Just In
- 4 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 5 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 6 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 6 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த 2 பொருட்கள் உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் புழுக்களை வெளியேற்றும் எனத் தெரியுமா?
இங்கு எந்த 2 பொருட்கள் உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் புழுக்களை வெளியேற்றும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
உடலில் இயற்கையாகவே கொழுப்புக்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த கொழுப்புக்கள் தான் ஆற்றலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எப்போது ஒருவரது உடலில் உணவுகள் மூலம் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போதே உடலின் இயக்கம் பாதிக்கப்படுவதோடு, ஆற்றலும் குறைய ஆரம்பிக்கும்.
ஒருவருக்கு மன அழுத்தம் மற்றும் வயிற்றில் புழுக்களின் அளவு அதிகமாக இருந்தால், உணவுகளின் மீது ஆவல் அதிகரிக்கும். எப்போது ஒருவர் அதிகளவு இனிப்பு உணவுகளை உட்கொள்கிறாரோ, அவரது உடலில் சளியின் அளவு அதிகரித்து, புழுக்கள் பெருகுவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும்.
இந்த சூழ்நிலையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளும் பெருக ஆரம்பிக்கும். எனவே ஒவ்வொருவரும் தங்களது உடலில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைத்து, புழுக்களின் பெருக்கத்தைக் குறைக்கும் முயற்சியில் அடிக்கடி ஈடுபட வேண்டியது அவசியம். இக்கட்டுரையில் அதற்கான ஓர் அற்புத வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
ஆளி விதை - 100 கிராம்
உலர்ந்த கிராம்பு - 10 கிராம்
செய்முறை:
முதலில் ஆளி விதை மற்றும் உலர்ந்த கிராம்பை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
ஒரு டம்ளர் நீரில் 2 டேபிள் ஸ்பூன் அரைத்த பொடியை சேர்த்து கலந்து தினமும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் காலை உணவின் போது ஒரு டம்ளர் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
குறிப்பு
இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, தொடர்ச்சியாக 3 நாட்கள் இந்த பானத்தைக் குடிப்பதோடு, 3 நாள் இடைவெளி விட்டு, பின் மீண்டும் 3 நாட்கள் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் முதல் ஒரு மாதத்தில் உடல் சுத்தமாகவும், நச்சுக்களின்றியும், புழுக்களின்றியும் இருப்பதை உணரலாம்.
மனதில் கொள்ள வேண்டியவை:
எப்போதும் உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடும் போது, குடிக்கும் நீரின் அளவை அதிகரிப்பதோடு, ஜூஸ்களை அடிக்கடி பருக வேண்டும். அதோடு ஜங்க் உணவுகள் மற்றும் ஃபாஸ்ட் புட் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.