Just In
- 20 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 37 min ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 3 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
Don't Miss
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கருப்பை புற்று நோயின் அறிகுறிகளை பற்றி தெரிந்திருக்கிறீர்களா?
நோயில்லாமல் வாழ்வதுதான் பெரிய சொத்து. புற்று நோய் என்பது பரவலாக பரவிக் கொண்டிருக்கிற நோய்.
முந்தைய காலம் போலல்லாமல் இன்று நிறைய மருந்துகள், சிகிச்சைகள் இருந்தாலும் நோய் கட்டுப்படாமல் வளர்ந்து கொண்டுதானிருக்கிறது.
நமது
வாழ்க்கை
முறை
முற்றிலும்
மாறியிருக்கிறது
உடல்
உழைப்பு
என்பது
மிகவும்
குறைவு.
எல்லாவ்ற்றிற்கும்
இயந்திரங்கள்
கண்டுபிடித்து
நமது
உழைப்பை
தொலைத்துவிட்டோம்.
கருப்பை புற்று நோய் இதனால்தான் உண்டாகிறது என சொல்ல முடியாது. இது சத்தமில்லாமல் வந்து கொல்லும் உயிர் கொல்லி என்பதை மருத்த உலகம் ஒத்துக்கொள்கிறது. ஆனால் அதனைப் பற்றி விழிப்புணர்வை பெற்றிருப்பது அவசியம்.
கருப்பை புற்று நோயின் அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள். சின்ன அறிகுறியையும் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், புற்று நோயின் தீவிர தாக்குதலிலிருந்து விடுபடலாம்.
அடிவயிறு வலி:
இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
ஏனென்றால் 80/100 புற்று நோயாளிகளுக்கு இடுப்பு அடிவயிற்றுப் பகுதியில் தாங்க முடியாத வலி உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பசியின்மை :
பசியின்மை. குறைவாக சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போலிருந்தால் இதுவும் கருப்பை புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம். பெரும்பாலன கருப்பை புற்று நோயாளிகள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.
அடிக்கடி சிறு நீர் செல்லுதல் :
அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு. அவசரமாய் வருவது போல் உணர்வு என எப்போதும் காணப்பட்டால் அதுவும் கருப்பை புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
சாதரண சிறு நீர் தொற்று நோய்க்கும் , இதற்கும் குழப்பிக் கொள்ளாதீர்கள். அதிக நீர் குடித்தால் அல்லது சிகிச்சையினால் சிறு நீர் தொற்று குணமாகிவிடும். ஆனால் இது குணமாகாது.
அதிக மன அழுத்தம் :
மன அழுத்தம் அளவுக்கு அதிகமாக காணப்படும். மற்ற புற்று நோயாளிகளுக்கு வருவது போல கருப்பை புற்று நோயாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மன அழுத்தம் , பதட்டம், ஆகியவை காணப்படும்.
வயிறு பாதிப்பு :
வயிறு பாதிக்கும். வயிற்று வலி, உப்புசம், வயிற்றுப் போக்கு ஆகியவை உண்டாகும். மலச்சிக்கலும் அடிக்கடி உண்டாகும். மருந்துக்கள் மலச்சிக்கலுக்கு கொடுத்தாலும் அவை குணமாகாமல் தொடர்ந்தபடி அவஸ்தையை தரும்.
முதுகு வலி :
முதுகு வலி கருப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டாகும். குறிப்பாக கீழ் முதுகில் வலி அடிக்கடி உண்டாகும்.
உறவின் போது வலி :
கருப்பை பிறப்புறுப்பின் பாதைக்கு அருகிலேயே இருப்பதால் உடலுறவு கொள்ளும்போது தாங்க முடியாத வலி உண்டாகும்
முறையற்ற மாதவிடாய் :
மாதவிடாய் மாறி மாறி, முறையில்லாமல் வருவது, அடிவயிறு வீங்குதல் ஆகியவை இன்னபிற அறிகுறிகளாலும்.
வரும் முன் காப்பது நல்லது. வந்த உடனேயே காப்பது இன்னும் நல்லது.
மருத்துவ பரிசோதனை :
ஆகவே சின்ன அறிகுறிக்கும் உங்கள் மனதை சமாதானம் செய்து கொள்ளாமல் என்ன ஏது என்று உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதனால் வரவிருக்கும் ஆபத்தை தடுத்த நிறுத்த உங்களால் முடியும்.