For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல்லிடுக்கு நூலை எதற்கு அவசியம் பயன்படுத்த வேண்டும்?

By Super
|

தினசரி பல்லிடுக்கு நூலை (Floss) பயன்படுத்தி பல் சுகாதாரத்தை பேணுவது இன்றியமையாததாகும். இது பல்லின் மீது படர்ந்து இருக்கும் பற்காறையினால் உண்டாகும், பல் ஈறு வீக்கம் மற்றும் பசை நோய் போன்றவற்றை நீக்குகிறது. ஒரு பல் மருத்துவர் அல்லது உடல் நலவியல் வல்லுநர் உதவியுடன் பற்காறையை வழக்கமாக தூய்மைப்படுத்துதலால், அது மேலும் பற்காறை உண்டாவதை தடுக்கிறது. பல்லிடுக்கு நூலை பயன்படுத்துவதால் கூட பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வருவதை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும் ஒவ்வொரு நாளும் பல்லிடுக்கி நூலை பயன்படுத்தி ஒருவருடைய ஆரோக்கியத்தையும் மற்றும் புன்னகையையும் மேம்படுத்த முடியும்.

முக்கியத்துவம்:

மக்கள் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது பல்லிடுக்கு நூலை பயன்படுத்தி, பற்களில் இருக்கும் உணவு துகள்கள் மற்றும் பற்காறையையும் நீக்கலாம். மேலும் பல் துலக்கி சென்றடைய முடியாத இடங்களிலும் கூட இதனை உபயோகப்படுத்த முடியும். பற்காறை என்பது பொருட்களில் ஒட்டக்கூடிய படலம் ஆகும். அதில் பற்சிதைவுக்கு காரணமான பாக்டீரியாவை கொண்டிருக்கிறது. மேலும் பல்லைச் சுற்றி உண்டாக்கும் ஈறுகளின் (பல் ஈறு வீக்கம்) அழற்சியையும் , பின்னர் பல்லைச் சுற்றி நோய்களையும் ஏற்படுத்துகிறது.

Why Should People Floss?
எச்சரிக்கை:

அதிக ஆபத்தான பாக்டீரியாக்கள் பற்காறையில் ஒட்டிக் கொண்டு நச்சுகளை உற்பத்தி செய்ய தொடங்குகிறது. நச்சுகள் ஈறுகளில் எரிச்சல், பல் ஈறு வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இந்த பல் ஈறு வீக்கத்தினால், நச்சுகள் பற்களுக்கு ஆதரவு கொடுக்கும் எலும்புகளையும் தாக்குகிறது. இதனால் எலும்புகள் வலிமையை இழப்பதோடு, தளர்வான பற்கள் கொண்டிருப்பதோடு, பற்களையும் இழக்கின்றோம்.

பரிசீலனைகள்:

பல்லிடுக்கு நூலை பயன்படுத்துவதால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல்லைச் சுற்றி வீக்கம் மற்றும் பல் ஈறு வீக்கத்தினாலும் கூட இதயகுழலிய நோய் ஏற்படுகிறது. ஏனெனில் இது உடலில் தொடர்ச்சியான அழுத்தம் ஏற்படுத்துகிறது. பக்கவாதம் நோயாளிகளின் மீது மேற்கொண்ட ஒரு ஆய்வில், பல்லைச் சுற்றிய கடுமையான வீக்கத்தினால் குறிப்பிடத்தக்க பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

தடுப்புகள்:

பல்லிடுக்கு நூல் அழகு தருவதிலும் உதவியாக உள்ளது. அதுவும் இதனைப் பயன்படுத்துவதால், அசிங்கமான பற்காறை ஏற்படுவதை தடுக்க முடியும் மற்றும் வாயில் ஏற்படும் தூர்நாற்றத்தையும் தடுக்க முடியும்.

வகைகள்:

பல்வேறு வடிவங்களில் பல்லிடுக்கு நூல்கள் கிடைக்கின்றன. அதுவும் மெழுகினால் பூசப்பட்ட மற்றும் மெழுகினால் பூசப்படாத, பரவலான மற்றும் வழக்கமான வடிவங்களிலும் காணப்படுகிறது. மேலும் புதினா மற்றும் இலவங்கப்பட்டை என்ற சுவைகளிலும் கிடைக்கிறது. இவை அனைத்தும் ஒரே வேலையைத் தான் செய்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது ஒருவரின் பற்களுக்கு இடையிலான இடைவெளி பரந்து இருந்தால், அதற்கேற்றால் போல் பல்லிடுக்கு நூலை பயன்படுத்த வேண்டும். மிக முக்கியமான விஷயம் என்னவெனில் பொருட்களை தேர்வுச் செய்து அதை தினசரி பயன்படுத்த வேண்டும்.

நீர் எடுப்பான்கள் பல்லிடுக்கு நூலைகள் போன்று திறமையாக இருப்பதில்லை. ஏனெனில் அவை பற்காறைகளை நீக்குவதில்லை.

குறிப்பு:

பல்லிடுக்கு நூலை மிக மெதுவாக பற்கள் மற்றும் ஈறுகளுக்கிடையிலும் தேய்க்கப்பட வேண்டும்.

English summary

Why Should People Floss? | பல்லிடுக்கு நூலை எதற்கு அவசியம் பயன்படுத்த வேண்டும்?

Daily flossing is an essential element of proper dental hygiene. It removes plaque, which can turn into tartar and cause gingivitis and gum disease. Regular cleanings by a dentist or hygienist help reduce tartar build-up. Studies have also shown that flossing even prevents strokes and heart attacks. Treat your teeth to flossing each day to improve your health and smile.
Desktop Bottom Promotion