Just In
- 6 min ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 43 min ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 1 hr ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 5 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
Don't Miss
- News பாமக டி-ஷர்ட் போட்ட 4 பேர்.. அம்பேத்கர் சிலை குண்டு வீச்சு விவகாரத்தில் வன்னி அரசு பரபரப்பு ட்வீட்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Movies தனுஷை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.. அய்யய்யோ ரஜினி உறவினர் என்ன இப்படி சொல்லிட்டாரு
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நுரையீரல் புற்று நோயை தடுக்கும் ஒரு அருமையான பானம்!!
பிடிப்பதால் ஏற்படும் மிகக் கொடிய நோய்களுள் ஒன்று தான் நுரையீரல் புற்றுநோய். புகையிலையில் உள்ள அதிகப்படியான நச்சுப் பொருட்கள் தான் இதற்குக் காரணம்.
மனித உடலுறுப்புகளில் முக்கியமான ஒன்று நுரையீரல். புகைப்பிடிப்பதால் ஆக்ஸிஜனோடு சேர்த்து நச்சுப் பொருட்களான நிக்கோடின், தார் மற்றும் காட்மியம் போன்றவையும் உள்ளே சென்று நுரையீரலின் உள்ளே தங்கிவிடும். இவையெல்லாம் அதிகமாக சேரும் போது நுரையீரல் கருப்பாக மாறுகிறது.
அப்படிப்பட்ட நச்சுப் பொருட்களில் இருந்து உங்களது நுரையீரலிலை காப்பாற்றி, நுரையீரல் புற்றுநோயில் இருந்தும் காப்பாற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான ஜூஸை தயாரித்து குடித்துப் பாருங்கள்.
இப்போது அந்த ஜூஸ் செய்யத் தேவையான பொருட்களையும், எப்படி செய்வது என்பதனையும் பார்ப்போம் வாருங்கள்...
இஞ்சி
ஒரு பெரியத் துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சியில் நோய் தொற்றுகளை நீக்கும் பண்பும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அதிக அளவில் உள்ளது.
மஞ்சள் தூள்
2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் தேவை இந்த ஜூஸ் செய்வதற்கு. மஞ்சள் தூளில் மிக முக்கியமான குர்குமின் உள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் நோய் தொற்றுகளை நீக்கும் பண்பு உள்ளது. இது பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கக்கூடியது.
வெங்காயம்
4 வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஓரளவு பெரிய வெங்காயமாகப் பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தில் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் அதிகம் இருக்கிறது. இவை நுரையீரலில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றிவிடும்.
சர்க்கரை
இந்த ஜூஸ் செய்ய 250 கிராம் சர்க்கரை தேவை.
தண்ணீர்
ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
செய்முறை :
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.
அதில் நறுக்கிய இஞ்சியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடுங்கள். அடுத்ததாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து சற்று நேரம் கொதிக்க விடுங்கள்.
பின்னர் மஞ்சள் தூளை சேர்த்து மிதமான தீயில் அடுப்பில் வைத்திருங்கள். ஊற்றிய நீரின் அளவு பாதியாக குறைந்ததும் அடுப்பை நிறுத்தி விடுங்கள். இறுதியாக அந்த ஜூஸை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் பதப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.