Just In
- 13 min ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- 3 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 9 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 9 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
Don't Miss
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மார்பக புற்று நோயைப் பற்றி பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை !!
155,000 பெண்கள் மார்பக புற்றுநோயால் புதிதாக கண்டறியப்படுகிறார்கள்.இதில்,70,000 பெண்கள் இறக்கிறார்கள். இந்தியாவில் கர்ப்பப்பைவாய் புற்றுநோயை அடுத்து இந்த புற்றுநோயால்தான் பெண்கள்பாதிக்கப்படுகிறார்கள்
மார்பக புற்று நோய் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் புற்று நோய்களில் ஒன்று. இதனை ஆரம்ப நிலையிலேயே கவனித்துவிட்டால் சிரமமே இல்லாமல் எளிதாய் குணப்படுத்திவிடலாம்.
மற்ற புற்று நோய்களைப் போள் காலதாமதமாக இதன் அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. ஆரம்பத்திலேயே தெரிய வந்துவிடும். எனவே அவ்வப்போது நீங்களாகவே பரிசோதனை செய்வது மிகவும் நல்லது. அவ்வகையில் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை கீழே.
சுய பரிசோதனை எப்படி செய்து கொள்வது ?
மார்பை கழுவி லேசாக சோப்பை போட்டு அதன் பின் மார்பை பரிசோதித்தால் சிறு கட்டிகள் இருந்தாலும் எளிதாய் கையில் அகப்படும். எனவே வீட்டிலேயே செய்யும்போது இவ்வாறு செய்து பாருங்கள்.
மார்பில் சிறு கட்டிகள் :
உங்கள் மார்பை அழுத்தும் போது உருண்டையாக சிறி சிறு கட்டிகள் தென்படுகிறதா? மாதவிடாய் சமயத்தில் இவ்வாறு சிறு உருண்டைகள் தென்படுவதுண்டு.
அதனை குழப்பிக் கொள்ளாதீர்கள். எப்ப்பதும் இருந்தால் அவசியம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
கடினமாக இருந்தால் :
மார்பகம் வழக்கத்திற்கு மாறாக தடிமனாக கெட்டியாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
மார்பக வலி :
மார்பகத்தில், தாங்க முடியாத வலி இருந்தால் உடனடியாக கவனியுங்கள். சிலருக்கு மாதவிடாய் சமயத்தில் வரும். அது சாதரணமானதே. ஆனால் வலி தொடர்ந்தால் உடனே கவனிக்கவும்.
காம்பில் நீர் வடிகிறதா?
மார்பக காம்பில் மஞ்சள் போன்ற திரவமோ அல்லது நீரோ வடிந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
சிலருக்கு குழந்தை பிறந்து சில வருடங்களுக்கு மார்பக காம்பில் இது போல் திரவம் வரலாம். ஆனாலும் பரிசோதித்திக் கொள்வது முக்கியம்
சரும எரிச்சல்?
மார்பகத்தை சுற்றிலும் சரும எரிச்சல் இருந்தாலும் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். ஏனென்றால் மார்பகத்தில் உண்டாகும் எரிச்சலும் புற்று நோயின் முக்கியமான அறிகுறியாகும்.