Just In
- 1 hr ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 3 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆரோக்கியமும், அழகும் பெற பெப்பர்மின்ட் டீ குடிங்க...!
மின்ட் டீ என்று பரவலாக அழைக்கப்படும் பெப்பர்மின்ட் டீ புதினாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது மென்தா பிபெரிடா என்று அறிவியல் ரீதியாக பெயர் பெற்றுள்ளது. இந்த டீயில் கலந்துள்ள மென்தால் என்ற பொருள் தான் பெப்பர்மின்ட் டீயின் நறுமணத்திற்கு காரணமாக இருப்பதால், அதை குடிக்கும் ஒவ்வொரு முறைக்கும் புத்துணர்வை பெறுவீர்கள்.
பல்வேறு வகையான ஆரோக்கிய பலன்களை தருவதால் உலகெங்கிலும் இருக்கும் பலருக்கும் விருப்பமான பானமாக பெப்பர்மின்ட் டீ உள்ளது. இயற்கையான தேநீராகவும், காப்ஃபைன் இல்லாமலும் இருக்கும் பெப்பர்மின்ட் தேநீர், குடல் நோய், தலைவலிகள், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் குணங்களையும் கொண்டுள்ளது.
நல்ல ஆரோக்கியத்திற்கு தேவையான இயற்கையான இரத்த தூய்மையாக்கிகள்!!!
இவற்றிலிருந்து உடனடி நிவாரணமும், மென்மையும் பெறுவதற்கு ஒரு கப் மின்ட் டீ போதும். இந்த பெப்பர்மின்ட் தேநீரில் உள்ள முதன்மையான பொருளான மென்தால், காய்ச்சலால் அவதிப்படும் நோயாளிகளுக்கும் இதமூட்டும் மருத்துவ பொருளாக உதவுகிறது.
இப்போது பெப்பர்மின்ட் தேநீரின் ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகளைப் பார்ப்போம்.
செரிமான உறுப்புகளை சரிவர இயங்கச் செய்தல்
வயிற்றில் உள்ள தசைகளை மென்மையடையச் செய்யும் மூலிகையாக பெப்பர்மின்ட் உள்ளது. உணவை சாப்பிட்ட பின்னர், அஜீரணத்தால் வரும் வலியிலிருந்தும், வயிற்றில் உள்ள வாயுக்களால் வரும் வலியிலிருந்தும் நிவாரணம் பெறுவதற்கு பெப்பர்மின்ட் தேநீர் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உணவு வேகமாக செரிக்கவும் இது உதவுகிறது.
குமட்டல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு
பல்வேறு நபர்களும் கார், பஸ் அல்லது படகில் பயணம் செய்யும் போது குமட்டல் வருவதை உணருவார்கள். இவ்வாறு வாந்தி வருவதை தவிர்க்க ஒரு கோப்பை சூடான பெப்பர்மின்ட் தேநீர் குடித்தால் போதும். அதன் நறுமணத்தால் உங்களை புத்துணர்வூட்டுவதுடன், வயிறு தொடர்பான பிரச்சனைகளான வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் சிகிச்சை செய்ய உதவுகிறது.
முகப்பருவிற்கு சிகிச்சை செய்ய
பெப்பர்மின்ட் டீயில் உள்ள மென்தாலின் நறுமணம், முகப்பரு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. பெப்பர்மின்ட் இலைகள் குளிர்ச்சியான விளைவை தருவதால், அது அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் பருக்கள் மிகுந்த சருமம் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
சரும எரிச்சலை குறைத்தல்
மிகவும் உணர்வு மிகுந்த தோலில் எரிச்சல் மற்றும் அலர்ஜிகள் இருந்தால், ஒரு கொப்பை பெப்பர்மின்ட் தேநீரை குடித்து நிவாரணம் பெறலாம். மேலும், சரும பிரச்சனைகளான தடிப்புகள், காயங்கள், பூச்சி கடித்தல், அரிப்பு மிகுந்த தோல் மற்றும் தோல் எரிச்சல் ஆகியவற்றையும் குறைக்க பெப்பர்மின்ட் தேநீர் உதவுகிறது.
தோலின் எண்ணெய் பதத்தை குறைத்தல்
நமது தோலில் எந்த அளவுக்கு எண்ணெய் அதிகமாக உள்ளதோ, அந்த அளவிற்கு அழுக்குகளும், பாக்டீரியா தாக்குதல்களும் அதிகமாக இருக்கும். ஏனெனில் எண்ணெய் இயற்கையாகவே அழுக்குகளை கவர்ந்திழுப்பதால் இதனை தவிர்க்க முடிவதில்லை. பெப்பர்மின்ட்டில் உள்ள முதன்மையான பொருளான மென்தால் தோலிலுள்ள கொழுப்பு சுரப்பிகள் அதிகமான எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்துகின்றன.
முடியின் வளர்ச்சியை மேம்படுத்துதல்
பெப்பர்மின்ட் தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும். மேலும் இரத்த நாளங்களை மென்மைப்படுத்தி, மயிர்க்கால்களில் இரத்தம் பாய்ந்து செல்ல இந்த மூலிகை உதவுகிறது. தலைச் சருமத்தை தூண்டும் பொருளாக இருந்து செயல்படுவதால், முடியின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் பெப்பர்மின்ட் செயல்படுகிறது. பெப்பர்மின்ட்டுக்கு தலைமுடியின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்தும் குணம் உள்ளது.