For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனைவரும் அவசியம் மாற்ற வேண்டிய சில அன்றாடப் பழக்கங்கள்!!!

By Boopathi Lakshmanan
|

விளம்பரங்கள் வெளியிடும் கைகளை சுத்தப்படுத்தும் திரவங்கள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் ஆகியவை சுத்தமானதாகவும் உங்களுக்கு நல்லது தருபவை எனவும் நீங்கள் நம்பி இருப்பீர்கள். ஆனால் நிபுணர்கள் இதை தவறு என்று கூறுகின்றனர்.

நாம் பழக்கப்படுத்தியுள்ள பல தினசரி காரியங்களில் பல் துலக்குவதும் ஒன்று. இதை நாம் ஒவ்வொறு உணவிற்கு பிறகும் செய்ய வேண்டியது அவசியம். இது நீண்ட காலம் ஆரோக்கியமான பற்கள் இருக்க துணை செய்யும். இதை எப்படி நாம் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவிற்கு பின் பல் துலக்குவது

உணவிற்கு பின் பல் துலக்குவது

பொதுவாக ஒவ்வொரு முறை உணவிற்குப் பின்னரும் பல் துலக்குவது சிறந்தது என்று எண்ணி நமது பற்களை பாதுகாக்க இதை செய்கிறோம். ஆனால் நமது தாய் கூறிய படியும் ஒரு நாளைக்கு இரு முறை அதாவது காலையிலும் இரவு படுக்கப் போவதற்கு பின்னரும் பற்களை துலக்குபவர்களும் உண்டு.

இது எப்படி இருந்தாலும் சாப்பிட்டவுடன் பற்களை துலக்குவது நல்லது கிடையாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வாயில் உள்ள உணவு பொருட்கள் உடைக்கப்பட்டு அது ஒரு வித அமிலத்தை விட்டுச் செல்கின்றன. இந்த அமிலம் பற்களின் மேல் பகுதியை வலுவிழக்கச் செய்கின்றது. இந்த சமயத்தில் நாம் பிரஷ் செய்தால் அது நமது எனாமலை அடியோடு எடுத்து விடும். இதனால் பற்கூச்சம் எற்பட வாய்ப்புகள் உள்ளன.

இதற்கு பதிலாக சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்த பின்னர் பற்களை சுத்தம் செய்தால் இத்தகைய தீமைகளை தவிர்க்க முடியும். அப்படி உடனடியாக வாயில் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டவுடன் நீக்க நினைத்தால் சாப்பிட்டு வாயை கொப்பளித்தால் போதும்.

கையை சுத்தம் செய்யும் சானிடைசர் பயன்படுத்துவது

கையை சுத்தம் செய்யும் சானிடைசர் பயன்படுத்துவது

எப்போதும் கைகளை சுத்தமாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சானிடைசர் பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு உண்டா? மருத்துவமனைகளில் உள்ள சானிடைசர் பாடில்களை தொட்டு அதை பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் நீங்கள் உங்களுக்கே தீங்கு விளைவித்துக் கொள்ளுகிறீர்கள்.

கிருமிகளை கொல்லுவதற்கான எளிய வழியாக கைகளை சுத்தப்படுத்தும் திரவப் பொருளை பயன்படுத்துகின்றோம். ஆனால் அதை சரியாக பயன்படுத்துவது முக்கியமானது. அமெரிக்காவில் உள்ள காலிபோர்னியா டேவிஸ் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி படி இந்த சானிடைசர்களில் டிரைகிலோசான் என்ற ரசாயனம் கலந்துள்ளது. இதை நாம் கைகளில் தடவும் போது நமது சருமம் அதை எளிதாக ஈர்த்துக் கொள்கிறது. இதனால் நமது இரத்தத்தில் கலக்கும் இவை தசைகளின் ஒருங்கிணைப்பை தடை செய்கிறது. நாம் இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் குழந்தையின்மை, இதய கோளாறுகள் மற்றும் சீக்கிரம் வயதிற்கு வருதல் ஆகிய பிரச்சனைகள் வரக்கூடும். இத்தகைய வழிகளை தவிர்த்து நாம் முன்பு செய்வது போல் எப்போதும் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பது மிகவும் சிறந்த வழியாகும்.

எடை குறைக்கும் முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

எடை குறைக்கும் முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

நல்ல உடற்பயிற்சிகளாக ஒடுவது, நடப்பது அல்லது நீச்சல் ஆகியவை என்று நாம் கருதுகின்றோம். இதை வெய்ட்ஸ் போடுவதை காட்டிலும் மிகவும் சிறந்தது என்று நினைதிருப்போம். ஆனால் நாம் எப்போதும் ஓடுவது, நடை பயிற்சி மற்றும் நீச்சல் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தாமல் வெய்ட்ஸ் போடுவதிலும் கவனம் செலுத்துவது எடை குறைப்பதில் சிறந்த வழியாக உள்ளது.

நமது உடம்பு நாம் பயிற்சி செய்யும் செயல்களுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு கலோரிகளை எரிய விடாமல் தடுக்கிறது. சத்தியஜித் சௌராசியா என்னும் பிரபல பயிற்சியாளர் கூறுகையில் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது நாம் பொதுவாக செய்யும் உடற்பயிற்சியுடன் வெய்ட்ஸ்சையும் சிறிதளவு சேர்த்துக் கொள்வது எடையை சீக்கிரம் குறைக்க உதவுகிறது. அது மட்டுமில்லாமல் தசைகளை மேம்படுத்தி அழகான உடல் அமைப்பையும் அமைத்துத் தருகின்றது. கார்டியோ மற்றும் சக்தி தரும் இத்தகைய இரு வகை பயிற்சிகளை மேற்கொள்ளும்போது நமது இதய துடிப்பை மேம்படுத்துவதோடு முழு உடலையும் பயிற்சியில் ஈடுபடுத்துகிறது. இது எப்போதும் உடலை நாம் செய்யும் பயிற்சியின் முலம் கலோரிகளையும் பெருமளவில் குறைக்க உதவுகின்றது.

ஒரு வேளை நீங்கள் ஜிம் போன்ற இடங்களுக்கு செல்ல விரும்பவில்லை என்றால் உங்களிடம் இரு தம்பெல்ஸ்கள் இருந்தால் போதும். இத்தகைய பயிற்சிகளை முதன்முறையாக செய்பவர்களுக்கு தங்கள் உடம்பின் மேற்பகுதியை பயிற்றுவிப்பதற்கு இது சிறந்த வழியாகும் என்று சௌராசியா கூறியுள்ளார்.

அழகு சாதனங்களை மாற்றிக் கொண்டே இருப்பது

அழகு சாதனங்களை மாற்றிக் கொண்டே இருப்பது

ஒரு பிரபல நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய ஒரு அழகு சாதனப் பொருளை நீங்கள் உடனடியாக வாங்கி அதை பயன்படுத்த நினைப்பீர்கள். இதை செய்யும் போது நீங்கள் ஏற்கனவே வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொருளை புறந்தள்ளி விடுகிறீர்கள். இதனால் இந்த பொருள் மட்டுமல்ல நமது பணமும் பெருமளவில் வீணடிக்கப்படுகின்றது. இது தவறு தானே!

சருமப் பராமரிப்பு நிபுணர் டாக்டர். மனோகர் சோபானி கூறுகையில், நமது சருமத்தின் பி.எச் அளவு 5.5 தான். இந்த அளவை அழகு சாதனங்கள் தயார் செய்யும் நிறுவனங்கள் பயன்படுத்துவதில்லை. இத்தகைய பொருட்களை மக்கள் பயன்படுத்தும் போது சிவப்பு தண்டுகள், தோல் எரிச்சல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தற்போது பெரும்பாலான சோப்புகளில் கூட பி.எச் சின் அளவு 5.5-ஐ விட அதிகமாகத்தான் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இவை சருமத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய பொருட்களாகும்.

அவ்வப்போது நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களை மாற்றிக் கொண்டே இருப்பது தவறு. இதனால் சருமப் பிரச்சனைகள் நிச்சயம் வரும். அதை தீர்ப்பதற்காக மற்றொரு பொருளை தேடுவது நமக்கு உதவாது. இவைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக தரமான மற்றும் நம்பத்தக்க நிறுவனங்கள் தயார் செய்யும் பொருட்களை, அதில் உள்ள பி.எச் எண்ணெய் பொருளின் பின்புறம் பார்த்து வாங்கி பயன்படுத்தவும்.

அணியும் காலணிகள்

அணியும் காலணிகள்

ஹீல்ஸ் போடுவது முழங்கால் மற்றும் கணுக்கால்களை பாழ்படுத்தும் என்றும், தட்டையான செருப்புகளை அணிவது எந்த வித பாதிப்பையும் கால்களுக்கு ஏற்படுத்தாது என்று நீங்கள் நினைத்திருக்கலாம். இந்த எண்ணம் தவறா? பார்பபோம்!

கால் மற்றும் நடை ஆலோசகர் சைத்தன்யா ஷா கூறுகையில் பிளிப் பிளாப் அணிவது கால்களுக்கு எந்த வித வடிவத்தையும் அதற்கேற்ற கட்டமைப்பையும் தருவது கிடையாது. நாம் பொதுவாக நடக்கும் போது நமது விரல்கள் பிடிப்பாக இருந்து நமது நடையை கட்டுப்படுத்தி சம நிலைக்கு கொண்டு வருகின்றன. ஆனால், நாம் கால்களை மேலே தூக்கும் போதும் கீழே இறக்கும் போதும் எந்த வித பிடிப்பும் இல்லாமல் செய்வதால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். இது இயற்கைக்கு முரணாக இருப்பதால் தடியான தசை வளர்ச்சி அதாவது பிளான்டர் பேஸ்சைட்ஸ் என்ற நோய் வர அதிக வாய்ப்புகள் உள்ளன.

பிளிப் பிளாப்களை வீட்டில் அணிந்து கொண்டு வெளியே செல்லும் போது வேறு காலணிகளை பயன்படுத்தலாம்.

பாட்டில் தண்ணீரை குடிப்பது

பாட்டில் தண்ணீரை குடிப்பது

பாட்டில் தண்ணீர் அல்லது பதப்படுத்தும் முறைகளை மேற்கோண்டு பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரில் எந்த வித கனிமங்களும் கடையாது. அவற்றை சுத்திகரிக்கும் போது, அந்த தண்ணீரின் கனிம சத்துக்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு விடுகின்றன. வெயில் அதிகம் உள்ள இடங்களில் இந்த தண்ணீரை அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் மக்களின் உடலுக்கு, நாளடைவில் தேவையான மக்னீசியம், பொட்டாசியம், சிலிகா, சல்பேட் ஆகிய கனிமங்களை சேர விடாமல் செய்கின்றன. இந்த கனிமங்கள் இல்லாத காரணத்தால் திசு சீரமைப்பு மற்றும் சக்தி தருவது போன்ற செயல்களை செய்வது தடைபடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Daily Habits We Need To Quickly Change

Turns out several of the habits we have cultivated over the years, from being wary of germs to brushing teeth after every meal are not only unnecessary but could actually rob us of good health in the long term. Read on to find out how.
Desktop Bottom Promotion