Just In
- 1 min ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 1 hr ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 10 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Don't Miss
- News இப்போ தும்முனா சரியா இருக்கும்..! எடப்பாடியா? திமுகவா? ஓபிஎஸ் டீமிலிருந்து எஸ்கேப்பாகும் புகழேந்தி?
- Movies ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பருவம் அடையாத பெண் குழந்தைகளுக்கு கை மேல் பலன் தரும் வெந்தய லேகியம் !!
கால தாமதமாகியும் பூப்பெய்யாத பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை பலம் தரும் வகையிலும் போஷாக்கு தரும் வகையிலும் செய்யப்படும் வெந்த்ய லெகியம் தயாரிக்கும் முறைப் பற்றி இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது.
இப்போதெல்லாம் 10 வயதிலேயே பெண் பிள்ளைகள் பருமடைந்துவிடுகிறார்கள். அதிகபப்டியான கொழுப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்களே காரணமாகும். ஆனாலும் சில பெண்கல் 16 வயதை தாண்டியும் பருமடையாமல் இருப்பதுண்டு.
ஏதாவது பிரச்சனை இருந்தால் இவ்வாறு உண்டாகும். கை வைத்தியம் முய்ற்சி செய்து பார்த்து அப்படியும் பருவம் அடையவில்லையென்றால் மருத்துவரை நாடுவது முக்கியம்.
போதிய போஷ்க்கு இல்லாமல் வத்தலாக இருந்தாலும் பூப்பெய்தல் நடக்காமல் போகும். அந்த மாதிரி பாதிப்புகளுக்கு வெந்தய லெகியம் அருமையான மருந்தாகும். அதனை எப்படி செய்வது என பார்க்கலாம்.
வெந்தயம் ஊற வைக்கவேண்டும் :
இரவில் ஒரு பிடி வெந்தயத்தை எடுத்து, நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஊறிய அந்த வெந்தயத்தை அம்மி அல்லது கல்லுரலில் அரைத்து விழுதாக்கிக் கொள்ளுங்கள்.
கல்கண்டு மற்றும் வெண்ணெய் சேர்க்க வேண்டும் :
இந்த விழுது எவ்வளவு இருக்கோ அதே எடையளவுக்கு வெண்ணெயும், இனிப்பிற்கு தகுந்த மாதிரி கல்கண்டும் எடுத்துக் கொள்ளுங்கள். குறைந்த தீயில் வாணிலியில் இந்த மூன்றையும் சேர்த்து கிளற வேண்டும்.
திராட்சை போட வேண்டும் :
இதோட கைப்பிடியளவு காய்ந்த திராட்சையும் போடுங்கள். வெண்ணெய் உருகி, நெய் வாசனை வர்ற சமயத்தில் லேகியத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.
லேகியம் ரெடி :
லேகியம் கெட்டியாகி கமகமனு மணமா இருக்கும். ஆறினதும் ஒரு பாட்டில்ல போட்டு வச்சிக்கிட்டு தினமும் காலைல ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டையைச் சாப்பிடக் கொடுத்தால், சீக்கிரமே பொண்ணு புஷ்டியாகி பருவத்துக்கு வந்துடும்.
புஷ்டியாகவும் சாப்பிடலாம் :
வத்தலும் தொத்தலுமா இருப்பவர்கள் மற்றும் பலவீனமான பெரியவர்களுக்கு இந்த வெந்தய லேகியம் பூரிப்பை தரும். உடலுக்கும் பலம் தரும்.