Just In
- 21 min ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 1 hr ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 10 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Don't Miss
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஞாபக மறதி ஏற்படுவதற்கான விந்தையான 9 காரணங்கள்!!!
மறதி என்பதை நாம் பெரும்பாலும் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்வோம். சிலர் இயற்கையாகவே மறதியை கொண்டுள்ளனர் என கூறுவோம். அதே போல் சிலருக்கு கூர்மையான ஞாபக சக்தி இருக்கும். அனைவருக்குமே நல்ல ஞாபக சக்தி இருக்காது என்பது உண்மையே. இருப்பினும் பெரியவர்களுக்கு ஏற்படும் மறதிக்கான காரணத்தை லேசாக விடக்கூடாது. உங்கள் நினைவாற்றலின் மீது நீங்கள் கட்டுப்பாட்டை கொள்ள முடியாது. அதனால் நாள்பட நாள்பட, உங்கள் மறதியின் அளவு அதிகரித்து கொண்டே வருகிறது என்றால், மறதிக்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வயதாகும் போது அதற்கேற்ப உங்கள் மூளையும் தேயும். குழந்தைகளின் மூளை ஸ்பாஞ்சை போன்றது; தங்களை சுற்றியுள்ள அனைத்தையும் அவர்களால் ஈர்த்துக் அவைகளை தக்க வைத்துக் கொள்ள முடியும். இருப்பினும் உங்களுக்கு வயது ஏறும் போது, உங்கள் மூளையில் பல விஷயங்கள் குடியேறும். இதனால் மறதியும் வந்து விடும். அழுத்தம், தூக்கமின்மை மற்றும் ஹார்மோன்கள் போன்ற பிரச்சனைகளால் தான் மறதி ஏற்படுகிறது.
மருந்து மற்றும் போதை பொருட்கள் உங்கள் மூளையின் கூர்மையை இழக்கச் செய்யும். உங்கள் நினைவாற்றலின் அடிப்படையில், உங்களுக்கு வந்திருப்பது ஞாபக மறதியா அல்லது மூளைத்தேய்வா என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதனால் மறதியின் காரணங்களைப் பற்றி ஆழமாக தெரிந்து கொள்ளுங்கள்.
தூக்கமின்மை
பெரியவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது தூக்கமின்மை. தினமும் இரவில் 8 மணி நேர அமைதியான தூக்கம் கிடைக்கவில்லை என்றால் உங்கள் புத்தி தெளிவில்லாமல் இருக்கும். அதனால் விஷயங்களை மறந்து குழப்பத்தில் இருப்பார்கள். ஒரு கால கட்டத்தில், தூக்க இழப்பு மூளை தேய்வை உண்டாக்கி விடும்.
அழுத்தம்
உங்கள் மனமானது அழுத்தத்தில் அவதிப்படும் போது பாதிக்கப்பட போவது உங்கள் நினைவாற்றல் தான். அழுத்தம் இருக்கையில் உங்களுக்கு எதன் மீதும் கவனம் இருக்காது. அது நினைவாற்றல்களை மறைக்கும். இந்நிலை இல்லாமல் போனால் நினைவுகள் எல்லாம் தங்கக்கூடும்.
போதைப் பொருட்கள்
நீங்கள் அளவுக்கு அதிகமாக புகைப்பிடிப்பவரா? அல்லது போதைப்பொருட்கள் பயன்படுத்துவரா? அப்படியானால் உங்கள் ஞாபக சக்தியை அது வெகுவாக பாதிக்கும். அவ்வகை போதைப் பொருட்கள் உங்கள் மூளையை மெதுவாக செயல்படுத்த வைத்து சோம்பேறியாக்கிவிடும். இதன் விளைவாக, உங்களுக்கு அதிக மறதி ஏற்படும்.
ஹைபோதைராய்டு
உங்கள் தைராய்டு சுரப்பி இயல்பு நிலையில் செயல்படவில்லை என்றால், உங்கள் ஞாபக சக்தி பாதிக்ககூடும். இதனால் தூக்கம் கெட்டு போகும். உணர்ச்சி ரீதியான தொந்தரவுகளும் கூட ஏற்படலாம்.
கர்ப்பம்
கர்ப்ப காலம் என்றாலே குளறுபடியான நினைவாற்றல்களே. மூளையில் மூடுபனியை உண்டாக்கிவிடும் கர்ப்ப ஹார்மோன்கள். கர்ப்பிணி பெண்கள் வார்த்தைகளை, தேதிகளை மறப்பார்கள். மொத்தத்தில் கவனக் குறைவாக இருப்பார்கள். பொருட்களை எங்கே வைத்தார்கள் என்பதை அவர்கள் மறந்து போவதால், அதனை சுலபமாக தொலைத்து விடுவார்கள்.
ஆல்கஹால்
மதுபானம் அருந்தினால், ஹேங் ஓவர் போன பிறகும் கூட அது உங்களை தாக்கும். அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், தகவல்களின் மீதான உங்கள் கவனம் சிதறும். குடிக்கும் அளவு அதிகரிக்கையில் குறுகிய கால மறதியும் கூட ஏற்படலாம். ஒரு கட்டத்தில் எல்லாமே மறந்து போகும்.
மன அழுத்தம்
உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் உணர்ச்சி ரீதியான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டால், இயல்பற்ற முறையில் உங்களுக்கு மறதி உண்டாகலாம். உங்கள் மனது எங்கேயோ அலைந்து கிடப்பதால், ஆங்காங்கே சிலவற்றை மறந்து போவீர்கள்.
வயதாவது
உங்களுக்கு வயது அதிகரிக்கும் போது, உங்கள் சருமம் சுருக்கமடையும்; உங்கள் கண் பார்வை மங்கும்; உங்கள் மூளை அணுக்கள் மெதுவாகும். 17 வயதில் இருந்த புத்திக் கூர்மை 70 வயதில் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது வெறும் ஞாபக மறதியா அல்லது மூளை தேய்வா என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.
மருந்துகள்
சில வகையான மருந்துகள் உங்கள் மூளையை தெளிவில்லாமல் ஆக்கி விடும். சளிக்காக இருமல் மருந்தை கொஞ்சமாக குடித்தாலும் கூட அதனால் உங்களுக்கு கொஞ்சம் மறதி ஏற்படலாம். ஆனாலும் அழுத்தத்தை நீக்க உண்ணும் மாத்திரைகளும் ஹார்மோன் மாத்திரைகளும் ஞாபக மறதியை ஏற்படுத்தும்.