூரின்ஸ் என்னும் பொருள் யூரிக் ஆசிட்டாக மாற்றும்.
சாலட்டுகளை எடுக்கவும்
கோடையில் அதிக அளவில் சாலட்டுகளை எடுத்து வர வேண்டும். இதனால் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடியும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சியை தவறாமல் தினமும் செய்து உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.