Just In
- 1 hr ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- 2 hrs ago சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- 2 hrs ago அனுமன் ஜெயந்தியன்று உருவாகும் அரிய யோகங்கள்: இன்று இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப் போகுது..
- 3 hrs ago சித்ரா பெளர்ணமியில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்... செல்வம் சேரும்..!
Don't Miss
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- News முஸ்லீம்களுக்கு சொத்து..மோடியின் நச்சுக் கருத்து..! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்..திருமா சுளீர்
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தினசரி ஏற்படும் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வீட்டு மருத்துவம்!!
வாழ்க்கையில் மட்டுமல்ல நம் உடலிலும் சின்ன, சின்ன பிரச்சனைகள் தினசரி எழுந்துக் கொண்டே தான் இருக்கும். அதில் சில பிரச்சனைகள் வெளியில் தலைக் காட்ட முடியாத வண்ணம் இருக்கும். எடுத்துக்காட்டாக பரு, கரு வளையம், பொடுகு போன்றவை.
சில பிரச்சனைகளோ நம்மை படுத்தி எடுத்துவிடும், வாய்ப்புண், தொண்டை கரகரப்பு, மற்றும் பெண்களின் மாதவிடாய் போன்றவை. இவை எப்போதோ வந்து போகும் சாதாரண எதிரிகள் அல்ல, எப்போதுமே அண்டிக்கொண்டு பாடாய்பட்டுத்தும் மோசமான விரோதிகள்.
காய்ச்சல், சளி கூட ஓரிரு நாட்களில் விட்டொழிந்துவிடும், ஆனால் இவை மாத கணக்கில் ஒண்டிக்கொண்டு கடுப்பேத்தும் மை லார்ட்!!! இதற்கு நீங்கள் எத்தனையோ மருந்துகள் பயன்படுத்தியும் தீர்வுக் கிடைக்கவில்லையா? உங்கள் வீட்டிலேயே இருக்கும் மருந்துகளை பயன்படுத்துங்கள் எளிதாக தீர்வுக் காணலாம்.....
மாதவிடாய் வலி
இரண்டு அல்லது மூன்று எலுமிச்சைப்பழ சாற்றை குளிர்ந்த நீரில் கலந்து தினசரி குடித்து வந்தால் மாதவிடாய் வலி குறையும்.
நாள்பட்ட தலைவலி
காலை வேளையில் அறுத்த ஆப்பிள்களில் கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்
வாய்வு
கால் டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நீரில் கலந்து குடித்து வந்தால் வாய்வு தொல்லை தீரும்.
தொண்டை கரகரப்பு
நீரில் கொஞ்சம் துளசி இலைகளை போட்டு காய்ச்சி, வடிகட்டி வாய் கொப்பளித்தால் தொண்டை கரகரப்பு சரி ஆகும்.
வாய் புண்
பழுத்த வாழைப்பழத்தை தேனுடன் குழப்பி பேஸ்ட் போன்று செய்து வாய் புண் இடத்தில் தடவினால் சீக்கிரம் வாய்ப்புண் சரி ஆகும்.
ஆஸ்துமா
ஒரு டேபிள்ஸ்பூன் தேனுடன், அரை டேபிள்ஸ்பூன் இலவங்கப் பட்டையை சேர்த்து இரவு தூங்குமுன் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா பிரச்னை தீரும்.
பொடுகு
பொடுகு பிரச்சனைக்கு தீர்வுக் காண, தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் கற்பூரம் கலந்து, இரவு தூங்குவதற்குக் முன் தலையில் தேய்த்து கொண்டு உறகுங்கள்.
இளநரை
காய்ந்த நெல்லிக்காயை அறுத்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் நன்கு மசாஜ் செய்வது போல தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.
கரு வளையம்
ஆரஞ்சு ஜூஸ் மற்றும் கிளிசரின் சேர்த்து கலந்து, கருவளையம் உள்ள இடத்தில் தடவி வந்தால் கருவளையம் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணலாம்.