Just In
- 4 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 6 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 6 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 7 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு 5 அட்டகாசமான யோகாசனங்கள்!!!
நீங்கள் இரவில் சரியாகத் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? எப்போதும் உங்களுக்குக் களைப்பாக இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். இப்படி இரவில் தூங்காமலிருந்தால் பகலிலும் அதன் தாக்கம் மோசமாக இருக்கும். களைப்பு இன்னும் அதிகமாகி உங்களைச் சூழ்ந்து கொள்ளும். தூக்கமின்மை குறைபாட்டுக்குப் பல காரணங்கள் உள்ளன.
இரவில் கவலையை மறந்து நிம்மதியாக தூங்க வேண்டுமா? இதோ சில வழிகள்!!!
பெரும்பாலும், கடுமையான வேலை அல்லது மன அழுத்தம் ஆகியவை காரணமாகத் தூக்கமின்மை உண்டாகிறது. இந்தியாவில் சுமார் 5 சதவீதம் மக்கள் இந்தக் குறைபாட்டால் அவதிப்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
சில யோகாசனங்களைத் தவறாமல் செய்வதன் மூலம் இந்த இன்சோம்னியாவை சரி செய்து, நாம் இரவில் நிம்மதியாகத் தூங்கி பகலிலும் சுறுசுறுப்பாக இருக்கலாம். அந்த யோகாசனங்களைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.
நீங்க தூங்குற 'லட்சணத்திலேயே' உங்க பெர்சனாலிட்டியை தெரிஞ்சுக்கலாமாம்...!
பஸ்சிமோத்தாசனம் (Paschimottanasana)
இந்த ஆசனத்திற்கு, முதலில் நாம் தரையில் உட்கார்ந்து கால்களை நேராக நீட்டிக் கொள்ள வேண்டும். பிறகு கைகளை தலைக்கு மேலே உயர்த்தி, மெதுவாகக் குனிந்து கைகளால் பாதங்களைத் தொட முயற்சிக்க வேண்டும். அதே நேரத்தில் நம் கால் முட்டிகளில் தலை உரச வேண்டும். குனியும் போது நன்றாக மூச்சை வெளியேற்றி, பின்னர் மூச்சை சிறிது நிறுத்தி, அதன் பிறகு தலையை நிமிர்த்தும் போது மூச்சை இழுக்க வேண்டும். இந்த ஆசனத்தை ஒரு நாளுக்கு பல முறை செய்தால் சோர்வுகள் பறக்கும். இரவில் நிம்மதியாகத் தூங்கலாம்.
உத்தனாசனம் (Uttanasana)
நேராக நின்று, நம் இரு கைகளையும் முன்புறமாகத் தலைக்கு மேலே உயர்த்த வேண்டும். பின்னர் அப்படியே முன்புறமாகக் கீழே குனிந்து, கால் முட்டிகளை மடக்காமல் கைகளால் தரையைத் தொட வேண்டும். ரொம்ப கஷ்டமாக இருந்தால் கொஞ்சம் முட்டியை மடக்கிக் கொள்ளலாம். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு, கைகளை நீட்டியவாறே மெதுவாக நிமிர்ந்து, கைகளை தலைக்கு மேலே கொண்டுவந்து, பின்னர் கீழே இறக்கிக் கொள்ளலாம். இந்த ஆசனம் செய்யும்போது, நம் ரத்தம் தலையில் பாய்வதால், நரம்பு மண்டலங்கள் மிகவும் சுறுசுறுப்பாகும்.
அபானாசனம் (Apanasana)
இந்த ஆசனம் செய்வதற்கு, நாம் முதலில் தரையில் மல்லாந்து படுத்து, கைகளை கால் முட்டிகளில் வைக்க வேண்டும். பின்னர் கால்களை மடக்கி அவற்றை மார்பில் வந்து படுமாறு இழுக்க வேண்டும். அப்போது சீராக மூச்சை இழுத்து விட வேண்டும். சிறிது நேரம் கழித்து, கால்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம். இந்த ஆசனம் செய்யும்போது, நம் தொடைகள் மற்றும் கழுத்தில் உள்ள தசைகள் முறுக்கேறி, உடலின் பின்புறம் முழுவதும் ரிலாக்ஸாகும். இதனால் மனம் அமைதியாகி, தொப்பையும் குறைய வாய்ப்புள்ளது.
சுப்த பத்தகோனாசனம் (supta baddha konasana)
தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, கால் முட்டிகளை மடக்கி, கால்களை பிருஷ்டம் வரை கொண்டு வர வேண்டும். பிறகு மெதுவாக மூச்சை இழுத்து, ஒரு கால் முட்டிகளைத் தளர்த்தி, கைகளை தரையோடு தலைக்கு மேலே உயர்த்த வேண்டும். அப்போது நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ளலாம். பின்னர், கைகளையும் கால்களையும் மெதுவாகப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். பின்னர் இடது புறமாகச் சுழன்று, கைகளை ஊன்றி எழுந்திருக்கலாம். இந்த ஆசனம் செய்வதால் நம் உடலும் மனமும் சுகமாகும்.
சாவாசனம் (Shavasana)
இந்த ஆசனத்திற்கு, முதலில் நாம் தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். பின்னர், உடம்போடு ஒட்டி உள்ளங்கைகள் மேலே இருக்குமாறு கைகளை வைக்க வேண்டும். மூச்சை மட்டும் சீராக இழுத்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான்.